Monday 23 November 2009

ஒரு நூறு வருடங்கள்

ஒரு நூறு வருடங்கள் ஆன பின்
எவருக்கும் தெரியவில்லைஅந்த இடம்
அங்கே நிகழ்த்தப்பட்ட வேதனையும்
அமைதி போல் அசைவில்லாமல்

களைகள் வெற்றிக்களிப்பில் தழைத்தன
அவ்வழி உலாவினார் அந்நியர்
வாசித்தும் போனார்
முதிர்ந்து உதிர்ந்தவர்களின் தனி எழுத்திடத்தில்

கோடைவயல்களில் வீசும் தென்றல்கள்
பாதையை நினைவுகூறி அலையும்
நினைவு தவறவிட்ட சாவியை
உள்ளுணர்வு சேகரித்துக் கொள்ளும்

Emily Dickinson - After a hundred years

After a hundred years
Nobody knows the Place
Agony that enacted there
Motionless as Peace

Weeds triumphant ranged
Strangers strolled and spelled
At the lone Orthography
Of the Elder Dead

Winds of Summer Fields
Recollect the way --
Instinct picking up the Key
Dropped by memory --

காது வளர்த்து


பாட்டி பாமடம் என்றும் சொல்லப்படும் தண்டட்டி அணிந்திருப்பார் .ஒரு காதில் இரண்டு உருளைகள் போன்ற அமைப்பில் இரண்டு காதுகளிலும் .பார்க்க கனமாக தெரிந்தாலும் அத்தனை கனம் இல்லை என்றே சொல்லுவார் .லேசாக இருக்க உள்ளே அரக்கு வைத்திருப்பார்களாம் .

நானும் என் அக்காவும் எங்களுக்கு ஆளுக்கொரு காதில் இருக்கும் பாமடத்தை தர வேண்டும் என்று வேடிக்கையாக கேட்போம் பாட்டியிடம் .எப்படி சீண்டிய போதும் பாட்டி ,"ஏளா ,அந்த பாமடம் ரெண்டும் ஒங்க அத்தைக்கு தான் " என்ற ஒரே பதிலை மட்டுமே கூறுவார் .நானும் அக்காவும் விடாமல் ,"ஒரு காது பாமடத்தை ரெண்டு அத்தைக்கும் குடுங்க .இன்னொரு காதுல இருக்க பாமடத்தை நாங்க ரெண்டு பெரும் எடுத்துக்கறோம் ."இதற்கும் பாட்டி அசைய மாட்டார் ,"ஏளா ,ஒங்க அத்த சும்மா விடுவான்னு நெனைச்சீகளோ "என்று பதில் வரும் .இதற்கு மேல் பேசினால் பதிலே பேச மாட்டார் பாட்டி .இறுதியாக பாட்டியின்
விருப்பப்படியே பாமடம் போய்ச் சேர்ந்தது இரண்டு அத்தைக்கும் .

பாட்டியின் காதை நான் சிறு வயதிலிருந்தே பார்த்து அதிசயித்திருக்கிறேன் .எப்படி இப்படி பெரிய ஒட்டையாக்க முடியும் என .அறுத்து எடுத்திருப்பார்களோ என்று நினைத்திருக்கிறேன் பல நேரம் .பாட்டியின் காது ஒரு புதிராகவே இருந்தது எனக்கு பல காலம் .பாட்டியிடமே கேட்ட போது அவர் சொன்னது இது .

முதலில் காதில் சாதாரண ஓட்டை எல்லாருக்கும் காது குத்துவது போலவே போடுவார்களாம் .உடனே அதிலொரு ஓலையை சொருகி வைப்பார்களாம் .சில நாள் கழித்து மீண்டும் கொஞ்சம் பெரிய ஓலையாக வைப்பார்களாம் .இப்படி ஓலையின் அளவை பெரிதாக்கிக் கொண்டே போவார்களாம் சில காலம் .துவாரம் கொஞ்சம் பெரிதானவுடன் பாமடத்தை மாட்டிவிடுவார்களாம்.பின்னர் அந்த பாமடத்தின் கனத்திலேயே காது நீளமாகி விடுமாம் .

இப்படியாகவே காது வளர்த்திருக்கிறார்கள் .

Saturday 21 November 2009

விடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்


விடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்
உதயமே-எனக்காக ஒரு கொடி உண்டா ?
நள்ளிரவில் நானொரு குமரி மட்டுமே
அட -மணமகளாவது எத்தனை கிட்டத்தில்
இரவே உன்னைக் கடந்த பின் நான் ,
கிழக்கு நோக்கி ,வெற்றி நோக்கி


நள்ளிரவே ,நல்லிரவு .அழை குரல் கேட்கிறது
கூடத்தில் தேவதைகளின் அசைவொலி கேட்கிறது
மெள்ள என் எதிர்க்காலம் படியேறிக் கொண்டிருக்கிறது
என்சிறுவயது பிராத்தனையில்
நான் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்
சீக்கிரத்திலேயே சிறுபிள்ளை இல்லை என்றாக
நித்தியமே ,வருகிறேன் நான்.
மீட்பனே ..நான் பார்த்திருக்கிறேன் அந்த முகத்தை
இதன் முன்னாலும் .....





A Wife--at Daybreak I shall be--
Emily Dickinson


A Wife -- at daybreak I shall be --
Sunrise -- Hast thou a Flag for me?
At Midnight, I am but a Maid,
How short it takes to make a Bride --
Then -- Midnight, I have passed from thee
Unto the East, and Victory --


Midnight -- Good Night! I hear them call,
The Angels bustle in the Hall --
Softly my Future climbs the Stair,
I fumble at my Childhood's prayer
So soon to be a Child no more --
Eternity, I'm coming -- Sir,
Savior -- I've seen the face -- before
!

Friday 20 November 2009

குருக்க்ஷேத்ரா




சென்னை " செட்டிநாட் வித்யாஷ்ரம் " மாணவர்களைக் கொண்ட நாடகக் குழு வருடா வருடம் ஒரு இதிகாசம் சார்ந்த கதையை மேடை நாடகமாக்கி வழங்குவது வழக்கம் .சென்ற வருடம் பீஷ்மர் என்ற நாடகத்தை இந்த குழு நடத்தியது .இந்த வருடம் "குருக்க்ஷேத்ரா "என்ற நாடகத்தை நேற்று முதலாக அரங்கேற்றினார்கள் .

கதை ,வசனம் ,இயக்கம் ,உடையலங்காரம் இவற்றை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள அரங்குகளை வடிவமைப்பது தோட்டாதரணி .நடிப்பும் இசையும் முழுக்க முழுக்க மாணவர்கள் மட்டுமே .ஆங்கில நாடகமாக அரங்கேற்றப்பட்டது வழக்கம் போலவே .
திரௌபதியின் சுயம்வரத்துடன் துவங்கியது கதை .துரியோதனனின் மரணத்துடன் முடிவடைந்தது .

1. மாணவர்கள் என்றே நாம் உணர முடியாத அத்துணை நடிகர்களின் நடிப்பும் அதற்கான உழைப்பும் பாராட்டத் தக்கது .
2.விநாயகரும் வியாசரும் காட்சிகளை விவாதிக்கும் படி அமைத்து சில இடங்களில் கதையை நகர்த்திய விதம் சிறப்புக்குரியது.இதில் சிறிது நகைச்சுவையும் கலந்திருந்தது .
3.உடையலங்காரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஆனால் நேர்த்தியாக இருந்தது .எல்லோருக்கும் மேல் துண்டே வித்தியாசப்படுத்தும் படியாக அமைக்கப்பட்டிருந்தது.
4.அரங்க அமைப்பு நன்றாக இருந்தது .ஆனால் நிறைய காட்சிகளுக்கு ஒரே அமைப்பு பொருந்தவில்லை .
5. வசனங்கள் முதலிலேயே பதிவு செய்யப்பட்டு வாயசைத்த போதும் ..அது தெரியாத அளவிற்கு மாணவர்களின் நடிப்பு இருந்தது .
6.மிக சிறப்பாக அமைந்திருந்த காட்சிகள் முதல் காட்சியான திரௌபதியின் சுயம்வரத்தை ஊர் பெண்கள் விவாதிக்கும் காட்சி ,சிசுபாலன் வதம் ,இறுதிக் காட்சியான துரியோதனன் மரணம் .
7.மயிலிறகும் ,குழலும் இல்லாத கண்ணன் ,கதை எப்போதும் சுமக்காத பீமன் என சில உடைகள் வித்தியாசமாய் .
8.துகிலுரிதலும் ,கீதோபதேசமும் கண்டிப்பாக இருக்கும் என்று நினைத்தேன் .அவை இரண்டுமே காட்சியாக்கப் படவில்லை .
9.துரியோதனனாக நடித்த ஆதித்யா என்ற மாணவரின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது .நடை ,முகபாவங்கள் என்று எல்லாமே அத்தனை அற்புதமாக இருந்தது .இந்த ஒரு மாணவரின் முன் மற்ற அனைவரின் நடிப்பும் மங்கலாக அதிகம் எடுபடவில்லை .
10.கதையில் வழக்கமான யுத்தத்தை காட்டாமல் ,பாத்திரங்களின் மனப் போக்கு ,ஆசைகள் ,ஈகோக்கள் என்ற அளவில் நாடகமாக்கியிருந்தது சிறப்பு .ஆனால் பார்க்க வந்திருந்த கூட்டத்தில் பலர் இளம் மாணவர்கள் (ஆரம்ப பள்ளி முதல் ).இவர்களுக்கு இது எந்த அளவுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை .
11 .காட்சிகளை சிறிது நேர இடைவெளி கூட தெரியாமல் மாற்றினாலும் கொஞ்சம் அதிக நீளமாக இருந்தது போலிருந்தது .வசனங்கள் காரணமாக இருக்கலாம் .
12.நாடகம் முடிந்து அதில் நடித்த அத்தனை பெரும் மேடைக்கு வந்த போது தான் ,ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நாடகத்தில் நடித்திருப்பதே தெரிந்தது .

உழைப்பைக் கொட்டிக் கொடுத்து நாடகத்தை நேர்த்தியாக உண்டாக்கியிருக்கிறார்கள்.மகாபாரதத்தை கதையாக மட்டும் பார்க்காமல் அதை மனிதர்களின் பிரதிபலிப்பாக அலச முயன்றிருக்கிறார்கள் .இதிகாச கதைகளை வெறும் கதைகளாக இல்லாமல் அவை சொல்ல வந்த செய்திகளையும் கொண்டு சேர்க்கும் பணியில் இது ஒரு சிறப்பான முயற்சியாகும் .

(நாடகம் நேற்று 19 துவங்கி இந்த ஞாயிறு 22 வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் "செட்டிநாடு வித்தியாஷ்ரம்"பள்ளியின் ராஜா முத்தையா அரங்கத்தில்
தினம் மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது )

Thursday 19 November 2009

அத்தை சொன்ன கதை -6

என் தாத்தா நல்ல உயரமும் அதற்கேற்றார் போல் உடல் வாகும் உடையவர் என்று சொல்வார்கள் .என் சின்ன அத்தை மீது பாசம் அதிகம் அவருக்கு .அவரை பிரியமாக ராசாத்தி என்றே கூப்பிடுவாராம் .இதில் கொள்ளை பெருமை என் அத்தைக்கு .

என் அத்தைக்கு முதல் குழந்தை பிறந்த போது தாத்தாவுக்கு அறுபத்தைந்து வயது இருந்திருக்கும் .பிரசவத்தை தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகம் இருந்ததாம் அத்தைக்கு ."பிளீடிங் ரொம்ப ஆகிக்கிட்டு இருந்தது .எங்கம்மா சொன்னா ,குளிச்சிட்டு கொஞ்சம் வெளிய வந்து உக்காரு .அசதி கொறையும்ன்னு. குளிக்கப் போனா தல சுத்தி விழுந்திட்டேன் .அறுவது கிலோவுக்கு கொறையாம வெயிட் இருந்திருப்பேன் .பூசணிக்கா விழுந்தா மாதிரி பொத்துன்னு சத்தம் கேட்டிருக்கணும் .வெளிய இருந்த எங்கய்யா ஒடனே வந்துட்டாரு .அப்படியே என்ன ரெண்டு கைலேயும் தூக்கி கொண்டு போய் ,அலாக்கா கட்டில் மேல போட்டாரு .வேட்டியெல்லாம் ரத்தம் .எம்பிள்ளைய என்ன செஞ்சீங்க ன்னு கத்திக்கிட்டே எங்கம்மா ஓடி வந்தா .அந்த வயசிலேயும் எங்கய்யாவுக்கு அவ்வளவு பலம் இருந்தது . "



தாத்தாவின் பலம் மட்டுமல்ல அவர் அத்தை மேல் வைத்திருந்த பாசமும் தெரிந்தது எனக்கு .

Wednesday 18 November 2009

எப்போதும் சொல்வதில்லை

மரங்களில் ஒரு முணுமுணுப்பு - கவனிக்க :
காற்று போலிருக்க ஓசை போதாமல் -
ஒரு நட்சத்திரம் -தேடுமளவு தூரத்தில் இல்லாமல்
தொடுமளவு அருகிலும் இல்லாமல்

ஒரு நீள -நீளமான மஞ்சள் -புல்தரை மீது.
ஒரு அரவம் -காலடிகள் போலும்
நம்முடையதைப்போல் நம் செவியடையாமல்
ஆனால் அலங்காரமாய் -இன்னமும் இனிமையாய்

திரும்பும் குறுமனிதர்களின் ஒரு விரைவு
புலப்படாத வீடுகளை சென்றடைய
இவை எல்லாமும் - இன்னமும்
நான் சொல்ல நேர்ந்தால்
நம்பமுடியாததாகவே தான் இருக்கும்.

சின்ன படுக்கையில் குருவிகள்பற்றியும்
எத்தனை காண்கிறேன் நான் என
சிறகுகள் வரை போதாத அவற்றின் இரவு ஆடைகளும்
அவை சிறகுமறைக்க முயன்றதை
நான் கேட்ட போதும்

ஆனால் எப்போதும் சொல்வதில்லை
என வாக்களித்திருக்கிறேன் நான்
எப்படி மீறுவேன் அதை ?
அதனால் நீ உன்வழி போகலாம்
நான் என் வழியில்
பாதை தவறும் என்ற அச்சமின்றி


A Murmur in the Trees — to note —
by Emily Dickinson

A Murmur in the Trees — to note —
Not loud enough — for Wind —
A Star — not far enough to seek —
Nor near enough — to find —

A long — long Yellow — on the Lawn —
A Hubbub — as of feet —
Not audible — as Ours — to Us —
But dapperer — More Sweet —

A Hurrying Home of little Men
To Houses unperceived —
All this — and more — if I should tell —
Would never be believed —

Of Robins in the Trundle bed
How many I espy
Whose Nightgowns could not hide the Wings —
Although I heard them try —

But then I promised ne'er to tell —
How could I break My Word?
So go your Way — and I'll go Mine —
No fear you'll miss the Road.

Saturday 14 November 2009

சில காயங்களின் கதை

காலையில நா கணினியில 8.30 க்கு பேர் போட்டாகனும் ,இல்லைனா சம்பளம், லீவ் ஏதாவது ஒண்ணுக்கு வேட்டு வச்சுருவாங்க எங்க எச்.ஆரில .நிகழும் விரோதி ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்து நாலாம் நாள் அதிகாலை மணி 8.20 இருக்கும் (எனக்கு அது அதிகாலை தான் )என் கணவரோட (எனக்கு வாங்கின ஸ்கூட்டி தான் நா ஒட்டாம அவரோடதாகிருச்சி ) ஸ்கூட்டியில அவர் ஓட்டிகிட்டு வர பின்னால நான் (வழக்கம் போல தான் ).சரியா ஆஸ்பத்திரி வாசலில எப்படி விழுந்தேன்னு தெரியல ஏன் விழுந்தேன்னு தெரியல .ஆனா விழுந்திட்டேன் .வண்டி என்னமோ மெதுவா தான் போய்க்கிட்டிருந்தது .அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல .


கண் முழிச்சி பாத்தா கட்டிலில படுத்திருக்கேன் ."நா எங்க இருக்கேன்"ன்னு கேக்க முடியல .ஏன்னா நல்லா தெரிஞ்ச எடம் ஆச்சே . என்னைய சுத்தி டாக்டர் ,எங்க நர்ஸ் ,எங்க கவுன்சிலர் ன்னு ஏகப்பட்ட கூட்டம் .எல்லாரும் அழற நெலமையில நின்னுக்கிட்டிருந்தாங்க (இத்தன அன்பா எம்மேல ன்னு எனக்கு தெரிய வச்ச இறைவனுக்கு நன்றி .ம்ம்ம்ம்....கொஞ்சம் மிதமான முறையில தெரிய வச்சிருக்கலாம் ).டிரசெல்லாம் ரத்தம் .முடியெல்லாம் ரத்தம் .மொகத்திலிருந்து வேற வழிஞ்சிக்கிட்டுருந்தது .காதுல வேற யாரோ ஆட்டோ ஓட்டுற மாதிரி ஒரு வலி .
பின்னணியில ரெண்டு கொரல் கேட்டது .ஒண்ணு என் கணவரோடது .அவர்கிட்ட அங்கே இருக்க டாக்டர் சொல்லிக்கிட்டிருந்தார் ...."பிரெய்ன் சி.டி ஸ்கேன் எடுக்கணும் தையல் போடனும் ".
என் கணவர் ,"இன்சூரன்ஸ் இருக்கு .
"டாக்டர்:"அப்ப மலருக்கு ஷிப்ட் பண்ணிரலாம் "
கணவர் ""சரி "
இப்ப இப்ப, இந்த முக்கியமான நேரத்தில தான் எனக்கு முழுசா சுய நினைவு வந்திச்சி (இறைவனுக்கு நன்றி )
நான் :"நா அப்போல்லோவுக்கு போறேன் .அங்க என் பிரதர் இன் லா (அக்கா கணவர் )இருக்கார் (மொகத்தில அடி பட்டிருக்கு .கொஞ்சம் அங்கங்கே கிழிஞ்சிருக்கு .இவங்கள விட்டா மொகத்தில டிராக் போட்டுருவாங்க .அப்பல்லோ பணம் வாங்கினாலும் பிளாஸ்டிக் சர்ஜன் வச்சி தையல் போடுவாங்க ன்னு தான் .அம்மாவுக்கும் வரது சுலபம் . )
டாக்டர்: "ஓகே "டிடி எல்லாம் போட்டுருங்க .

அதுக்குள்ளே எங்க ஸ்டாப் எல்லாரும் வந்துட்டாங்க .ஜே ஜே ன்னு கூட்டம் .அதுக்கு அடுத்தது என்னோட தோழி கம் என்கூட வேல பாக்குற டாக்டர் அவங்களும் வந்தாங்க .அவள பாத்ததும் எனக்கு அழுக வந்திருச்சி .என்னனாலும் மொகத்தில அடி இல்லையா ,அதான். ஊசி போடவே அரைமணி நேரம் ஆச்சு (பேஷண்ட்ஸ் பாவம் ).அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் வந்திருச்சி..வீல் சேருல வந்து ஆம்புலன்சில ஏற வெளிய வந்தா அங்க ஒரு கூட்டம் நிக்குது (எங்க மக்கள் தான்-வெளியாட்கள் காஷுவாலிடியில ஏதோ மீட்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருப்பாங்க இல்லன்னா ஏதோ வி ஐ பி போலிருக்குன்னாவது ) .எல்லாரும் என்னையே டென்ஷனா பாத்திட்டிருந்தாங்க .

ஆம்புலன்சில ரெண்டு சிஸ்டர்ஸ் (அக்கா தங்கை இல்லீங்க )வந்தாங்க என் கூட .அவங்களும் வழியற ரத்தத்த பயந்து போயி பாத்திட்டிருந்தாங்க . அங்கிருந்து என் தம்பிக்கு போன் போட்டேன் .வந்து சேருன்னு .(வீட்டம்மாகிட்ட உத்தரவு வாங்கணுமே )ஒரு வழியா அப்பல்லோ வந்து சேர்ந்தேன் (ஆம்புலன்சில வந்தது கொஞ்சம் தமாஷாவே இருந்தது ).

நா வரும் போதே எங்கம்மாவும் என் தம்பியும் இருந்தாங்க .காயத்த பாத்து பயந்து போயிட்டாங்க .தாங்க மாட்டாருன்னு வீட்டிலேயே எங்கப்பாவ விட்டுட்டு வந்திட்டாங்க . எங்கம்மா கொஞ்சம் தைரியமானவுங்க .என் தம்பி மொகத்தில டென்ஷன பாத்ததும் எனக்கு அழுக வந்திருச்சி (ஷேம் ஷேம் பப்பி ஷேம்).உடனே முதலுதவி எல்லாம் செஞ்சாங்க .ஸ்கேனுக்கு அனுப்புனாங்க .அதோட மொகத்துக்கு ஒரு த்ரீ டி ஸ்கேனும் எடுத்தாங்க (அப்பல்லோன்னா சும்மாவா ).ஸ்கேன்ல ஒண்ணும் இல்ல.(மூளையாவது இருக்காமா ன்னு கேட்டான் என் தம்பி )

கொஞ்ச நேரம் கழிச்சு பிளாஸ்டிக் சர்ஜன் வந்தாரு .அழகா இன்னொருத்தருக்கு பாடம் எடுத்துகிட்டே தையல் போட்டாரு (படுத்திருந்த டெக்ஸ்ட் புக் - நான் ). நெத்தியில ,மூக்கில ,உதட்டுல ,மோவாயில ன்னு வரிசையா .மொகத்த நல்லா தரையில தேச்சிருப்பேன் போல .எல்லாம் போட்டுட்டு வலிக்கு ஊசியும் போட்டுட்டு ...நல்லா இருக்குன்னு (அவர் போட்ட தையல் தான்)சொல்லிட்டு போனார் அவர் .ஒரு நாள் அங்க இருந்திட்டு (இல்லைனா சொத்தை எழுதி வைக்கனுமே ) வீட்டுக்கு வந்திட்டேன் .

ஒரு வாரம் சென்று திடீருன்னு ஒரே தலை சுத்து ,வாந்தி ,மயக்கம் .உக்காந்தா எந்திரிக்க சொல்லுது எந்திரிச்சா உக்கார சொல்லுது . மறுபடியும் அதே அப்பல்லோ .முதல்ல இ.என் டி டாக்டர் ,அப்புறம் ந்யூரோ சர்ஜன் (மூளையில ஏதாவது லேட் ரத்தக் கட்டு இருக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க ).அவர் தான் கூலா பாத்திட்டு ...இது அடிபட்டா சகஜம் தான் .மூளையில ஒண்ணும் தொந்தரவு இல்லன்னு சமாதானம் சொல்லி அனுப்பி வச்சாரு .அதுக்கப்புறம் ஒரு நாலு நாள் கழிச்சு அது சரியா போச்சு (அது வரைக்கும் அப்பாடி ....சோதனை மேல் சோதனை பாட்டு தான் எம்மனசுல ரீவைன்ட் ஆகி ஆகி ஓடிகிட்டிருந்துது ---மன்னிச்சிக்கோங்க வாத்தியாரே ..ஒங்க பாட்டு எதுவும் அப்ப ஞாபகம் வரல-எப்படி வரும் ?நீங்க தான் இப்படி பிழிய பிழிய சோகப் பாட்டெல்லாம் பாடிப் படுத்த மாட்டீங்களே )


பின்குறிப்பு :இப்ப நல்லா இருக்கேன் .என்ன, வாயில தையல் போட்ட இடம் கொஞ்சம் வீங்கிப் போயிருக்கு .பேச முடியல சரியா .இன்னும் கொஞ்ச நாள் ஆகும் போல .ஒரு பல்லு கொஞ்சம் ஒடஞ்சிருக்கு .வாய தொறந்தா வலிக்குது (எங்க தாத்தா என்ன பேசாமடந்தை ன்னு கூப்பிடுவாரு -நா வளவள ன்னு பேசுவேன்னு -இப்ப நிஜ பேசாமடந்தை ஆகிட்டேன் )மொகத்தில தையல் போட்ட தழும்பு கொஞ்சம் அசிங்கமா இருக்கு (என் தோழி சொன்னா திருநீறு அலர்ஜி ஆனா மாதிரி இருக்குன்னு சொன்னா --அப்ப மூக்கில ...சரி வரிசையா கோடு --தலையெழுத்த எழுதும் போது இங்க் லீக் ஆனா மாதிரி - நாளடைவில சரியாயிடும் )

எல்லாரும் திருஷ்டின்னு ஆளுக்கொரு பரிகாரம் சொல்ல, எங்கம்மா (காக்கைக்கும் ......) துர்க்கைக்கு எலுமிச்சைபழம் குத்தினாங்க ....அப்புறம் விழுந்த எடத்தில இப்ப யாரையாவது வச்சி எலுமிச்சை சுத்தி போடணுமாம் .அப்புறம் இன்னும் என்னென்ன சொல்லப் போறாங்களோ தெரியல ...

Friday 13 November 2009

ஒரு பாவமான இதயம்

ஒரு பாவமான இதயம் ,
கிழிந்து போன இதயம் ,
கந்தலாகிப் போன இதயம்,
ஓய்வுக்கென அமரும் .
மேற்கில் வெள்ளியாய்
வடிந்து கொண்டிருக்கும்
நாளில் கவனமின்றி
மெல்ல தரையிறங்கும்
இரவிலும் கவனமின்றி ..
வானில் எரியும்
விண்மீன்களையும் கவனியாமல் ...
விழித்திரையில் மோதும்
அறியாத நேர்க்கோடுகளில்
மட்டுமே கவனமாய்

அப்பக்கம் நேர்ந்த தேவதைகள்
தூசடைந்த இவ்விதயம் கண்ணுற்று
மிருதுவாய் அதன் தவிப்பை தளர்த்தி
இறைவனடி கொண்டே சேர்த்தார்.
அங்கே, வெறும்கால்களுக்கு செருப்பு.
அங்கே, பெரும் புயல் காற்றில் சேகரித்த
அலையும் பாய்மரங்களை
நீல புகலிடங்கள்
கைபிடித்தே வழிநடத்தியும் போகும்



A poor—torn heart—a tattered heart
By Emily Dickinson

A poor—torn heart—a tattered heart—
That sat it down to rest—
Nor noticed that the Ebbing Day
Flowed silver to the West—
Nor noticed Night did soft descend—
Nor Constellation burn—
Intent upon the visionOf latitudes unknown.

The angels—happening that way
This dusty heart espied—
Tenderly took it up from toil
And carried it to God—
There—sandals for the Barefoot—
There—gathered from the gales—
Do the blue havens by the hand
Lead the wandering Sails.


Thursday 12 November 2009

இப்படியும்

சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது இது .ஒரு தம்பதியர் .ஒரிசாவிலிருந்து .இவர்களுடன் ஒரு பெரியவர் .சிகிச்சைக்கென வந்திருந்தார்கள் .ஒரு மாதம் முடிந்திருக்கும் .மீண்டும் இரு இளைஞர்கள் ஒரிசாவிலிருந்து .உடன் அதே பெரியவர் .இவருக்கு மட்டும் ஆங்கிலம் தெரியும் .
உடன் வருபவர்களுக்கு ஒரியா மட்டுமே தெரியும் .

ஒவ்வொரு முறையும் இவர் வேறு நபர்களுடன் வருவதை நான் ஒரு கேள்வியுடன் பார்ப்பதை உணர்ந்து கொண்ட அவர் சொன்னார் ,"நான் அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்றவன் .எங்கள் ஊரில் எச்.ஐ.வி நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் என்று எதுவும் இல்லை .அதனால் நோய்க்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களை நான் இங்கே அழைத்து வருகிறேன் .அவர்கள் கொஞ்சம் தேறியதும் அவர்களை அங்கேயே சிகிச்சையை தொடரச் செய்கிறேன் ."

எச்.ஐ.வி என்ற பெயரை சொல்லவே கூச்சப்படும் பலர் இருக்க வயதான காலத்தில் இவ்வாறு சேவை செய்ய இப்படியும் சிலர் .