Friday 28 March 2008

பிறப்பு


கருவறையில் விதையாகி
கர்ப்பத்தில் வேர் பிடித்து
இரண்டணுக்கள் ஒன்றாகி
ஓரணுவும் பலவாகி


நஞ்சில் அமுதுண்டு
நீரில் படுக்கையிட்டு
கண்ணிருந்தும் பாராமல்
காதிருந்தும் கேளாமல்
நாவிருந்தும் சுவையாமல்


ஐயிரண்டு திங்கள்
அருந்தவம் தானிருந்து
கால் முளைத்து
கை முளைத்து
மகனாகி மகளாகி


உயிர் பிளக்கும் வலி அடுத்து
பனிக்குடம் தான் உடைத்து
அழுத படி மூச்செடுத்து
தனியே தானாகி
தொப்புள் கொடி பிரியும் வரை.........

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்


பூங்குழலி