Tuesday 25 November 2008

வாழ்க்கை துணைநலம்

ஒரு குடும்பத்தின் கதை இது .

புதிதாக சிகிச்சைக்கு வந்தனர் ஒரு தம்பதியினர் .
பேச ஆரம்பிக்கும் முன்னே அழ ஆரம்பித்தார் மனைவி .

தன் கணவருக்கும் (பள்ளி ஆசிரியர் இவர் ) அவருடைய மாணவரின் தாய்க்கும் தொடர்பு இருந்ததாம் (இவர் ஒரு விதவை ) .
நோயுற்று , இறக்கும் தறுவாயில் அந்தப் பெண் இவரை அழைத்து வரச் செய்து ,"எனக்கு எச் .ஐ.வி நோய் உண்டு .இது உன் கணவருக்கும் தெரியும் .என் வறுமை காரணமாக நான் இவரோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலரோடும் தொடர்பு வைத்திருந்தேன் . இவரை ஆணுறை உபயோகிக்கும் படி கட்டாயப் படுத்தினேன் .இவர் ஒப்புக்கொள்ளவில்லை .ரத்த பரிசோதனையாவது செய்துக் கொள்ள சொன்னேன் .அதற்கும் இவர் சம்மதிக்கவில்லை .உங்களோடு தொடர்பு கொள்வதையாவது தவிர்க்க சொன்னேன் .அதையும் இவர் கேட்டிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை .இவருக்கு நிச்சயம் எனக்கிருந்த நோய் வந்திருக்கும் .உங்களுக்கும் வந்திருக்கலாம் .கண்டிப்பாக நீங்கள் ரத்த சோதனை செய்து கொள்ளுங்கள் "என்று கூறியதாகவும் அதன் பின்னரே இருவரும் சோதனை செய்ததில் இருவருக்கும் நோய் பாதித்திருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார் .

என்ன அவலம் .....தன் சுகத்திற்காக தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுக்கும் இவர் போன்றோரை என்ன செய்தால் தகும் .

இறுதியாக அந்த மனைவி சொன்னார் ,"இவர் இறந்து நான் வாழ்ந்தால் ,நான் ஒருவேளை வசதியாக வாழக் கூடும் என்ற கெட்ட எண்ணத்திலேயே இவர் இவ்வாறு செய்திருக்கிறார் ," என்று .

உண்மைதானோ ?

Monday 24 November 2008

குறை ஒன்றும் இல்லை




குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
மூதறிஞர் ராஜாஜி

Friday 21 November 2008

மங்கையராக பிறந்திடவே ...

"மங்கையராக பிறந்திடவே மாதவம் செய்ய வேண்டும்"


இது நாம் கேட்டுப் பழகிப் போன கூற்று தான் .மாதவம் செய்யவில்லை என்றால் இங்கு மங்கையராய் பிறப்பதும் வாழ்வதும் கடினம்தான் .
பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைவது பற்றியும் பெண் சிசுக் கொலை பற்றியும் எழுதி களைத்தாயிற்று .

இன்று திண்டுக்கல்லில் ஒரு தந்தை தனக்கு மூன்றாவதாகவும் பெண் மகவு பிறந்ததற்காக தற்கொலை செய்துக் கொண்டார் .

ஆண் மகன் வேண்டும் என்ற கட்டாயம் எதற்காக ?எவருக்காக ?


முதல் இரண்டு குழந்தைகளையுமே வளர்ப்பதில் ஆயிரம் சிரமங்கள் இருக்கும் போது இன்னொரு குழந்தையை அது ஆணாகவே பிறந்திருந்தாலும் பெற வேண்டிய அவசியம் என்ன ?

இன்றும் ஆண் பிள்ளை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ன ?

எந்த பிள்ளையும் காக்கலாம் ,காப்பாற்றாமல் போகலாம் என்ற உண்மை இன்னுமா சிலரின் வீடு வந்து சேரவில்லை ?

குலம் தழைக்க ஆண் பிள்ளை என்று சொல்லிக் கொள்ள நாம் என்ன இன்னும் முடியரசர்கள் காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?


முன்பு வரிசையாக பெண்களை பெற்று விட்டு "போதும் பொண்ணு ","மங்களம்"
என்றெல்லாம் பெயரிட்டு அந்த வரிசையை முறியடிக்கப் பார்த்தவர்களை பார்த்திருக்கிறோம் .மாறுபாடாக இன்று ஒரு தந்தை தன்னை தானே முடித்துக் கொண்டு இதை செய்திருக்கிறார் .

பெற்ற குழந்தைகளையும் மனைவியையும் கை விட்டதோடு அல்லாமல் பிறந்த குழந்தைக்கு தந்தையை விழுங்கியவள் என்ற பாரத்தையும் ஏற்றிவிட்டு .....


http://thatstamil.oneindia.in/news/2008/11/21/tn-father-commits-suicide-after-wife-gave-birth-3rd-famale-c.html

Tuesday 18 November 2008

மறந்து விடுவோம்


இதயமே மறந்து விடுவோம் அவனை,
இன்றிரவில், நீயும் நானும்
அவனில் துஞ்சிய கதகதப்பை நீயும்
அவன் பொழிந்த ஒளியை நானும்


நீ மறந்ததும் என்னிடம் மறக்காமல் சொல்லிவிடு
உனை தொடர்ந்து நானும் என் நினைவகற்ற வேண்டும்
வேகமாய் செய் ..நீ தாமதித்துக் கொண்டிருக்கையில்
அவனை நான் நினைத்துவிடக் கூடும்


Heart, we will forget him
by Emily Dickinson


Heart, we will forget him,
You and I, tonight!
You must forget the warmth he gave,
I will forget the light.


When you have done pray tell me,
Then I, my thoughts, will dim.
Haste! ‘lest while you’re lagging
I may remember him!

Wednesday 12 November 2008

பேரரளிப் பூக்கள்


மலையின் சிகரம்தொட்டு மிதந்தலையும் மேகம்
தனியே திரிந்தலைந்தேன் மேகம்போல் நானும்
தங்கக் குவியலாய் கண்முன்னே
விரிந்து கிடந்தது பேரரளிக் கூட்டம்
குளக்கரை நிரப்பியும் மரநிழலில் அடர்ந்தும்
காற்றில் படபடத்து நடனமாடியும்


பால்வீதியெங்கும் பரவிப் பதிந்து
மின்னிக் கிடக்கும் நட்சத்திரங்கள் போல்
எல்லையில்லா நீர்க்கரை ஓரம்
எல்லையும் தாண்டி படர்ந்து கிடந்தன
காற்றின் ஜதிக்கு தலையாட்டும் மலர்கள்
ஒரே பார்வையில் பத்தாயிரம் கண்டேன்


கடலில் மிதந்து அலைகள் ஆடின
மலர்களோ அலைகளை மிஞ்சி ஆடின
இத்தனை களிப்பில் தோழமை கிட்டினால்
கவிஞன் உணர்வுகள் துள்ளாதிருக்குமோ ?
பார்த்தேன்பார்த்தேன்பார்த்துக்கொண்டேயிருந்தேன்
கிட்டிய செல்வங்கள் பற்றி உணர்வில்லாமல்..


பாரங்கள் சுமந்தோ சுமைகள் துறந்தோ
படுக்கையில் என்னுடல் கிடத்திடும் நேரம்
தனிமையின் சுகமாம் மனக்கண் திரையில்
பளிச் மின்னல்களாய் இவை தோன்றி நிறைய
என் உள்ளமும் உவகையில் நிறைந்துபோகும்
பேரரளிப் பூக்களுடன் இசைந்தும் ஆடும்


"The Daffodils" by William Wordsworth

I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.


Continuous as the stars
that shineand twinkle on the Milky Way,
They stretched in never-ending line
along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
tossing their heads in sprightly dance.


The waves beside them danced;
but theyOut-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
in such a jocund company:
I gazed - and gazed - but little thought
what wealth the show to me had brought:


For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

Tuesday 11 November 2008

கல்விச்சாலை

சென்னை அண்ணாநகர் பெயின்ஸ் பள்ளி என் பள்ளிக்கூடம் .
என் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நான் பயின்றது இங்கே தான் .

நான் முதல் வகுப்பு படிக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது இந்த பள்ளி .முதல் வகுப்பை கீழ்பாக்கம் பெயின்ஸ் பள்ளியில் படிக்க துவங்கியிருந்தேன் .இந்த பள்ளி ஆரம்பித்ததும் இங்கே மாற்றமானேன் .ஒரு சிறு வீட்டில் இரண்டு மாடிகளில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே ஆரம்பிக்கப்பட்டிருந்தது .என் தம்பி எல்.கே.ஜி ,நான் ஒன்றாம் வகுப்பு .வகுப்பு என்று சொல்வதை விடவும் அதை அறை என்றே சொல்ல வேண்டும் .நாங்கள் முப்பது பேர் இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன் .

