Tuesday 7 October 2014

அம்மாவும் அரெஸ்ட்டும் சதிகளும் -The Conspiracies

பதினெட்டு வருஷம் எப்படி எப்பிடியோ எங்க எங்கயோ இழுத்து அம்மாவோட வழக்கு முடிவுக்கு வந்தது நாம  எல்லாரும் அறிந்தது தான் .கேஸ் நடந்தது தண்டனை கெடச்சுதுங்கறதை தாண்டி ,இதுக்கு தினத்துக்கு ஒரு போராட்டமும் தினம்  ஒரு சதி திட்ட பின்னணியும்  நமக்கு சொல்லப்படுது . இத பத்தி கொஞ்சம் யோசிப்போம் .இதுல இன்னைக்கு மீண்டும் ஜாமீன் வேற மறுக்கப்பட்டிருக்கு .

1.இது அம்மாவே திரும்ப திரும்ப சொன்னது தான் .அரசியல்  சதி என்ற முது பெரும் தியரி .அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்குகள் புனையப்பட்டது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும் வழக்குகளுக்கு அடிப்படை இருந்தது   அன்றைய ஆட்சியை காண நேர்ந்த அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் இது இந்த தீர்ப்போடு முடிந்துவிடவில்லை .இனி வரும் காலங்களிலும் இது பலமுறை பேசப்படும் என்பதிலும் சந்தேகமில்லை .

2. இந்த தியரி புதுசு .காவிரி நடுவர் மன்ற ஆணையை  gazetteல் வெளியிட செய்ததற்கு கோபம் கொண்ட கர்நாடக அரசு இந்த விதமாக அம்மாவை பழிவாங்கியது என்பதே  தியரி நம்பர் டூ .அதற்கு வலு சேர்க்கும்  விதமாக அம்மா சிறையில் தண்ணீர் கேட்ட போது  குடத்தில் இருக்கும் காவிரி தண்ணீரை குடிக்க சிறை அலுவலர் சொன்னதாக செய்திகள் (?) வேறு .அதோடு அம்மா அந்த ஆணையை கையில் பிடித்தபடி இருக்கும் போஸ்டர்கள் என்று இந்த தியரி புது பூச்சோடு வலம் வருகிறது .

3.நல்லா யோசிச்சு பாத்தா இந்த தீர்ப்புல நேரடியா பலன் பெற்றது ஓபிஎஸ் தான் .மோசமான வழக்கறிஞர்கள ஏற்பாடு செஞ்சு ,கேஸ்ஸ தோக்கடிச்சு ,அம்மாவை உள்ள தள்ளி ,இவரு முதல்வராகி -இப்படி நீளுது இந்த தியரி .

4.அடுத்தது ஒரு டாக்ஸி டிரைவர் சொல்ல கேட்ட அட்ரா சக்க தியரி ."மோடி அம்மாக்கு வேண்டியவர் .மோடி ஊர்ல இல்லாத நேரமா  பார்த்து இந்த பாஜக காரங்க அம்மாவ கேஸ்ல தோக்கடிச்சு உள்ள போட்டுட்டாங்க ."

5.எனக்கு பிடிச்ச தியரி இது .இந்த தேர்தல்ல மோடி அலை  கரை சேர முடியாம போனது நம்மூர்ல மட்டும் தான் .என்னடா இந்தம்மா இப்படி நம்பள ஜுஜுபி ஆக்கியிருச்சேன்னு கோபப்பட்ட பாஜக ,கேஸ் என்னமோ நிஜம் தான் ஆனாலும் ,வழக்கை இந்த நேரத்துல முடிச்சு, அம்மாவ உள்ள தள்ளி  ,தமிழ் நாட்டில ஆட்சிய பிடிக்க முடியாம போனாலும் ,ஏதோ கால் பதிக்கலாம்ன்னு எடுத்த முயற்சியோ என்னவோ ?இப்ப இதுக்கு வலு சேக்குற மாதிரி சில விஷயங்கள்  இருக்கு ..

முதல - முக்கிய எதிர்கட்சியான திமுகவே அடக்கி வாசிக்கும் போது இந்த பாஜக குறிப்பா தமிழ்நாட்டுக்காரங்க ,சட்டம் ஒழுங்கு அது இதுன்னு உதார் விடுறது .அப்புறம் ,நாங்க தமிழ்நாட்டுல கால் பதிப்போம்ன்னு தில்லா  பேசுறது .அப்புறம் இன்னைக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது .இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் .அம்மா உள்ளே ,ஏற்கெனவே திமுக தலைக்கு மேல கத்தி மாதிரி 2G  வழக்கு  இருக்கு .இந்த ரெண்டு சைடும் இப்படி வீக்கா இருக்கிறப்ப ரஜினியை கூட்டிட்டு வந்து தமிழ்நாட்டுல டூயட் பாடலாம்னு நினைக்கிறாங்களோ என்னவோ ?

6.கடைசியா நாம எப்பவும்  பல கேப்டன் படங்கள்ல பார்த்த அந்நிய நாட்டு சதி ஆங்கிள மறந்துட கூடாது .அம்மா ஆட்சியில ஏக சுபிட்சமா இருக்கிற  தமிழ்நாட்டோட வளங்களை சூறையாட அந்நிய ஆட்சியாளர்கள் செய்த சதி .ஒரு பலம் மிக்க தலைமை செயலிழக்கும் போது நாட்டில்  விளையும் குழப்பங்களின் ஆதாயம் தேடும் தியரி -
அப்படி இருந்தா நமக்கு ஒரே கதி கேப்டன் தான் .


No comments: