Thursday 26 June 2008

அறியாமை ??????????????

நான் மருத்துவம் இறுதியாண்டு படிக்கும் பொது நிகழ்ந்தது இது .ஐம்பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ,மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் .
மார்பகம் அரித்துப் போய் ,புண்ணாகி ,சீழ் வடிந்து ,புழுக்கள் வைத்து பார்க்கவே அத்துணை அருவருப்பாக இருந்தது .துர்நாற்றம் வேறு .

பல கேள்விகள் இன்று நினைக்கும் போதும் என் மனதில் தோன்றும்
இது உடனடி சிகிச்சை தேவைப் படும் விஷயம் கூடவா அத்தனை நாள் தெரியாமல் போயிருக்கும் ?
கூட இருந்தவர்கள் இதை கவனியாமல் விட்டது எப்படி ?
புழுக்கள் சேரும் வரை அந்த வேதனையை அவர் எவ்வாறு பொறுத்துக் கொண்டிருந்தார் ?
நான் பார்த்து இது போன்ற ஓரிருவரை ,இது போல் எத்தனையோ பேர் மருத்துவமனைகளை தொடாமல் மடிந்து கொண்டிருக்கிறார்கள் .