Thursday 28 August 2008

புது காலர் டியூன்

எச் .ஐ.வி நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இப்போது ஒரு புது காலர் டியூன் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது .இது "காண்டோம் காண்டோம் "
என்று ஒலி எழுப்புமாம் .

சரி ,ஏதோ புது முயற்சிகள் வரும்போதெல்லாம் குறை காணுவதா என்று எண்ணத் தோன்றலாம் .ஆனால் இது எந்த வகையில் பயன் தரும் ?விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் தன்னார்வலர்கள் வேண்டுமானால் இதை பெருமையாக ஏற்றுக் கொள்ளலாம் .பொது மக்கள் இதை எத்தனை தூரம் ஏற்கக்கூடும் ?

தமிழ் கூறும் நல்லுலகில் இதை "ஆணுறை ஆணுறை "என்று சொல்லும் படி
மாற்றி அமைப்பார்களோ ?

கடையில் சென்று தங்கள் தேவைக்கு ஆணுறை வாங்க தயங்கும் எத்தனையோ
சகோதரர்கள் இதை எவ்வாறு பயன்படுத்துவார்கள் ?
இவர்கள் வாங்கத் தயங்குவது மட்டுமல்லாமல் தங்கள் மனைவியை சென்று வாங்கச் சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .இவர்களுக்கு இது எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறது ?

ஆனால் பயனே இல்லை என்று மொத்தமாக ஒதுக்குவதும் கடினம் தான் .ஏனெனில் ,கடையில் "ஆணுறை வேண்டும்"என்று கேட்கத் தயங்குபவர்கள் இந்த டியூனைப் போட்டுக் காட்டி வாங்க முடியும் தானே !

நடைமுறையில் இருக்கும் எத்தனையோ விழிப்புணர்வு யுக்திகள் இன்னும் பலப் படுத்தப் பட வேண்டும் .இதுவரை இந்த பிரச்சாரத்தில் செலவழிக்கப் பட்டிருக்கும்
பணம் சரியாக பயன் படுத்தப்பட்டிருந்தால் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் இந்நேரம் விழிப்படைந்திருக்க வேண்டும் என்கிறது ஒரு புள்ளி விவரம் .


No comments: