Tuesday 14 October 2008

பொறையுடைமை ???

என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண் இவர் .பரிசோதனையின் போது கர்ப்ப வாயில் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது.இது ஒரு ஆறு மாத காலத்திற்கு முன் .சிகிச்சைக்கு அடையாறிலுள்ள புற்று நாய் சிகிச்சை மருத்துவமனைக்கு அல்லது எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன் .

இதன் பிறகு நான்கு மாதங்கள் இந்த பெண் வரவேயில்லை .சிகிச்சைக்கும் எங்கும் செல்லவில்லை .ஒரு முறை மருத்துவமனைக்கு சென்று விட்டு யோசித்து சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு காணாமல் போனார்கள் இவரும் இவர் கணவரும் .யோசித்து யோசித்து நோயும் அதிகமாகி பல முறை சொன்ன பின் இப்போது சென்றிருக்கிறார்கள் சிகிச்சைக்கு ...


No comments: