Thursday 5 March 2009

திறவுகோல்


என் நொடிகளெங்கும்
சோதனைச் சாவடிகள் வைத்து
என்னை தாண்டச் செய்கிறாய்
தப்பி வரும் எனக்கு பதக்கங்கள் இல்லை
காயங்கள் மட்டுமே


என் நிர்வாணமெங்கும்
எவர் எச்சங்களையோ தேடுகிறாய்
தேடல் தோற்ற பின்னும்
தோலுரித்துப் பார்க்கிறாய்
வழிந்துக் கொண்டிருக்கும் குருதியை சட்டை செய்யாமல்


இத்தனையில் களைத்துப் போய்
தூங்கப் போகிறேன்
என் கனவுகளை கண்காணிக்க
திறவுகோல் கேட்கிறாய்
எங்கு போவேன் ?






















2 comments:

அமுதா said...

மனம் வலிக்கிறது

பூங்குழலி said...

நன்றி அமுதா