Tuesday 14 July 2009

அம்மன் கொடை




கொடை அன்று சாயங்காலம் தான் போய் சேர்ந்தோம் ஆலடிப்பட்டிக்கு .ஊரில் ஒரு திருவிழாவிற்கான அறிகுறிகளோ பரபரப்போ அதிகம் காணப்படவில்லை என்றே சொல்லலாம் அந்த நேரத்தில் .கேட்ட போது ,ஆரம்பிக்க இரவு ஆகும் என்பதால் கூட்டம் இனிதான் வரும் என்று சொன்னார்கள் .


ஒரு ஒன்பது மணி போல ,கோவில் பக்கம் போனோம் .ஜகஜோதியாய் விளக்குகள் ,அலங்காரங்கள் என்று களைக்கட்டியிருந்தது .கூட்டம் பரவாயில்லை இப்போது . வழியில் சுடலைமாடசாமி கோவில் . கோவில் வாசலில் உட்கார்ந்து திருநீர் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர் .பக்கத்தில் ஒரு பெரிய உண்டியலையும் வைத்திருந்தார்கள் .இங்கு தான் கொட்டடடிக்க ஆரம்பிப்பார்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் .எதிரே வில்லுப் பாட்டுக்கான ஆயத்தங்களை ஒரு குழுவினர் செய்து கொண்டிருந்தார்கள் .இடம் பிடித்து உட்கார்வதில் ஆர்வமாக ஒரு கூட்டம் சுற்றி வந்து கொண்டிருந்தது .

மற்றபடி ஊரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த கொட்டு சத்தம் இன்னமும் கேட்க ஆரம்பிக்கவில்லை .இன்னமும் நேரம் இருப்பதாக தோன்றவே ,பக்கத்தில் இருந்த ஜவுளிக் கடைக்குள் நுழைந்தோம் .ஊருக்கு போய் வந்ததன் நினைவாக இருக்கட்டுமே என்று ஒரு புடவையும் எடுத்துக் கொண்டேன் .வெளியே வந்து பார்த்தால் கூட்டம் அதிகமாகியிருந்தது .

கொட்டும் அடிக்க ஆரம்பித்திருந்தார்கள் .


No comments: