Thursday 5 March 2009

ஒரு தேர்தல் வேட்பாளரின் ஒப்பாரி

இந்த இழையில் இடம் பெற்றிருக்கும் ஒப்பாரி பாடல்கள் எல்லாம் "அன்புடன் "குழுமத்தின் "சமுதாய ஒப்பாரி "இழைக்காக எழுதப்பட்டவை .இதை முழுமையாக சுவைக்க விரும்புகிறவர்கள் இங்கு செல்க .

http://groups.google.co.in/group/anbudan/browse_thread/thread/99a4160c23cc4a95/fadebbf44f5b8c8d?q=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF&lnk=ol


மண்ணுக்கு தான் பத்துன்னு
ரோட்டுக்கு தான் பத்துன்னு
பள்ளம் மேடு பாத்து வச்சி
பத்து பத்தா சேத்து வச்சேன்

சுருக்கா தான் சில கோடி
சேத்து தானே போட்டு வச்சேன்
மாமியாக்கும் மச்சிணிக்கும்
அதில் கொஞ்சம் கொடுத்து வச்சேன்

சேத்து வச்ச பணத்துக்கெல்லாம்
பங்கம் தான் வந்திருச்சி
கட்டிலிருந்து கொஞ்சம் நோட்டை
தொலைக்க வேளை வந்திருச்சி

தேர்தல் தான் வந்ததின்னு
ஊரெல்லாம் சொல்லி வச்சா
எவருக்கிண்னு கொடுக்க நா
எவருக்கு தான் மறுக்க


போஸ்டருக்கும் பாணருக்கும்
கொஞ்சம் காசு கரஞ்சி போச்சி
தலைவரு வந்த செலவுக்கு
இன்னும் கொஞ்சம் தொலஞ்சி போச்சி

வோட்டுக்கு இத்தனை ன்னு
எண்ணி தானே கொடுத்திருக்கேன்
எங்க போய் குத்துவானோ
பயத்தில தான் ஓரஞ்சிருக்கேன்

சரியாக போட்டுட்டான்னா
ஜெயிச்சி சபை போயிடுவேன்
மாத்தி தான் போட்டுட்டான்னா
கடங்காரன் ஆயிடுவேன்


No comments: