Friday 28 March 2008

பிறப்பு


கருவறையில் விதையாகி
கர்ப்பத்தில் வேர் பிடித்து
இரண்டணுக்கள் ஒன்றாகி
ஓரணுவும் பலவாகி


நஞ்சில் அமுதுண்டு
நீரில் படுக்கையிட்டு
கண்ணிருந்தும் பாராமல்
காதிருந்தும் கேளாமல்
நாவிருந்தும் சுவையாமல்


ஐயிரண்டு திங்கள்
அருந்தவம் தானிருந்து
கால் முளைத்து
கை முளைத்து
மகனாகி மகளாகி


உயிர் பிளக்கும் வலி அடுத்து
பனிக்குடம் தான் உடைத்து
அழுத படி மூச்செடுத்து
தனியே தானாகி
தொப்புள் கொடி பிரியும் வரை.........

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்


பூங்குழலி

Tuesday 25 March 2008

அழாதே


அழும் குழந்தை
அம்மா சொன்னாள்
இன்னும் சத்தமாய் அழு -
சில்லறை சேரட்டும்


பூங்குழலி

பசி




இறைவா நன்றி .
இன்றைக்கு உணவு தந்தாய்
நாளையேனும் -
ஆளுக்கொரு இலை கொடு


பூங்குழலி







Saturday 22 March 2008

கடவுள் வாழ்த்து


பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்து உனக்கு நான் தருவேன்
கோலஞ் செய் துங்கக்
கரிமுகத்து தூமணியே -நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

பாரதிக்கு வணக்கம்





தேடிச் சோறு நிதந் தின்று-பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று -பிறர்
வாடப் பல செயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