அடுத்த ஆண்டே என்னோடு என் பள்ளியும் வளர்ந்தது .இப்போது அது இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அழகான கட்டடங்களுடன் பெரிதானோம் .இப்படியே ,நான் வளர என் பள்ளியும் வளர ....இன்று வரை என் வயதே என் பள்ளிக்கும் .

நான் எட்டாம் வகுப்பில் இருந்த போது ,என் பள்ளியின் நிறுவனர் ,"ஜெஸ்ஸி மோசஸ் "அவர்கள் மறைந்த போது அவர் பெயரே பள்ளிக்கும் சூட்டப் பட்டது .
நான் பள்ளிப் படிப்பை முடித்த போது என் பள்ளியும் அதன் முழு வளர்ச்சியை எட்டியிருந்தது .

பள்ளியிலேயே பொதுத் தேர்வு முதலில் எழுதியது நாங்கள் தான் .பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வில் முதன்முதலில் நூறு விழுக்காடு தேர்வு பெற்றதும் நாங்கள் தான் .அது மட்டுமல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்பில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததற்காக தண்டனை வாங்கிய ஒரே வகுப்பும் என்னுடையது தான் .

இன்னும் பல சொல்லக் காத்திருக்கிறேன் ...

Friday 7 November 2008

தேவுடா !தேவுடா ! ஏழுமலை தேவுடா !

வேண்டுவோருக்கு பொன்னும் அருளும் கொட்டிக் கொடுக்கும் ஏழுமலையான் சார்ந்த செய்தி இது .


இங்கு சில அபிஷேகங்களும் பூஜைகளும் இன்னமும் முப்பது வருடங்களுக்கு முன்பதிவு செய்யப் பட்டுவிட்டனவாம் .இதனால் இதிலும் எதிலும் போலவே "தக்கல்" முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது .இந்த முறைப்படி ரூ.ஐம்பது ஆயிரம் கட்டி அதனோடு உங்களுக்கு தேவஸ்தான உறுப்பினர்கள் இன்னமும் சில அதிகாரிகள் போன்றோர் சிபாரிசும் இருந்தால் உங்களுக்கு இந்த சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படும் .


என்ன நம்பிக்கையில் இந்த முன்பதிவுகள் செய்யப் படுகின்றன ?


அதிக பணம் வசூலிப்பதற்காக சில இடங்கள் காலியாக வைக்கப்படுகின்றனவா ??

எதற்காக ஒரு வழிபாட்டு தலத்தில் பணம் சார்ந்த இத்தனை பேதங்கள் ???
வாசலிலிருந்து சேவைகள் வரை ....

பணத்திற்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் இங்கு இத்தனை தூரம் முன்னுரிமை கொடுக்கப்படுவது ஏன் ?

அந்த ஏழுமலையானுக்கு தான் வெளிச்சம் .....

Thursday 6 November 2008

தங்கப்பல் தாத்தா


தங்கப்பல் தாத்தா என் பாட்டிவீட்டின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் .பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்று சொல்வதை விட பக்கத்துக்கு வாசல்காரர் என்று சொல்வதே சரியாக இருக்கும் .பாட்டி வீட்டுக்கு வலது பக்க வீடு இவருடையது .பாட்டி வீட்டிற்கும் இவர் வீட்டிற்கும் இடையே இவர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பார் .இவர் வேறு எதுவும் செய்து பார்த்ததாக எனக்கு நினைவில்லை .இவர் பெயருக்கு காரணமான தங்கப்பல்லையும் நான் பார்த்ததில்லை .






சில வருடங்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது ,இவர் என் பாட்டியின் தம்பி என்பதும் இவர் பெயர் ஆறுமுகம் என்பதும் .




என் பாட்டி மிகவும் உடல் நலம் குன்றி இருந்த வேளையில் என் அண்ணன்கள் இருவர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்தனர் .அப்போது பாட்டியிடம் என் அத்தை ,"தம்பி மகன்கள் வந்திருக்கின்றனர் "என்று சொல்லிய போது பாட்டி உடனே கேட்டாராம் ,"நாகூரும் தர்மருமா ?" என்று .தங்கப்பல் தாத்தாவின் மகன்கள் இவர்கள் இருவரும் .என் பாட்டி தன் தம்பி மீது கொண்டிருந்த பாசம் அது .