Friday 17 July 2009

அம்மன் கொடை




உட்காரக் கூடிய இடங்களில் எல்லாம் ஆட்கள் முன்பே நிறைந்திருந்தார்கள் .இப்போது நிற்கக் கூட இடம் இல்லை .வில்லுப்பாட்டு மேடையருகே அதிகம் முப்பது பேர் இருந்திருப்பார்கள் .கூட்டம் முழுவதும் கரகாட்டத்தை பார்க்கவே மொய்த்துக் கொண்டிருந்தது .

கரகாட்டம் ஆரம்பிக்கும் முன்னரே மேள வாத்தியக்காரர்கள் நின்று வாசித்து கொண்டிருந்தார்கள் .இவர்கள் வாசிப்பு ஆட்டத்திற்கு ஒரு முன்னோட்டம் போலிருந்தது .ஆட்டத்திற்கான மூடை கொண்டு வருவதிலும் இந்த வாசிப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றே நினைக்கிறேன் .அந்த விளக்குகளின் ஒளியில் வெட்கையில் வியர்த்து வழிந்துக் கொண்டிருந்தது .ஆனாலும் அசராமல் சாமியாட்டத்தில் துவங்கி வாசித்துக் கொண்டே இருந்தார்கள் . பல மணி நேரம் ஆகியிருக்கும் இவர்கள் முடிக்கும் போது .

ஒரு தடவை கூட சோர்வோ ,களைப்போ தெரியவே இல்லை வாசிப்பில் ....


2 comments:

குப்பன்.யாஹூ said...

id it near aalankulam, aaladippati. if you could have added photos it would be much better

தருமி said...

குப்பன் யாஹூ மிகவும் ஆசைப்படுகிறார். அவருக்காக இதைத் தருகிறேன்.