Wednesday 22 July 2009

அம்மன் கொடை

அடுத்த நாள் காலை தான் கோவிலுக்கு போக முடிந்தது .

கோவிலுக்குள்ளே நல்ல கூட்டம் .அதைவிட அதிகமாக குப்பையும் .ஒரு பக்கம் குடும்பம் குடும்பமாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் .இன்னொரு பக்கம் சக்கரை பொங்கல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் .அந்த தொன்னைகளும் மிச்சமாகிப் போன சக்கரை பொங்கலும் காலில் மிதிபட்டு பிசிபிசுவென இருந்தது .சுத்தம் செய்ய யாரும் முற்பட்டதாகக் கூடத் தெரியவில்லை .ஆனாலும் கோவில் திருவிழாவிற்கான களையோடு இருந்தது என்றே சொல்ல வேண்டும் .

வெளிப் பிரகாரம் முழுவதும் கடைகள் ,செருப்பு கடைகள் உட்பட .கொடைக்கென போட்டிருப்பதாக சொன்னார்கள் .நல்ல விற்பனை ஆகிக் கொண்டிருந்தது .விடிய விடிய இந்த கடைகள் திறந்திருக்குமாம் .வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம் .


No comments: