Wednesday 4 February 2009

தேவை விருதுகள்

நடிகர் நாகேஷின் மரணம் அவருக்கான அனுதாபங்களுடன் அவர் பேர் சொல்லும் அளவுக்கு விருதுகள் எதுவும் பெறாமல் போனதை பற்றிய வருத்தங்களையும் வெளிக்கொணர்ந்தது .

அவரே ஒரு நிகழ்வில் ,"எனக்கு ஏன் விருதுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று யோசித்திருக்கிறேன் ,பின்னர் தான் தெரிந்தது இங்கிருப்பவர்கள் பரிந்துரை செய்யாததால் தான் எனக்கு அவை கிடைக்கவில்லை ,"என்று கூறினார் .

காலம் கடந்த பின் கிடைக்கும் விருதுகள் அவமானச் சின்னங்கள் தவிர வேறில்லை .ஆனானப்பட்ட நடிகர் திலகதிற்கே ,சிறந்த துணை நடிகர் விருது கொடுத்து கேவலப் படுத்தியிருக்கிறோம் .அவருக்கும் "தாதா சாகிப் பால்கே விருது ",கலைஞரும் மூப்பனாரும் பதவிக்கு வந்த போது தான் சாத்தியமாயிற்று .

ஒரு கலைஞனுக்கு என்னதான் காலத்தை வென்ற கலைஞன் என்று நாம் பட்டங்கள் கொடுத்தாலும் ,விருதுகள் அவர்களுக்கு ஒரு வெளிப்படையான அங்கீகாரமாக தெரிவதில் வியப்பில்லை .மறைந்த பிறகு வருத்தப்படுவதை விட
இருக்கும் போதே அவர்களை கவுரப்படுத்துவது சிறப்பானது தானே .

ஆச்சி மனோரமா ,ஒரு மிகச் சிறந்த கலைஞர் .எத்தகைய பாத்திரமானாலும் ஏற்று சிறப்பாக்கி நடிக்கக் கூடியவர் .ஆயிரம் படங்கள் என்று எண்ணிக்கை அளவில் மட்டுமன்றி தன் நடிப்பிலும் சாதனை படைத்தவர் .உடை ,பாவனைகள் ,வட்டார பேச்சு என்று முழுமையாக பாத்திரத்துடன் ஒன்றி நடிக்கக்கூடியவர் .நடிகைகளில் இந்திய அளவில் ,ஏன் உலக அளவில் கூட இவரைப் போல சாதித்தவர்கள் எவரும் உண்டா என்பது சந்தேகமே ...

ஏன் இவருக்கு ஒரு "தாதா சாகிப் பால்கே விருது "கொடுக்கக்கூடாது ?


1 comment:

Anonymous said...

yes ur correct. v.pitchumani