Friday 22 May 2009

வாக்காளனின் புலம்பல்

தண்ணியில்லா பொட்டலிலே
தர்மராசா நிக்குறாரு
செழிச்சு பொங்கும் பூமியிலே
பாரிவள்ளல் நிக்குறாரு
பக்கத்து பட்டியிலே
தர்மதொரை நிக்குறாரு
என் மச்சினர் ஊரில தான்
கர்ண ராசா நிக்குறாரு


ஊருக்கொரு ராசனா
ஒய்யாரமா நிக்குறாங்க
நோட்ட தான் தண்ணிபோல
தெவிட்டாம கொட்டுறாங்க
இந்த வக்கத்த பூமியில
வந்து வாச்சதொன்னும் சரியில்ல
இந்த போக்கத்த பாவிக்குன்னு
வந்து வாச்சதுவும் சரியில்ல


கலர் கலரா போஸ்டருண்டா
அட துண்டு சீட்டு தானுண்டா
வெள்ளியில தரவேணாம்
பித்தளையில் விளக்குண்டா
பக்கத்து ஊரிலெல்லாம்
எட்டு கல்லு வச்ச மூக்குத்தியாம்
ஒத்த கல்லு மூக்குத்திக்கு
இந்த ஊரில தான் வழியுண்டா


வெல வாசி ஏறிப் போச்சு
வோட்டு வெல கூடிப் போச்சு
கணக்கு சரியாகும் வர
வோட்டு போட மனசு இல்ல
துட்டு வேணாம் ,சீல வேணாம்
கொடம் கூட தர வேணாம்
ஒசத்தியா ஒன்னும் தர வேணாம்
சீப்பான நானோகாரு
ஆளுக்கொன்னு தந்தா என்ன


No comments: