Thursday 5 March 2009

பேர் சொல்லும் பிள்ளை

தொட்டிலில என்ன வச்சு
ஊரையெல்லாங் கூட்டி வச்சி
அழகா தான் பேரும் வச்சி
ஆசையா தான் வளர்தாரே ......எங்கப்பா...


அவர் ஆசையா வச்ச பேர
சொல்ல ஒரு நாதியில்ல
வாய் நெறைய கூப்பிடவும்
அவர விட்டா ஆளுமில்ல


என் பேரு பட்ட கஷ்டமெல்லாம்
வேறு யாரு பேரும் பட்டதில்ல
வச்ச பேர வச்ச படி
மெச்சிக்கிட்டு சுத்துராங்க


கல்கி மவராசன் சொன்ன பேருன்னு
கவி கம்பரும் கூட சொன்னாரின்னு
ஆசையா தேடிப் பிடிச்சு
ஆரவாரமா பேரும் வச்சா


வாய் பேச தெரிஞ்சவங்க
வாய்க்கு வசதியா கூப்பிடுறத
யாரு கிட்ட சொல்லி அழ
எந்த பேர நெனைச்சி அழ


ஆள வெட்ட முடியாம
பேர மட்டும் பாதி வெட்டி
மீதி பேர நிர்கதியா விட்டாங்க
அத சொல்லி அழவா


பூங்கான்னு வெட்டி போட்டு
பூங்ஸ்ன்னு கட்டி போட்டு
அன்பால கட்டி போட்டு
இப்ப பூங்ஸின்னு பல் வழியே
கட்டின பல் வழியே
பேரை குத்தியத சொல்லணுமா


முழுப் பேரு பள்ளிக்கூட
வருகை ஏட்டோட அழிஞ்சி போச்சி
மிச்சமாகி கிடப்பதெல்லாம்
கண்ட பல்லு பட்டு கிழிஞ்சி போச்சி


No comments: