Tuesday 28 April 2009

சீதாப்பிராட்டிக்கு


நீ
சிறு பிள்ளையாய்
தூக்கி விளையாடிய
சிவதனுசை தானே
வாலிபனாய் ராமன்
உடைத்துப் போட்டான்
அந்த உன் வீரத்தை நீ எங்களுக்கென
தக்க வைத்துக் கொண்டிருக்கலாம்



சரி அதுவாவது போகட்டும்
சகல செல்வங்களுக்கும்
அதிபதியான நீ
ஒரேயொரு பொன்மானுக்கு
ஆசைப்படப் போய்
பெண்கள் எல்லாருமே
தங்கத்திற்கு மயங்குபவர்கள்
என்ற தீராத பழியை அல்லவா
சுமத்தி விட்டு சென்று விட்டாய்


2 comments:

"உழவன்" "Uzhavan" said...

//தங்கத்திற்கு மயங்குபவர்கள்
என்ற தீராத பழியை அல்லவா
சுமத்தி விட்டு சென்று விட்டாய் //

ஓ.. இதுதான் காரணமா?? :-)

//அந்த உன் வீரத்தை நீ எங்களுக்கென
தக்க வைத்துக் கொண்டிருக்கலாம்//

இன்றைய பெண்கள் எல்லோரும் வீரமாகத்தான் இருக்கிறார்கள். கவலை வேண்டாம்.

காயத்ரி said...

பெண்கள் தங்கத்திற்கு மயங்கும் காரணம் அறிந்துகொண்டேன். உங்களுக்கும் பெண்களுக்கும் வீரம் தர வேண்டுகிறேன் இனி சீதையிடம்...