Monday 9 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை




இதை எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை தான் .ஆனா பொறுமையா யோசிக்க இன்னிக்கு தான் நேரம் வந்திச்சு .சரியா யோசிக்காம அரைகுறையா எழுதக் கூடாது இல்லையா ?இத ஒரு தொடர் மாதிரி எழுதலாமா இல்ல சின்னதா முடிச்சிக்கலாமா ன்னு இன்னமும் முடிவு பண்ணல.எழுத எழுத பாத்துக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருக்கேன் .

சின்ன வயசுல இந்த ஃபேரி டேல்ஸ் படிக்கணும்ன்னா ரொம்ப பிடிக்கும் எனக்கு .அதேலேயும் குறிப்பா அந்த ரபுன்சல் கதை .படிக்கும் போதெல்லாம் ஒரு டவர் மேலேருந்து கூந்தல கீழ போடணும் ன்னா அது எவ்வளவு நீளமா இருந்திருக்கணும் ?அத பிடிச்சி மேலே ஏறனும் னா தல வலிக்காதா ?இல்ல அந்து போகாதா ?இதெல்லாம் எனக்கு வந்த சில சந்தேகம் தான் .


நா பிறந்தப்போ, என்னைய வந்து பாக்கறதுக்கு முன்னாடியே ,நா பிறக்கறதுக்கு முன்னாடியே அதுவும் கூட தப்பு ,கல்யாணத்துக்கு முன்னாடியே என்னோட பேர ,முடிவு செஞ்சாங்க எங்கப்பா .ஒரு வேளை பார்த்திருந்தா வேற பேரு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் .ஏன்னா நா பிறந்தப்ப என்னோட தலையில இருந்ததே நாலு முடி தான் .அப்ப இந்த பேர் பொருத்தம் இடிக்குமே !பெயர் ராசியோ என்னமோ பூங்குழலி ன்னு பேரு வச்ச நேரம் என்னோட நாலு முடி நிஜமாவே கூந்தாலாயிருச்சு . இதுக்கு பார்பர் அடிச்ச மூணு மொட்டையும் கூட காரணமாயிருக்கலாம் (நாங்க பகுத்தறிவாளருங்க) .http://poongulali.blogspot.com/2008/08/blog-post.html.


கொஞ்சம் வெவரம் தெரியுற வயசு வரைக்கும் என்னோட முடிய அதிக நீளமா வளர விடாம கட் செஞ்சே வச்சாங்க எங்கம்மா.தோளுக்கு கொஞ்சம் மேல வரைக்கும் இருந்தது அதோட நீளம் .முன்னாடி அந்த காலத்து மங்கி கிராப் .இத என்னோட எதித்த வீட்டு ஆண்ட்டியே கட் பண்ணி விடுவாங்க (பியூட்டி பார்லரெல்லாம் சினிமா ஸ்டார்ஸ் மட்டும் போற இடமாயிருந்துது அப்ப ). இதுல நடுவுல கொஞ்ச நாள் ஜட போடுற அளவு வளந்து போன
என்னோட முடிய என்னோட சித்தியும் அம்மாவும் ஜடையோட நா அழ அழ கட் பண்ண ( child abuse ?)இன்னிக்கி வரைக்கும் என் முடி கோணல் மாணல் தான். என்னோட முடிய என்ன நீளத்துல வச்சிக்கனும்ன்னு முடிவு பண்ண எனக்கு உரிமை இருக்குன்னு கூட தெரியாத மண்டாயிருந்திருக்கேன்.

இப்படி மண்டையில மங்கி கிராப்பும் மனசுல ஜட ஆசையும் வச்சுக்கிட்டு நா இருந்த காலத்துல தான் பொன்னம்மா வந்தா எங்க வீட்டுல வேலை பாக்க .

இப்ப யோசிச்சு பாத்ததுல இத ரெண்டு மூணு பாகமா பிரிச்சு எழுதலாம் ன்னு நினைக்கிறேன் .ஏன்னா இது என்னோட நீள கூந்தல் பத்தின நீள கதையில்லையா ?




No comments: