Thursday 5 March 2009

வயதான ரேஸ் குதிரையின் ஏக்கம்

டிராக்கிலே நான் நடந்து வந்தா
ஜாக்கிக்கெல்லாம் நடுங்கி போகும்
ஓடி நான் வருகையிலே
மத்த குதிரை ஓட்டம் அடங்கிப் போகும்


ஓடி ஓடி ஓலச்சதிலே
ஓன் புகழும் கூட ஏறி போச்சு
ஓடி நான் ஜெயிச்சதிலே
ஓன் சொத்தும் கூட கூடிப் போச்சி


ஓடத் தொடங்கி நாள் முதலா
பட்டுக் கடிவாளம் கேட்டேனா
காலுக்கு தான் தங்கத்திலே
செருப்பு செய்ய சொன்னேனா


வயசான காலத்திலே
கொஞ்சம் கொள்ளு தான்னு கேட்டிருக்கேன்
ஓட்டமெல்லாம் ஒஞ்ச காலம்
வாய்க்கு தண்ணி தான் கேட்டிருக்கேன்


அதுக்குள்ள பொசுக்குன்னு
என்ன சுட்டு போட சொல்லிட்டியே
கேட்க ஒரு ஆளிலைன்னு
தட்டி விட சொல்லிட்டியே


எளங்கோ வந்து சொல்லலைன்னா
மண்ணோட போயிருப்பேன்
மவராசன் இல்லையின்னா
சுடுகாடு போயிருப்பேன்


என் உசிரை காப்பாத்த
பாட்டோட பறந்து வந்த
எஜமான்.. என் குலத்தில்
இன்னும் சில பேரை மீட்டிடையா


No comments: