Tuesday 10 February 2009

நான் கடவுள்

பிச்சைக்காரர்களை வைத்துக் கொண்டு பல காலமாக காமெடி செய்து கொண்டிருக்கும்தமிழ் சினிமாவில் இது ஒரு புது பார்வை தான் .படத்தில் அனைவரின் உழைப்பும்தெரிகிறது .ஆனால் இதில் வியக்க வைப்பது ஆர்தர் வில்சனும் இளையராஜாவும்...


காமெரா காசியை அப்படியே சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறது .அதன் அத்தனைவிஷயங்களையும் அந்த ஒரு டைட்டில் பாடலில் கொண்டு வந்து விட்டது .ஒவ்வொரு ஃப்ரேமும் அத்தனை அழகு.


அடுத்தது இளையராஜா ..இன்னமும் என்ன இருக்கிறது இவரைப் பற்றி சொல்ல ....

கதை ...அது இந்நேரம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் ......


ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருக்கிறார் பாலா ...எவருமே சும்மா வந்து போனார்கள் என்று சொல்ல முடியாது .....நிறைய பேர் இருந்த போதும்எல்லோரும் மனதில் பதிகிறார்கள்.இதற்கு ஒளிப்பதிவாளரும் காரணம் என்று நினைக்கிறேன் .தேவையில்லாத வசனங்கள் எதுவுமே வந்ததாக தெரியவில்லை .

கதையில் நகைச்சுவை ஒரு பலம் ..அது பல நேரங்களில் பல சமூக கேலிகளாகவெளிப்படுகிறது .குறிப்பாக அந்த பிச்சைக்காரர் ஒருவரின் பேச்சுகள் நச் .இதை நகைச்சுவை என்று சொல்வது கூட சரியா என்று
தெரியவில்லை

ஆர்யா ...ரொம்ப உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது .ஆனால் இவரின் பாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை .விரைப்பாக நடக்கிறார் .சண்டைபோடுகிறார் ......ஆசனங்கள் செய்கிறார் .

படத்தில் கொஞ்சம் சீர் செய்யப் பட்டிருக்க வேண்டியவை ....
வேறு மொழிகளுக்கு சப் டைட்டில் போட்டிருக்கலாம் .
அந்த அம்மா பாத்திரம் கொஞ்சம் நெருடல் .நடிப்பிலும் ஆக்கத்திலும் .
கதாநாயகி பாடும் பாடல்களுக்கு வெறும் குரல் சேர்க்காமல் ..மொத்தமாக soundtrack சேர்ததிருக்கிறார்கள் ...பொருந்தவில்லை ...
எல்லாவற்றையும் விட கதாநாயகி கடைசியில் பேசும் நீள வசனம் ...ரொம்ப சராசரி


மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் கதை சொன்னதிற்கு பாலாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .குறிப்பாக "பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் ",பாடலை நினைத்தாலே கண்ணீர் வருகிறது .அதே நேரம் இவர் யதார்த்தமான களங்களில் அதிகம் யதார்த்ததிற்கு ஒவ்வாத நாயகர்களை படைப்பதையும் கொஞ்சம் மாற்றலாமோ ?

இந்த திரைப்படத்தை நான் ஆறாம் தேதியே பார்த்து விட்டேன் .இதற்கு இணையத்தில் நான் படித்த பல விமர்சனங்கள் என்னையும் ஒன்று எழுத தூண்டியது .


சமீப காலங்களில் நான் பார்த்த திரைப் படங்களில் என்னை அதிகம் பாதித்தது இந்த படம் .


1 comment:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team