Saturday 4 April 2009

நான்

நான் ,
உன்னில் பாதியாய் என்றுமே இல்லை
உன் நிழலாகவும் நான் விரும்பவில்லை
உன் வெற்றியின் பின்னால் என்ற
பெருமைகள் எனக்கு தேவையுமில்லை

உனக்காக தோள் கொடுக்க முடியும் என்னால்
உன்னை தூக்கி விடவும் சுமக்கவும் கூட முடியும்
உன்னோடு விளையாட சண்டையிட
என இரண்டும் முடியும்

தனியாய் ,
முழுவதுமாய்,
இயங்க விடு என்னை


4 comments:

M.Rishan Shareef said...

பெரிய பொருளைத் தன்னுள்ளே கொண்ட சிறிய கவிதை. அருமை சகோதரி !

v.pitchumani said...

பூங்குழலி அருமை ஒரு பெண்ணின் உள்ளத்தை அழகாக கொண்டு வந்து கவிதை வடித்து உள்ளீர்கள்
கடைசி வரிகள் பெண்ணின் இதயம் விம்மும் வரிகள் நன்று
பிச்சுமணி
http://manimalar.wordpress.com
http://madhumithapitchumani.blogspot.com

பூங்குழலி said...

மிக்க நன்றி ரிஷான் ...சில புகழ்ச்சிகள் கட்டுகளாகவே இருக்கின்றன

பூங்குழலி said...

மிக்க நன்றி பிச்சுமணி