Saturday 6 September 2008

பாட்டி

பாட்டிக்கென்று சில விசித்திரமான பழக்கங்கள் உண்டு .


நான் பள்ளியில் படிக்கும் போது நடந்தது இது .என் வகுப்பு தோழி ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தாள் . என் பாட்டியும் இவளும் ஒரு அறையில் இருந்தார்கள் .திடீரென்று நான் இருந்த அறைக்கு ஓடி வந்த அவள் "உங்க பாட்டி வாய்க்குள்ள அமிர்த்தாஞ்சன் தடவுறாங்க "என்று சொன்னாள் .எந்த வலியானாலும் அதற்கு அமிர்த்தாஞ்சன் தடவும் பழக்கம் இருந்தது பாட்டிக்கு.இந்த முறை அவர் தடவியது பல் வலிக்கு !


பாட்டிக்கு பிடித்த உணவுகளில் முக்கியமானது முருங்கைக் கீரை .எங்கள் வீட்டிலும் ,இரண்டு பெரியப்பாக்கள் வீட்டிலும் முருங்கை மரங்கள்
உண்டு .இதை பறித்து இலைகளை ஆய்வது என்பது கொஞ்சம் சிரமமான ,அனேகர் சங்கடப்படும் வேலை . இதை நன்கு அறிந்ததாலோ என்னவோ ,தனக்கு முருங்கை கீரை சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பாட்டியே கீரையை பறித்து ஆய்ந்து கொண்டு வருவார் .காலை நீட்டி அமர்ந்து குனிந்த தலை நிமிராமல் மடியில் முறத்தை வைத்துக் கொண்டு ஆய்ந்து முடிப்பார் .சமைப்பதற்கு கஷ்டம் என்று யாரும் சாக்கு சொல்ல முடியாது !இதை சமைக்க முடியாது என்று சொன்னதால் அக்காவுக்கும் பாட்டிக்கும் ஒரு முறை சண்டை கூட நடந்ததுண்டு .

பாட்டி இறந்த நாளில் என் அண்ணன் ஒருவர் சொன்னார் ,"பாட்டியின் ஆவி கண்டிப்பாக இந்த முருங்கை மரத்தில் தான் இருக்கும் "என்று .....


No comments: