Saturday 19 July 2008

பாட்டி வீடு




மர ஏணியில் ஏறிப் போனால் மச்சி வீட்டுக்கு போகலாம் .இதில் இரண்டு அறைகள் இருந்தன .ஒரு அறையில் நெல் மூட்டைகள் அடுக்கப் பட்டிருக்கும் ,இன்னொரு அறையில் பல புத்தகங்கள் இருக்கும் .இவற்றை யாரும் அதிகம் பயன்படுத்தி நான் பார்த்ததில்லை .நெல் மூட்டைகளுக்கு நடுவே ஒரு ஊஞ்சல் இருந்ததாக ஞாபகம் .அந்த அறை பெரிதாகவும் இருள் அடைந்தும் உள்ளே சென்றதும் ரொம்ப பயமாகவே இருக்கும் .அதுவும் அந்த மர ஏணியில் சென்றால் கேட்கவே வேண்டாம் .வெளியில் இருந்தும் இதற்கு ஒரு படிக்கட்டு உண்டு .அதில் ஏறி சென்ற நாட்களில் கொஞ்சம் பயம் குறைந்ததாக உணர்ந்திருக்கிறேன் நான் .
இதற்கு மேல் ஒரு மொட்டை மாடியும் அதற்கு ஒரு மர ஏணியும் உண்டு .பயந்து போய் இதில் நான் அதிகம் ஏறியதில்லை என்று சொல்லித் தெரிய வேண்டுமா ?