தாத்தா பெரிய படிப்பாக அறியப்பட்ட ஐந்தாம் வகுப்பு படித்தவர் .பாட்டியோ படிக்காதவர் .பாட்டி தான் படிக்கவில்லை என்பதை பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டோ கவலைப்பட்டோ நான் கண்டதில்லை . இது சம்பந்தமாக அத்தை சொன்ன கதை ஒன்று ,
"எங்க தேன்மொழிக்கு (என் அத்தை மகள் ) நாலு வயசு இருக்கும் .எங்கய்யா ஒரு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தாரு .அது ஒரு சாதாரண அ னா ,ஆவன்னா புக்கு தான் .இவ அத பாத்துக்கிட்டிருந்தா .எங்கம்மா வந்து என்னளா படிக்க ன்னு கேட்ட ஒடனே ,இவ சட்டுன்னு அதெல்லாம் ஒங்களுக்கு தெரியாது பாட்டி ன்னு சொல்லிட்டா .எங்கய்யா சிரிச்சிட்டாரு .எங்கம்மாவுக்கு வந்துதே ஒரு கோவம் .இவ சொன்னது கூட அவளுக்கு கோவம் இல்ல .இவ சொன்னதுக்கு எங்கய்யா சிரிச்சிட்டாருன்னு தான் ."
Friday 23 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment