இவர் எப்போதும் சிகிச்சைக்கு வரும் போது தன் நண்பருடன் தான் வருவார் .மனைவியைப் பற்றி கேட்கும் போதெல்லாம் ,"அவள் இங்கு வர மாட்டாள் ,"என்று சொல்லி விடுவார் .இப்படி சொல்பவர்கள் மனைவிகளுக்கு சில வேளைகளில் தங்கள் கணவர்களுக்கு நோய் இருப்பதே தெரியாமல் இருக்கக் கூடும் .இதன் பொருட்டு நானும் சளைக்காமல் ,"உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள் ,"என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் .
ஒரு முறை இவர் நண்பர் ,இவர் மனைவியுடம் தொலைபேசியில் என்னை பேசச் சொன்னார் .நானும் பேசி விட்டு ,"கண்டிப்பாக,ஒரு முறையாவது இங்கு வாருங்கள் "என்று கூறினேன் .
போன வாரத்தில் தீடீரென என் அறையில் நுழைந்த இவர் நண்பர் சொன்னார் ,"சிரமப்பட்டு இவர் சம்சாரத்தை கூட்டிகிட்டு வந்திருக்கோம் .இவன் கூட பேசுறதில்ல ,இவனுக்கு சாப்பாடு போடுறதில்ல ,பையன பக்கத்தில வர விடுறதில்ல .கொஞ்சம் விளக்கமா சொல்லி அனுப்புங்க "என்று வரிசையாக கூறினார் .
நானும் என்னுடன் பணிபுரியும் ஆலோசகர்களும் ,இவர் மனைவியிடம் பேசினோம் .போகும் போது அவர் ,"இத்தனை நாள் இந்த நோய் பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது .பக்கத்தில வந்தாலே நமக்கு வந்திருமோ ன்னு பயந்துட்டேன் .அக்கம் பக்கத்து காரங்க சொல் பேச்சு கேட்டு இப்படி செஞ்சுட்டேன் .இனிமே அவர நல்லா பாத்துக்கிறேன் ,"என்று சொல்லிவிட்டு சென்றார் .
Thursday 23 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment