tag:blogger.com,1999:blog-21739184778140226812024-02-20T22:44:12.050+05:30பூச்சரம்உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்துபூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger403125tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-6951026421274061462024-01-13T13:23:00.000+05:302024-01-13T13:23:17.494+05:30 Chennai Bookfair<p>நேற்று Chennai Bookfair போனவங்க பிங்க் சுரிதார் +கண்ணாடி +backpack +shoes போட்ட ஒரு பெண்மணியை காண நேர்ந்திருக்கலாம் .நான் தான் . சென்னை bookfair போய் வந்தாச்சு .நுழைவு சீட்டு 9ஆம் எண் கவுன்ட்டரில் கிடைக்கும்னு அறிவிக்க ஆரம்பிச்சு நான் வெளியே வரும் போது மூணோ நாலோ அறிவிச்சிட்டிருந்தாங்க.சுழற்சி முறை போல .நாலு மணி போல போனேன் .7 மணி போல கிளம்பியிருப்பேன் .</p><p>கூட்டம் குறைவு தான் .நடக்க நிறைய இடம் .ஒரு நாய் உள்ள திரிஞ்சிக்கிட்டு இருந்தது .அதுக்கு நாலு பேர் விளையாட்டு காட்டிட்டு இருந்தாங்க .அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு ? ஸ்டால்ஸ் விசாலமா இருந்தது .புதுசா எதுவும் பார்த்ததா நினைவு இல்ல .</p><p>சுயமரியாதை பதிப்பகத்துல எப்பவும் போல எட்டாத இடத்துல பெரியார் புத்தகங்களை வச்சிருந்தாங்க .குறியீடு போல .நான் பெண்ணுரிமை பாகம் 1 கேட்டப்ப (யார்கிட்ட கொடுத்தேன்னு நினைவு இல்ல ),வழக்கம் போல தேடி கண்டுபிடிச்சு கொடுத்தாங்க .ஆசிரியர் வாழ்க .இத பார்த்திட்டிருந்த ஒருத்தர் பெரியாரை பத்தி ரெண்டு நிமிஷம் பேசறீங்களான்னு கேட்டு ,பதிவு பண்ணிக்கிட்டார் . </p><p>தேசாந்திரியில எஸ்.ரா இல்லாதது வருத்தமா இருந்தது .அவரும் மனுஷும் பெரும்பாலும் இருப்பாங்க .புக் வாங்கிட்டு வரதுக்குள்ள வந்துட்டார் .அவர்கிட்ட கையெழுத்தும் வாங்கி போட்டோவும் எடுத்தாச்சு.நெடு நாள் ஆசை திருநாளாச்சு மொமன்ட் .மூக்க உறிஞ்சிட்டுகிட்டு இருந்தார் . மேலுக்கு முடியல போல .அப்பக்கூட முகம் சுழிக்காம சிரிச்சிக்கிட்டே பேசினார் . கூட்டத்துல மாஸ்க் போட்டுக்கோங்கனு வாய் வரைக்கும் வந்தது .ஓரமா அதக்கிட்டேன் .எவ்வளவோ தெரிஞ்சவருக்கு இது தெரியாதா ?</p><p>புத்தர் சம்பந்தமான புத்தகம் நிறைய இருந்த மாதிரி தோணிச்சு .ஏறக்குறைய எல்லா ஸ்டாலிலேயேயும் பெரியார் ,அம்பேத்கர் பத்தின புத்தகங்கள் இருந்தது .நிறைய Tintin collections பார்த்தேன் .சில பாலஸ்தீனம் சம்பந்தமான புக்ஸ் தென்பட்டது .அதோட மோடி பத்தி சில புக்ஸ் .அநேகமா எதிர்த்து எழுதினது.ரெண்டே இடத்துல ராகுல் காந்தி போஸ்டர் சின்னதா இருந்தது .இந்த பாரத் ஜோடோவை இந்நேரத்துல புக்காகிருக்கலாம் .</p><p>அண்ணா படைப்புகள் தொகுப்புல ,தனியா ஒரு புத்தகம் தர முடியாதுனு சொல்லிட்டாங்க .134ம் வாங்க முடியுமா ?ஏன் நீங்க பெரியார் புத்தகங்களை தர மாதிரி தனியா தரக்கூடாதுனு கேட்டுட்டு வந்தேன் (நாட்டுக்கு நல்லது சொல்வோம் ).டிநகர்ல பதிப்பகத்துல அப்படி தருவாங்களாம் .இங்க இல்லையாம் .தனியா படிச்சா continuity இருக்காதாம் .கட்டுரை தொகுப்புல என்ன continuity ?</p><p>வலைபேச்சு பிஸ்மி புத்தகங்கள் கிடைக்கும்னு ஒரு ஸ்டால்ல அறிவிப்பு வச்சிருந்தாங்க !exit கோபிநாத் enter பிஸ்மி போல .</p><p>சிலை ஸ்டால் இல்லை ?கருஞ்சட்டை பதிப்பகத்துல பெரியார் சிலை இல்லை.தென்கச்சி ,சுகி சிவம் பெரிய அளவுல இல்ல .மல்லிகா பத்ரிநாத் ஸ்டால்லாம் காலியா இருந்தது .புக்கும் இல்ல ஆளும் இல்ல .முன்னெல்லாம் கூட்டம் அம்மும் .swiggy zomato வந்தப்புறம் பழசை ரீடிசைன் பண்ணுற தேவை ஒழிஞ்சிருச்சி போல .சமீபமா பெருசா பேசப்படும் Outlive பாக்கவே முடியல .</p><p>அரங்கத்துல பாரதி பாஸ்கர் .தட்டி காலத்து சினிமா விளம்பரம் மாதிரி அறிவிச்சிக்கிட்டே இருந்தாங்க .ஆளே கிடைக்கலையா ? சினிமா சம்பந்தப்பட்ட ஒரு ஸ்டால்ல ஜெகஜோதியா லைட்டிங் செஞ்சிருந்தாங்க .லேசா எட்டிப்பாத்தப்ப விசாரணை திரைக்கதைனு ஒரு புக் சட்டுனு கண்ணுல பட்டது .படத்தை பாத்தே மீள முடியல ,இதுல படிக்கறத நினைக்கவே முடியல .</p><p>சில ஸ்டால்ல உள்ள வந்து பாருங்கன்னு கூப்பிட்டாங்க .இதுக்கு முன்னாடி இப்படி யாரும் அழைச்சதா நினைவு இல்ல.ஒரு ஸ்டால்ல புக் வாங்கலைன்னா பரவாயில்லை ,டயர்ட்டா இருந்தா சேர்ல உக்காந்துக்கோங்கன்னு எழுதியிருந்தாங்க .அட !</p><p>காதுல விழுந்தது - குலுக்கல்ல அத்தனை குளறுபடி பண்ணினாங்க இப்பவுமா ?தமிழ்ல சில வருஷமாவே புதுசா சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பெருசா வராம ஒரு தேக்கம் உண்டாகிருச்சி .</p><p><br /></p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-45122296163612346042023-08-02T16:43:00.003+05:302023-08-02T16:46:25.295+05:30தேவி <p>காலைல ரவுண்ட்ஸ் போகும் போது ஒரு பேஷண்டோட மனைவி என்கிட்ட தனியா பேசணும்னு கேட்டாங்க .அறைக்கு வரும் போது கூடவே வந்தாங்க , கணவரோட உடல்நலம் பத்தி சில விஷயம் கேட்டப்புறம் ,"இதுக்கு வரல,உங்க கிட்ட வேற ஒண்ணு சொல்லணும் .நான் நாப்பது வருஷமா காலைல பூஜை பண்றேன் .அதோட மெடிட்டேஷனும் பண்றேன் .தினம் நாலு மணி நேரம் .முடியற வரைக்கும் சாப்பிடவே மாட்டேன் .சுகர் இருந்தா கூட இத எப்படி சமாளிக்கறனு என் சொந்தக்காரங்க எல்லாம் கேப்பாங்க .ஆனா நான் ஒருநாள் கூட விட்டதில்லை .அது என்னோட குருவோட அருள் .இப்ப நானே ஒரு குருவா இருக்கேன் .</p><p>ஏன் சொல்ல வந்தேன்னா ,ஒரு பட்டு புடவை .பூஜைல வச்சது .பிரசாதம் மாதிரி . பிரசாதம் யார்கிட்ட கொடுக்கணும்னு மெடிட்டேஷன்ல தெரியும் .நான் கண்மூடி பார்த்தப்ப உங்க முகம் தான் தெரிஞ்சது .என்ன டாக்டரம்மா முகம் தெரியுதேனு என் பிள்ளைங்கள நினைக்க பார்த்தேன் .ஹூஹும் .அப்பக்கூட உங்க முகம் தான் தெரிஞ்சது ,அவங்க முகம் தெரியவே இல்லை .அப்ப அத நான் உங்களுக்கு தான் கொடுக்கணும் .</p><p>அந்த புடவையை எடுத்துட்டு வரேன் .பத்திரமா பூஜைல வச்சுக்கோங்க .உங்களுக்கு நல்லதே நடக்கும் ."</p><p>எனக்கு இத கேட்டதும் ,சத்தியஜித் ரேயோட தேவி படம் நினைவுக்கு வந்தது .ஷர்மிளா தாகூரோட கணவர் கொல்கொத்தால படிச்சிட்டிருப்பாரு .இவங்க மாமனாருக்கு பணிவிடை செஞ்சுகிட்டு கிராமத்துல இருப்பாங்க .நல்லா கவனிச்சிக்கவே திடீர்னு மாமனாருக்கு கனவுல மருமக துர்க்கையா தெரிஞ்சிருவாங்க .அவரு உடனே இவங்க தான் தேவின்னு ,ஊருக்கே அம்மனாக்கிருவாரு .இதுல ஒரு கட்டத்துல வர போற ஆபத்தை புரிஞ்சிகிட்ட கணவர் அவங்கள "நீ தேவியில்லைனு தெரியறதுக்குள்ள வா ,நாம ஊரைவிட்டு போயிரலாம்"னு கூப்பிடறப்ப ஷர்மிளா தாகூர் சட்டுனு கேப்பாங்க "நான் தேவியா இருந்தா ?"</p><p>மருத்துவதுறைல ,இப்படி தேவியாகும் ஆபத்து அதிகம் .</p><p><br /></p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-3674808570422941702022-10-05T21:06:00.000+05:302022-10-05T21:06:18.456+05:30 விஜயதசமி <p>சின்ன வயசிலிருந்து வீணை மேல ஒரு மோகம் .என் கிளாஸ்மேட் ராதிகா வீணை படிச்சிட்டிருந்தா .ஆனா அவங்க வீணை மிஸ் எங்க வீட்லேருந்து ரொம்ப தூரம் ."எங்க வீணை மிஸ் உங்க வீட்டுக்கிட்ட வீடு மாறிட்டாங்க"னு ராதிகா ஒருநாள் சொன்னப்ப ஏகப்பட்ட சந்தோசம் .எங்கன்னு பார்த்தா அடுத்த தெருல .கிரிக்கெட்டர் ரங்காச்சாரியோட (அந்த நாள்ல இவர் தான் ரேடியோ பாலாஜி மாதிரி -ஆனா மழலை குரல் -டீம்ல இருந்தவர் )மகள் தான் வீணை மிஸ் ஜெயலக்ஷ்மி என்கிற ஜெயாம்மா ஆன்ட்டி .அதே கம்பவுண்ட்ல இன்னொரு வீடு கட்டிக் குடி வந்திருந்தாங்க .</p><p>இப்ப வீட்ல பெர்மிஷன் கிடைக்கல .கொஞ்சம் பூசுனாப்ல இருந்தேன் .பத்தாவது வேற .வெயிட் குறைஞ்சா போகலாம்னு கண்டிஷனோட விடுமுறைல போக ஆரம்பிச்சேன் .(வெயிட் குறைஞ்சதானு நினைவு இல்ல ).</p><p>மத்தியானமா கிளம்பிப் போவேன் .பட்டுப்பாவாடை தாவணி ,வீட்ல பறிச்சு கட்டின மல்லிப்பூனு மங்களகரமா ஏறக்குறைய தினமும் .வீணைய விட பிடிச்சது எங்க வீணை மிஸ்ஸை .எக்கச்சக்கமா கதை பேசுவோம் .அவங்க வீட்ல அஞ்சாறு வீணை இருந்தது .பாய் விரிச்சு உக்காந்து ஆளுக்கொரு வீணையை எடுத்து வச்சுக்குவோம் .ரெண்டு மீட்டு மீட்டிட்டு வீணையை மடியிலேயே வச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் பேசுவோம் .அப்புறம் வீணையை கீழ வச்சுட்டு பேசுவோம் ,அப்புறம் திரும்ப பழைய பாடத்தை வாசிச்சிட்டு திரும்ப பேசுவோம் ,அப்புறம் புதுப்பாடம்.அவங்க மக என் வயசு தான், வெளிய யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்தா -"பேச்சு சத்தமா கேக்கறதே ,யாரு?பூங்குழலியா இருக்கும் .வாசிக்கறாளோ இல்லையோ ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பா "னு .</p><p>நான் ரொம்ப சுமாரா தான் வாசிப்பேன் .அதோட பெரிய இசை அறிவெல்லாம் கிடையாது .கணக்கு வாய்ப்பாடு மாதிரி நோட்ஸ் மனப்பாடமா தெரியும் .என் தம்பி சொல்லுவான் "யாராவது செத்துட்டா டிவில உன்னை வாசிக்க அனுப்பலாம்"னு (அப்ப பெரிய தலைவர்கள் இறந்துட்டா DD எல்லா நிகழ்ச்சியையும் ரத்து பண்ணிட்டு சாரங்கி வதன்னு ,சாரங்கிய போட்டு இழுத்திட்டிருப்பாங்க -அந்த கிண்டல் ).ஆனா ஒருநாள் கூட என்னை குறை சொன்னதே இல்லை .நோட்ஸ் எப்படி மறக்காம வாசிக்கறேனு என்னோட ஒரே பாசிட்டிவான அதையே தான் சொல்வாங்க .உன் தம்பிக்கென்ன தெரியும் நீ நல்லா தான் வாசிக்கறேனு வேற . தினம் கிளாஸ்சுக்கு போனதுல வர்ணம் கீர்த்தனைனு ஜெட் வேகமா முன்னேறிட்டேன் . "என்னடி இவளே ,இத்தனை நாள்ல இவ்வளவு கத்துண்டுட்ட!"னு ஒருநாள் ஆன்ட்டியே ஷாக்காயிட்டாங்க .</p><p>கல்லூரிலாம் போனப்புறம் முன்ன மாதிரி போக முடியல .அப்புறம் ஆண்ட்டியும் வீடு மாத்தி பம்மல் கிட்ட போய்ட்டாங்க .வீணை சொல்லிக்கொடுக்கறதையும் அதுக்கு முன்னமே நிப்பாட்டிட்டாங்க.என் வீணை சில வருஷம் முன்னால ரிப்பர் பண்ணி வச்சேன் .ஆனா எந்த ஸ்வரத்துக்கு எங்க இழுக்கனும்ங்கறதெல்லாம் மறந்து போச்சு .</p><p>விஜயதசமி எப்பவுமே ஸ்பெஷல் .அன்னைக்கு கண்டிப்பா புதுப்பாட்டு பழகணும் .பழசு பாதில நின்னாலும் கூட .கண்டிப்பா வரவீணாவும் ,விநாயகா நின்னுவும் வாசிக்கணும் .அன்னைக்கு ஆண்ட்டி வீடே அலங்காரம் பண்ணி ஜேஜேனு இருக்கும் .எல்லா ஸ்டூடன்ட்ஸும் கண்டிப்பா வருவாங்க. .எல்லாருக்கும் ஆசீர்வாதம் உண்டு .அத்தனைக்கும் மேலா அவங்க அன்பும் வாஞ்சையும் மறக்கவே முடியாதது .Miss you Aunty ...</p><p>🎶🎶 அந்த நாளும் வந்திடாதோ ....🎶🎶</p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-74231316341762860472022-02-04T12:47:00.002+05:302022-02-04T12:49:54.970+05:30நீதி <p> நீதி ஒரு குருட்டு தேவதை </p><p>கறுப்பர்கள் நாங்கள் அறிந்தது தான் </p><p>ரெண்டு சீழ்ப்பிடித்த சிரங்குகள் ஒளிக்கும் அவள் கட்டு </p><p>எப்போதோ அவை கண்களாக இருந்திருக்கலாம் .</p><p><br /></p><p><b>Justice </b></p><p>That Justice is a blind goddess</p><p>Is a thing to which we black are wise:</p><p>Her bandage hides two festering sores</p><p>That once perhaps were eyes.</p><p><br /></p><p><b>Langston Hughes</b></p><div><br /></div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-20660219820637846792021-07-20T23:23:00.000+05:302021-07-20T23:23:29.664+05:30Coffee with Sasi<p>அதிகமா பாக்கல ஒரு episode தான் .</p><p>திமுக ஆட்சி கொஞ்சம் செட்டில் ஆகி அந்த பரபரப்பு குறைஞ்சிருக்க நேரத்துல நல்ல டைமிங் தான் .</p><p>ஆனா நமக்கு பாக்க கொஞ்சம் கோட்டை விட்ட மாதிரி தெரியறதால சிலபல இலவச அறிவுரைகள் (பிளாக்ல வேற போஸ்ட் எழுதி நாளாகுது )</p><p>ப்ளஸ் </p><p>டைமிங் </p><p>ஜெவோட சில போட்டோஸ் /விடீயோஸ் </p><p>சில பல தனிப்பட்ட உரையாடல்கள் </p><p>அந்த backdrop -சுவர் முதல் vase வரை 💓💓💓</p><p><br /></p><p>மைனஸ் </p><p>அந்த புடவை -ஜெ ஆரம்பத்துல கட்டின garden vareli போல (மெட்டீரியல் கிழியவே கிழியாது )-சென்டிமெண்ட் ?நல்ல அடர்வா சின்ன பார்டர் வச்ச பட்டுப்புடவை கட்டியிருக்கலாம் .கெத்தா இருந்திருக்கும் .</p><p>பிளவுஸ் - கண்ணாம்பா காலத்து மெட்டிரியல் .</p><p>அந்த ஹேர்ஸ்டைல் - சரியாக condition செய்யப்படாத முடி லூசா விடவோ /போனி டெயில்க்கோ சரிவராது .</p><p>அப்புறம் அந்த ஹேர் கலர் - மோசமான தரம் -ரொம்ப அடர் கருப்பு (கூந்தல் கருப்புனு வாத்தியாரே பாடியிருந்தாலும் வயசுக்கு கொஞ்சம் வெள்ளை முடி அழகு )</p><p>ரொம்ப முக்கியமா சாய்ஸ் of anchor - யோசிக்காம கோபிய பிக்ஸ் பண்ணிருக்கலாம் .அவரு இயல்பா கேக்குற மாதிரி இருக்கும் .இயல்பா பேசுறப்ப கொஞ்சம் நல்லாவே தான் பேசுறாங்க .ஆனா ஹரி பேச விடமாட்டேங்குறாப்பல .அதோட அவரோட நோட்ஸ் செக் பண்ணி அந்தம்மாவ ப்ராம்ப்ட் பண்ணிட்டே இருக்காப்ல -LKG பிள்ளைங்க ஸ்டேஜ்ல ஆடுறப்ப சைடுல ஆடுற டீச்சர் மாதிரி .கண்ணுல தண்ணி /கேரம் போர்ட் /கொடநாட்டில் குழந்தை இன்ன பிற .அதனாலேயே ரொம்ப rehearsedஆ தெரியுது .மொத்தத்துல சசி ஒரு terror /ஆளுமை /குயின் மேக்கர்ங்கற இமேஜ் டோட்டல் டேமேஜ் .</p><p>டவுட்ஸ் </p><p>இந்த பேட்டி இவங்கள ஆளுமையா establish பண்ற மாதிரி தெரியல .அப்ப இதோட நோக்கம் சிம்பதியா ?</p><p>அதோட இன்னும் என்னெல்லாம் வீடியோ வச்சிருக்காங்களோ?</p><p>இத்தனை வருஷத்துல ஜெயலலிதாவோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ கூட இவங்க கத்துக்கலையே வேற எத கத்துக்கிட்டு இருக்கப்போறாங்க ?</p><p><br /></p><p><br /></p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-47252943436186417892021-06-02T15:08:00.002+05:302021-06-02T15:28:17.743+05:30எங்கே தேடுவேன் <p>எங்கே தேடுவேன் </p><p>எங்கே தேடுவேன் </p><p>வேக்சினை எங்கே தேடுவேன் </p><p>கொரோனா தடுக்க </p><p>உதவும் வேக்சினை </p><p>எங்கே தேடுவேன் </p><p>18 வயது முதல் அனைவர்க்கும்</p><p>தேவைப்படும் வேக்சினை </p><p>எங்கே தேடுவேன் </p><p><br /></p><p>பாரத் பயோடெக்கில் சிக்கிக் கொண்டாயோ </p><p>சீரம் இன்ஸ்டிட்யூட்டில் குடிப் புகுந்தாயோ </p><p>வேக்சின் பாலிசியில் கிறுகிறுத்தாயோ </p><p>ஒன்றிய அரசிடம் இல்லாத வேக்சினை </p><p>எங்கே தேடுவேன் </p><p><br /></p><p>அண்டை நாடுகளில் டோஸ்கள் ஆனாயோ </p><p>கார்ப்பரேட் கைகளில் ஹோர்டிங் ஆனாயோ </p><p>பிராமின் கேம்ப்புகளில் குடிப்புகுந்தாயோ </p><p>மாட்டு மூத்திரத்தில் கரைந்து போனாயோ </p><p>எங்கே தேடுவேன் </p><p><br /></p><p>குஜராத் மாடலில் மறைந்து கொண்டாயோ </p><p>பிகார் மாடலில் பெருகிப்போனாயோ</p><p>உத்தர பிரதேசத்தில் தேடப் போனாயோ </p><p>கங்கையில் புண்ணியமாய் மிதந்து போனாயோ </p><p>எங்கே தேடுவேன் </p><p><br /></p><p>தேர்தல் பரப்புரையில் தேய்ந்து போனாயோ </p><p>தாடியில் சிக்கி தொலைந்து போனாயோ </p><p>cowin ஆப்புகளில் கலங்கிப்போனாயோ </p><p>ஆன்டி வாக்சர்ஸால் அழிந்து போனாயோ </p><p>எங்கே தேடுவேன் </p><p><br /></p><p><br /></p><p>நன்றி </p><p>கலைவாணருக்கும் கவியரசருக்கும் மெல்லிசை மன்னர்களுக்கும் </p><p><br /></p><p>https://youtu.be/LUzOsShOKjQ</p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-3620237029572768742021-05-31T00:24:00.001+05:302021-05-31T00:24:41.692+05:30ஏக்கம் <p>அந்த அழகி இருந்தபோது ,</p><p>பூக்களால் நிறைந்திருந்தது அறை </p><p>அவள் போய் விட்டாள் ,காலியாக கிடக்கிறது படுக்கை </p><p>பூ தைத்த கம்பளி சுருட்டிக்கிடக்கிறது படுக்கையில் </p><p>ஒருவரும் தூங்குவதில்லை </p><p><br /></p><p>மூன்று வருடங்கள் போய்விட்டன </p><p>அந்தவாசம் இன்னமும் இருப்பதாக முகர்கிறேன் </p><p>அந்த வாசம் முடிந்துவிட்டது, அழியவில்லை .</p><p>அவள் போனாள் ,வருவதில்லை .</p><p>ஏக்கம் ,விழும் இலையை பழுக்க வைக்கிறது .</p><p>வெள்ளைப் பனி கோர்க்கிறது பச்சை புல்லை.</p><p><br /></p><p>Long yearning </p><p>By Li Po </p><p><br /></p><p>When the beautiful woman was here, the hall was filled with flowers,</p><p>Now the beautiful woman's gone, the bed is lying empty.</p><p>On the bed, the embroidered quilt is rolled up: no-one sleeps,</p><p>Though three years have now gone by, I think I smell that scent.</p><p>The scent is finished but not destroyed,</p><p>The woman's gone and does not come.</p><p>Yearning yellows the falling leaf,</p><p>White dew beads the green moss.</p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-36479358307146752742021-05-31T00:09:00.001+05:302021-05-31T00:09:07.517+05:30பூக்கள்<p><br /></p><p>குழந்தைகள் சலித்துவிட்டதாக</p><p>சொல்லிக்கொள்பவர்களுக்கு </p><p>பூக்கள் இல்லை </p><p><span style="background-color: white; color: #222222; font-family: Optima, Noto, Helvetica, "sans serif";"><br /></span></p><p><span style="background-color: white; color: #222222; font-family: Optima, Noto, Helvetica, "sans serif";">For those who proclaim</span></p><p><span style="background-color: white; color: #222222; font-family: Optima, Noto, Helvetica, "sans serif";">they've grown weary of children,</span></p><span style="background-color: white; color: #222222; font-family: Optima, Noto, Helvetica, "sans serif";">there are no flowers</span><div><span style="background-color: white; color: #222222; font-family: Optima, Noto, Helvetica, "sans serif";"><br /></span></div><div><span style="background-color: white; color: #222222; font-family: Optima, Noto, Helvetica, "sans serif";"> By Basho</span></div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-7155225186717786802021-05-30T22:49:00.000+05:302021-05-30T22:49:33.399+05:30கதையல்ல நிஜம் <p>டெங்கி தமிழ்நாட்டில பரவல்ல இருந்த நேரம்.அரசு பெரிய அளவுல நிலவேம்பு குடிநீரை பரபரப்பா கொடுத்திட்டிருந்தாங்க .ஒரு பிரபல தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தாங்க .அவங்க வழக்கமான பேனல் தான் .அவங்க அரசியல் விமர்சகர் /டாக்டர் ,பிரபல சித்த மருத்துவர் ,அதிமுக சார்பில ஒரு டாக்டர் ,நான் .</p><p>உள்ள போனதுமே நெறியாளரும் சித்த மருத்துவரும் ,"நாம இந்த ஆங்கில மருத்துவத்த அடிச்சி பேசிறனும்"னு பேசிக்கிட்டாங்க .நிகழ்ச்சி வழக்கமான வகையில ,ஆனா பேசுறதுக்கே சொற்ப நேரமே கொடுத்தாங்க .எப்ப பேசினாலும் சித்த மருத்துவர் இடைமறிச்சி பேசிக்கிட்டே இருந்தாரு .நெறியாளரும் தடுக்கல .</p><p>அப்ப டிவிட்டர்ல யாருக்கும் நான் தான் அந்த நிகழ்ச்சியில பங்கேற்ற டாக்டர்ன்னு தெரியாது .இங்கே பிரபல ட்வீட்டர்கள் பலரும் நிலவேம்பு குடிநீருக்கு ஆதரவா ஆக்ரோஷமா களமாடிட்டு இருந்தாங்க .அதிலேயும் ஒருத்தர் அல்லோபதி டாக்டர்களுக்கு அவங்க களமோ என்னவோ சொன்னாரு பறிபோயிடும்ங்கற பயம் நல்லாவே தெரிஞ்சதுனு சொன்னாரு .அப்புறம் முன்னோர்கள் ஒண்ணும் முட்டாளில்லை டைப் விவாதங்கள் வேற .நானும் ரெண்டு மூணு ட்வீட் போட்டுட்டு கடந்து போய்ட்டேன் .</p><p>போன வருஷம் கொரோனா வந்தப்ப இப்படித்தான் கபசுர குடிநீர் அறிமுகம் ஆச்சு .என்ன டோஸ் எத்தனை நாளைக்கு குடிக்கனும் எத்தனை நேரம் குடிக்கனும்ங்கிற எந்த தெளிவும் இல்ல .அவங்கவங்க அவங்கவங்க இஷ்டம் போல பயன்படுத்திட்டிருந்தாங்க/ இருக்காங்க . இப்ப கபசுர குடிநீர் ,கிராம்பு ,இஞ்சி ,மஞ்சள் ,வேப்பிலை அப்புறம் ஒரு நாள்ல்ல கணக்கில்லாத முறை ஆவி பிடிக்கறதுனு நோய் தீவிரமானதுக்கு அப்புறம் மருத்துவமனைக்கு வரவங்களுக்கு என்ன சொல்றது ?</p><p>மக்களை குறை சொல்லி பலனில்ல .இதுக்கு பின்னால ஊடகங்களும் இருக்கு .சித்த மருத்துவர்களும் எந்த ஒரு அறிவியல் வட்டத்துக்குள்ள வர மறுத்து ,ஒரு ஒளி வட்டத்தோடயே வலம் வராங்க .நாங்க இதுக்கு தரவு இல்ல ,இப்ப புது ஆய்வு இது வேலைப்பாக்காதுனு தெளிவா உள்ளத உள்ளபடியே சொல்றோம் ,ஆனா அதுல எல்லாருக்கும் ஆயிரம் சந்தேகம் வருது .</p><p>இதுக்கு எல்லா நிலையிலேயும் science சார்ந்த புரிதல கொண்டு வரணும் .ஒரு இயந்திரம் பழுதானா பெரும்பாலும் பணமோ நேரமோ தான் இழப்பாகும் .ஆனா மருத்துவம் அப்படியில்ல .அதனால தான் மருத்துவர்கள் இத்தனை மதிக்கப்படுறாங்க .அதனாலேயே அவங்களுக்கும் மக்கள் நலனிலேயும் அவங்க சரியான சிகிச்சையை செஞ்சுக்க வழிகாட்டுறதிலேயும் பெரிய பொறுப்பு இருக்கு . </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p> </p><p><br /></p><p> </p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-91878540146413694392020-12-03T23:50:00.002+05:302020-12-03T23:54:58.354+05:30உலகம்மன் கோவில் தெரு <p> திருநெல்வேலி ஜங்க்ஷனின் உலகம்மன் கோவில் .நினைவில் ஒரு பெரிய மரமும் நிறைய காலி இடமுமாய் .எதிரே முதல் வீடு ஆச்சி வீடு .அடுத்து சரசா அத்தை அகிலா அப்புறம் மீனா அத்தை பிரேமா அக்கா ,எதிர் வீட்டில் குட்டி இம்ரு (தாத்தா கிரிக்கெட் பிரியர் ),பின்வீட்டில் பாரதி .தெருவெங்கும் ஓடிய திண்ணை .திண்ணை ஒட்டிய சாக்கடை .பொழுதும் மேயும் பன்னிகள் .கோவில் திருவிழாவின் பெரிய ஸ்பீக்கர் .அது பாடிய மச்சானை பாத்தீங்களா ,வாங்கோண்ணா .அதற்கு ஆட்டம் .</p><p>கோவிலுக்கும் வீட்டுக்கும் நடுவே பெரிய ரோடு .தட்டியில் அடித்த சினிமா விளம்பரங்கள் .படம் பார்க்க வர சொல்லி கூவிக்கொண்டே போகும் குரல் .பறக்க விட்ட துண்டு சீட்டுகள் .தேர்தல் கூட்டங்கள் .போடுங்கம்மா ஓட்டு வாக்கு சேகரிப்புகள்.இன்னொரு திருவிழா பலிக்கு வாழைப்பழ ருசி காட்டப்பட்ட பன்னிகள் ...</p><p>அப்படியே நடந்தால் தாமிரபரணி .நீர் வற்றாத தாமிர ருசி கொண்ட தாமிரபரணி. அம்மா அத்தை கர்ப்பமாயிருந்த சித்தி சேர்ந்தே நீந்திய தாமிரவருணி .தாத்தா .காலையில் ஆற்றில் குளித்து கோமணம் அலசி அருகம்புல் ஆற்றில் அலசி மடியில் சுற்றி நேராக பிள்ளையாருக்கு தரும் தாத்தா .உயரமாக சிகப்பாய் வழுக்கை தலையாய் அச்சு போல் எழுதிய தாத்தா .</p><p>ஆச்சியை தூக்கி அடுப்புல வை என்று ஏசிய ஆங்கிலம் படிக்க தெரிந்த ஆச்சி.ஆச்சி வீட்டு செல்லம்மா ,செல்லம்மாள் மகள் உலகு .உலகம்மன் கோவில் .</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNKSI752-X6Fi7aoMJysz4msRSqvww0DOEQ70SoSEHuV3c3PdukSObxR3ImBiJZ51LFrZWnvwzTu3nBLGnFAf68a7QbvciJDqSKmVnnCGf6vLWaecmdERHHu-oRaYg0EcfxauXyYDkWNI/s960/40471681_1113699258780682_8861294156224397312_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNKSI752-X6Fi7aoMJysz4msRSqvww0DOEQ70SoSEHuV3c3PdukSObxR3ImBiJZ51LFrZWnvwzTu3nBLGnFAf68a7QbvciJDqSKmVnnCGf6vLWaecmdERHHu-oRaYg0EcfxauXyYDkWNI/s320/40471681_1113699258780682_8861294156224397312_n.jpg" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMWIUDQIZOTJgf4XfpRCnV3yJle8CCVCE4mHcRfmojRwHz6AZI3EkeOcxCWfiRw-ZTX_LyWldJxWh0PrOLLBN9UFFQXgoctm3WFasZLD8FhXt-4kPBYj5GsarluBx6x5farQVm7DxJFO8/s960/40436321_1113693265447948_6842672476430794752_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMWIUDQIZOTJgf4XfpRCnV3yJle8CCVCE4mHcRfmojRwHz6AZI3EkeOcxCWfiRw-ZTX_LyWldJxWh0PrOLLBN9UFFQXgoctm3WFasZLD8FhXt-4kPBYj5GsarluBx6x5farQVm7DxJFO8/s320/40436321_1113693265447948_6842672476430794752_n.jpg" /></a></div><br /><p></p><p><span style="background-color: white; font-size: 15px; white-space: pre-wrap;">நன்றி - <a href="https://twitter.com/5Murugesan/status/1334317330940116992?s=20">https://twitter.com/5Murugesan/status/1334317330940116992?s=20</a></span></p>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-12698259943549453692020-11-08T21:39:00.002+05:302020-11-08T21:43:45.383+05:30இன்றிரவில் <p>இன்றிரவில் </p><p>மிக சோகமான </p><p>வரிகளை எழுத முடியும் </p><p><br /></p><p>இந்த இரவு நட்சத்திரங்களாக இருக்கிறது - </p><p>நீல நட்சத்திரங்கள் தூரத்தில் நடுங்குகின்றன </p><p>என்பது போல </p><p><br /></p><p>இரவு காற்று வானத்தில் சுழன்று பாடுகிறது </p><p><br /></p><p>மிக சோகமான </p><p>வரிகளை எழுத முடியும் </p><p>இன்றிரவில் </p><p><br /></p><p>நான் அவளை காதலித்தேன். </p><p>அவளும் என்னை காதலித்தாள், </p><p>சில நேரங்களில் .</p><p><br /></p><p>இதே போல் இரவுகளூடே </p><p>அவளை அணைத்திருந்தேன் </p><p>முடியாத வானத்தின் கீழ் </p><p>முத்தங்களிட்டேன் </p><p>மீண்டும் மீண்டும் .</p><p><br /></p><p>சில நேரங்களில் </p><p>அவள் என்னை காதலித்தாள் ;</p><p>அவளை நானும் .</p><p>உறைந்த அந்த பெருங்கண்களை </p><p>எப்படி காதலிக்காமல் இருப்பது </p><p><br /></p><p>இன்றிரவில் </p><p>மிக சோகமான </p><p>வரிகளை எழுத முடியும் </p><p><br /></p><p>அவள் என்னுடன் இல்லை </p><p>அவளை தொலைத்துவிட்டேன் </p><p><br /></p><p>விசாலமான ஒலிக்கும் இரவு -</p><p>இன்னமும் விசாலமாக இருக்கிறது </p><p>அவளில்லாமல் .</p><p>புல்லில் பனி போல </p><p>உயிரில் விழுகிறது </p><p>கவிதை .</p><p><br /></p><p>என் காதல் அவளை தக்க வைக்காததால் </p><p>என்னவாகபோகிறது </p><p>இரவு நட்சத்திரங்களாக இருக்கிறது </p><p>அவள் என்னுடன் இல்லை .</p><p><br /></p><p>இவ்வளவுதான் .</p><p>தூரத்தில் யாரோ பாடுகிறார்கள் ,தூரத்தில் .</p><p>அவளை தொலைத்ததாக மனம் நம்பவில்லை </p><p><br /></p><p>அவளை அழைத்து வருவது போல </p><p> என் பார்வை அவளை தேடுகிறது ,</p><p>என் இதயமும் .</p><p>அவள் என்னுடன் இல்லை .</p><p><br /></p><p>அதே மரங்களை வெள்ளையாக்கும் அதே இரவு .</p><p>அன்றைய நாங்கள் இன்று நாங்களில்லை .</p><p>இப்போது நான் நிச்சயமாக அவளை காதலிக்கவில்லை </p><p>ஆனால் எப்படி காதலித்தேன் !</p><p>அவள் காது எட்டும் காற்றை என் குரல் தேடுகிறது </p><p><br /></p><p>வேறொருவருக்கு ,</p><p>அவள் வேறொருவருக்கு,</p><p>என் முத்தங்களுக்கு முன் போல்.</p><p> </p><p>அவள் குரல் </p><p>அவள் பளீர் உடல் </p><p>அவள் முடிவில்லா கண்கள்... </p><p><br /></p><p>அவளை நான் இப்போது காதலிக்கவில்லை .</p><p>நிச்சயமாக. </p><p>ஒருவேளை காதலிக்கக்கூடும் ? </p><p>காதல் சுருக்கமானது </p><p>மறப்பது நீளமானது .</p><p><br /></p><p>இதே போல் இரவுகளில் </p><p>அணைத்திருந்ததால் </p><p>அவளை தொலைத்ததாக மனம் ஏற்கவில்லை .</p><p>இது அவள் எனக்கு உணர்த்தும் கடைசி வலியாகவும் </p><p>இது நான் அவளுக்கு எழுதும் கடைசி பாடலாகவும் </p><p>இருந்தும் கூட ....</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><u>Tonight I can write the saddest lines</u></p><p><u>Pablo Neruda</u></p><p><br /></p><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Tonight I can write the saddest lines.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Write, for example, </span><div><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">'The night is starry and the stars are blue and shiver in the distance.'</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">The night wind revolves in the sky and sings.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Tonight I can write the saddest lines.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">I loved her, and sometimes she loved me too.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Through nights like this one I held her in my arms.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">I kissed her again and again under the endless sky.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">She loved me, sometimes I loved her too.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">How could one not have loved her great still eyes.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Tonight I can write the saddest lines.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">To think that I do not have her. To feel that I have lost her.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">To hear the immense night, still more immense without her.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">And the verse falls to the soul like dew to the pasture.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">What does it matter that my love could not keep her.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">The night is starry and she is not with me.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">This is all. In the distance someone is singing. In the distance.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">My soul is not satisfied that it has lost her.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">My sight tries to find her as though to bring her closer.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">My heart looks for her, and she is not with me.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">The same night whitening the same trees.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">We, of that time, are no longer the same.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">I no longer love her, that's certain, but how I loved her.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">My voice tried to find the wind to touch her hearing.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Another's. She will be another's. As she was before my kisses.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Her voice, her bright body. Her infinite eyes.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">I no longer love her, that's certain, but maybe I love her.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Love is so short, forgetting is so long.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Because through nights like this one I held her in my arms</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">my soul is not satisfied that it has lost her.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Though this be the last pain that she makes me suffer</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">and these the last verses that I write for her.</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><span face="Roboto, "Droid Sans", Helvetica, sans-serif" style="color: #141823; font-size: 15px;">Translation by W. S. Merwin</span><br style="box-sizing: border-box; color: #141823; font-family: Roboto, "Droid Sans", Helvetica, sans-serif; font-size: 15px;" /><p><br /></p></div>பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-68977486242950188272020-05-14T22:03:00.002+05:302020-05-14T22:03:17.092+05:30வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே ....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே,<br />
நாடி நிற்குதே அனேக நன்மையே ,உண்மையே "னு<br />
<br />
ஆரம்பிக்கிற பட்டுக்கோட்டை பாட்டு .ராணுவத்திலேருந்து வீட்டுக்கு திரும்பும் சிவாஜியும் அவர் தோழர்களும் நம்பிக்கையா பாடிக்கிட்டே வருவாங்க .அப்புறம் இதே பாட்டோட சோக வெர்ஷன் ,"வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே"னு போகும் . ஏனோ இன்னைக்கு அந்த வீடியோ பார்த்ததிலிருந்து இந்த பாட்டு ஞாபகத்திலேயே இருக்கு .எத்தனை பேர் எத்தனை மணி நேரம்ன்னு குழந்தைங்க ,பாத்திரம் ,வாத்து ,நாய்னு கூட சுமந்துட்டு நடந்து போய்க்கிட்டே இருக்காங்க .வீடுங்கறது என்ன .A house is made of bricks but a home is made of hearts னு ஒரு பழமொழி இருக்கு .எங்கிருந்தோ எங்கேயோ பிழைக்க ஏன் வராங்க ?ஒரு நல்ல வாழக்கை அமையும்னு தானே ?இல்ல சம்பாதிச்சு திரும்ப போய் ஒரு வீடு இல்ல ஏதோ ஒரு தொழில் பண்ணி பிழைச்சுக்கலாம்ன்னு தானே ?கூட்டிட்டு வரவங்களுக்கும் இவங்க வசதிக்கு தானே கூட்டிட்டு வராங்க ? ஒரு அரசு என்ன செஞ்சிருக்கணும் ?இதுல யோசிக்க பெருசா எதுவுமே இல்லையே ?ஒண்ணு அவங்கள இங்கேயே நிலைமை சரியாகற வரைக்கும் இருங்க அதுவரைக்கும் நாங்க பாத்துக்கறோம்னு சொல்லணும் இல்ல ஊருக்கு போகணும்ன்னு ஆசைப்பட்டீங்கனா அதுக்கான ஏற்பாடுகளை செஞ்சு தரோம்ன்னு பண்ணியிருக்கணும் . அது விட்டுட்டு ரயில் விடுறோம் விடல,விட்டப்புறம் இங்க வேலை கெட்டுப்போகும்னு போக விடமாட்டோம்ங்கறதெல்லாம் என்ன நியாயம் ?<br />
<br />
ஊருக்கே போய்ட்டா எப்படியாவது பிழைச்சுக்கலாம்ன்னு தானே எப்படியோ கிளம்பி போறாங்க ?அங்கேயும் போய் உள்ள விடுறதிலேருந்து எத்தனை சிக்கல் .40 km லேருந்து 1000 kmலாம் என்ன தைரியத்துல நடக்க ஆரம்பிக்கறாங்க ?அந்த குழந்தைங்க என்ன பண்ணும் ?வழியில தண்ணி சாப்பாடெல்லாம் என்ன பண்ணுவாங்க ?யார் தருவா ?தைப்பூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரைக்கு போறவங்களுக்கு வழியெல்லாம் பந்தல் வச்சு சாப்பாடும் தண்ணியும் கொடுத்துகிட்டே இருப்பாங்க .ஊரே அடைஞ்சு கிடக்குதே யார் வருவாங்க இவங்களுக்கு சாப்பாடோ தண்ணியோ தர ?டாய்லெட் வசதிகளுக்கு எங்க போவாங்க ?இதை மொத்த அரசும் எப்படி கலங்காம வேடிக்கை மட்டுமே பாக்குது ?மனுஷங்கன்னா அவ்வளவு இளப்பமா ?இவ்வளவு குரூரமா ஒரு அரசு இருக்க முடியுமா ?அப்ப இவங்க யாரோட குடிமக்கள் ?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaejZ_jhkEeUVi9DCPvCeADav0SNJPxogf4bkFEw005rfMvRjMVZ5LSlfgYsB6WfswEDcLou-F5JVh713OHfHN3K4bBaBsedBEjOFhCl1q682GlsVfmnkeE4ecuQKhyphenhyphenxzNhz3Og0SqHqI/s1600/pets1589440360852.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="540" data-original-width="650" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaejZ_jhkEeUVi9DCPvCeADav0SNJPxogf4bkFEw005rfMvRjMVZ5LSlfgYsB6WfswEDcLou-F5JVh713OHfHN3K4bBaBsedBEjOFhCl1q682GlsVfmnkeE4ecuQKhyphenhyphenxzNhz3Og0SqHqI/s320/pets1589440360852.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
(<a href="https://english.jagran.com/trending/carrying-dog-in-one-hand-and-duck-in-other-migrant-workers-win-internet-as-they-walk-miles-to-reach-home-10011826">https://english.jagran.com/trending/carrying-dog-in-one-hand-and-duck-in-other-migrant-workers-win-internet-as-they-walk-miles-to-reach-home-10011826</a>)</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
எப்ப போய் சேர்வோம்ன்னு தெரியாது ,வழியில என்ன நடக்கும்னு தெரியாது .அந்த நாயையும் வாத்தையையும் இருந்த இடத்துல தூக்கிப் போட்டுட்டு போயிருக்கலாம் .அதையும் சேர்த்து சுமந்துட்டு போக சொல்றது எது ?அது ஏன் ஒரு அரசுகிட்டயும் அதன் மக்களான நம்ம கிட்டயும் இல்லாம போச்சு ....<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br /></div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-50634868839446093262020-03-01T18:28:00.000+05:302020-03-01T18:28:35.290+05:30அன்பெனும் பெருங்கொடை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அம்மாவுடன் வரும் ஒரு சிறுமி .சில வருடம் வரல .ஒரு நாள் அவள் மாமா கூட்டிட்டு வந்தார் .அவருக்கு இருபத்தைந்து வயதுக்குள்ள இருக்கும் .நோய் அதிகமாகி மூச்சு விடவே சிரமப்பட்டுட்டிருந்தா .சத்தம் போட்டேன் <div>
"எங்கக்கா இறந்து போய்ட்டாங்க "<div>
"அதனால இவளை ஏன் கூட்டிட்டு வரல"ன்னு கோபப்பட்டேன்."கண்டிப்பா அட்மிட் தான் பண்ணனும் .இப்ப ஒண்ணும் சொல்றதுக்கில்ல"னு சொல்லிட்டேன் .</div>
<div>
<br /></div>
<div>
அவளோ பத்து வயசு இருக்கும் .அட்மிட் ஆகவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறா .வீட்டுக்கு அனுப்புங்கன்னு அழுகை வேற .எதையோ சொல்லி ஏமாத்துற வயசும் இல்ல .கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு அனுப்பிடுறோம்னு கஷ்டப்பட்டு ரூம்க்கு கூட்டிட்டு போறோம் .மொத்த மருத்துவமனையும் அவ கிட்ட கெஞ்சிருக்கோம் .எப்படியோ சமாதானமாகி இருந்துட்டா .உடம்பு ஒத்துழைக்கலன்னு புரிஞ்சுதோ என்னமோ .நுரையீரல் இருதயம்ன்னு ஏகப்பட்ட தொற்று . பத்து நாள்ல வீட்டுக்கு போயே ஆகணும்ன்னு ஒரே அழுகை .உடல்நிலை இப்ப கொஞ்சம் தேறியிருந்தது.ஆனா அழுதே சிக் ஆகிருவா போலிருந்தது .இப்படியே அழுகை அடம் கெஞ்சல்னு ஒரு மூணு நாலு அட்மிஷன் .ரெண்டு வருஷத்துக்கு முன்னால இன்ஜினியரிங் சேர்ந்தப்ப "என்னை bless பண்ணுங்க aunty "னு ஆசிர்வாதம் வாங்கினப்ப பிரமிப்பா இருந்தது .</div>
<div>
<div>
<br /></div>
<div>
மாமா திருமணமாகி நல்ல வேலைல இருக்கார் .அவர் மனைவியும் அவள அத்தனை அன்பா பாத்துக்குறாங்க .போன வாரம் மாமா கூட செக்கப் வந்திருந்தா ."நா மொதல்ல கூட்டிட்டு வந்தப்ப எங்கக்காக்கோ இவளுக்கோ எச்.ஐ.வி இருக்கதே எனக்கு தெரியாது .எங்கம்மா, அந்த ஆஸ்பத்திரிக்கு தான் </div>
<div>
<div>
அக்கா போவான்னு சொன்னாங்க .அதனால கூட்டிட்டு வந்தேன் .நீங்க சொன்னத கேட்டதும் ஷாக் ஆகிருச்சு .அதோட இவளை வேற அட்மிட் பண்ணனும்ன்னு சொன்னதும் எனக்கு ஒண்ணுமே புரியல .அப்புறம் கூட </div>
<div>
அவ்வளவு கோபம் தான் வந்தது .சீ ..நம்ம அக்காவும் இறந்துட்டாங்க ,இவளுக்கும் இந்த வியாதியானு .சொன்னா நம்ப மாட்டீங்க ,போற வழியில ஆட்டோலேருந்து தள்ளி விட்டுட்டேன் .நல்ல வேளை .இப்ப நெனச்சா கூட மனசு கஷ்டமாயிருக்கும் ,இப்படி முட்டாள்தனம் செய்ய போனோமேனு ." </div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-34718947674532923912020-01-01T23:52:00.000+05:302020-01-02T14:14:55.444+05:30கடவுள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடவுள் நான்<br />
ஒரு நண்பனில்லாமல்,<br />
தூய்மையில் தனியாய்.<br />
முடியாத உலகம் .<br />
<br />
கீழே ,<br />
இளங்காதலர்கள்<br />
இனிமையாக திரிகிறார்கள்<br />
ஆனால் இறங்க முடியாது.<br />
கடவுள் நான்.<br />
<br />
வசந்தம் .<br />
வாழ்க்கையே காதல் .<br />
காதல் மட்டுமே வாழ்க்கை .<br />
மனிதனாக இருக்கலாம்<br />
கடவுளாக காட்டிலும்<br />
தனிமையாய்<br />
<br />
<b><br />God </b><br />
<b>Langston Hughes </b><br />
<br />
I am God—<br />
Without one friend,<br />
Alone in my purity<br />
World without end.<br />
<br />
Below me young lovers<br />
Tread the sweet ground—<br />
But I am God—<br />
I cannot come down.<br />
<br />
Spring!<br />
Life is love!<br />
Love is life only!<br />
Better to be human<br />
Than God—and lonely.<br />
<br />
<br />
<br />
<br /></div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-9311785906760534332019-09-02T21:32:00.000+05:302019-09-02T21:32:33.823+05:30வசந்தம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வயல்கள் சில்லிட்டிருக்கின்றன<br />
பரவலான மழை விட்டது<br />
வசந்தத்தின் நிறங்கள் எங்கும் மொய்க்கின்றன <br />
துள்ளும் மீன்களால் நிரம்பியிருக்கிறது நீலக்குளம்<br />
பாடும் குருவிகளால் தோய்ந்திருக்கின்றன பச்சைக்கிளைகள்<br />
வயல் பூக்கள் அலசுகின்றன தங்கள் அரிதாரக் கன்னங்களை<br />
மலை புட்கள் இடுப்பளவில் வளைந்திருக்கின்றன<br />
மூங்கில் ஓடை ஓரம்,<br />
காற்றடித்து<br />
மெல்ல சிதறுகிறது<br />
மேகத்தின் மிச்சம் ...<br />
<br />
<b>Climbing West Of Lotus Flower Peak - Poem by Li Po</b><br />
<br />
<br />
The fields are chill, the sparse rain has stopped;<br />
The colours of Spring teem on every side.<br />
With leaping fish the blue pond is full;<br />
With singing thrushes the green boughs droop.<br />
The flowers of the field have dabbled their powdered cheeks;<br />
The mountain grasses are bent level at the waist.<br />
By the bamboo stream the last fragment of cloud<br />
Blown by the wind slowly scatters away.<br />
<div>
<br /></div>
</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-29533672276263831882019-09-01T22:56:00.000+05:302019-09-01T22:56:38.855+05:30மொக்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மொக்கைகளை பற்றிய ஒரு பதிவு .<div>
<br /><div>
படிப்பது என்பது எளிதானதல்ல .நமக்கு அது எளிதானதாக வாய்க்கப் பெற்றிருந்தால் அது ஒரு வரம் .எத்தனையோ தேடல்கள் தேவைகள் நோக்கி நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் நீ படிக்காததால் மொக்கை என்று சொல்வதே ஒரு மேட்டுமைத்தனம். இதை தெரியுமா அதை தெரியுமா என்றெல்லாம் ஏளனம் பேச நாம் யார் ?</div>
<div>
எங்கப்பா கணித பேராசிரியர் ,எல்லாம் படிப்பார் .கம்பராமாயணம்,சிலப்பதிகாரம் முதல் ஷேக்ஸ்பியர் ,வுட்ஹவுஸ் வரையும். .Wodehouse ,Thomas Hardy எல்லாம் எனக்கு ஆறாம் வகுப்பிலேயே அறிமுகம் செய்து வைத்தார் .அருகில் கிடைக்காத சூழலில் நண்பர்களின் கல்லூரி நூலகங்களில் இருந்து தேடி எடுத்து வந்து தந்தார் .இன்று வரையில் அப்பா நாத்திகர் .பெரியார் அண்ணா கலைஞர் அபிமானி .ஆனாலும் நானாக தேடியே பெரியார் நூல்களை படித்தேன் .என்ன சொல்லியிருக்கிறார் பார்க்கலாமே என்று வாங்கி இன்று ஓரளவு படித்திருக்கிறேன் .<br /><div>
<br /></div>
</div>
</div>
<div>
எங்கம்மா சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் முதல் பெண் தலைவர் .தன் துறை சார்ந்து பல புத்தகங்கள் எழுதியவர் .சிறு வயதில் குமுதம் படித்ததற்காக அடி வாங்கியவர் .அவர் சொல்வார் "reading is a luxury ".அதற்கு பணம் இடம் நேரம் அனுமதி என்று பல விஷயங்கள் தேவைப்படுகிறது .அது எல்லோருக்கும் கிட்டுவதில்லை .எங்கு படிப்பீர்கள் ?நூலகங்கள் வரையில் செல்ல நேரம் இருக்கிறதா ?உங்கள் அருகில் இருக்கும் நூலகங்களில் நீங்க படிக்க விரும்பும் நூல் இருக்கிறதா ?இல்லை வாங்குவீர்களானால் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குவீர்கள் ?எங்கே வைப்பீர்கள் ?எங்கு படிப்பீர்கள் ?படித்த பின் என்ன செய்வீர்கள்? எல்லாம் எல்லோருக்கும் எளிதாய் அமைவதில்லை .இணையம் எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறதா ?</div>
<div>
<br /></div>
<div>
என் அப்பா தலைமுறை தமிழகத்தை பொருத்த வரையில் பெரியார் அண்ணா என ஒரு மறுமலர்ச்சியின் தலைமுறை .அந்த தலைமுறையின் உழைப்பை அறுவடை செய்கின்றன பின்வந்த தலைமுறைகள் .ஆனால் அந்த தலைமுறை தங்கள் உழைப்பையும் அதற்கு முன்னான நிலைமையையும் முன்னேறிய மகிழ்ச்சியில் சரியாக சொல்ல மறந்து போனார்கள் .அதுவும் இன்றைய நிலைக்கு ஒரு காரணம் .</div>
<div>
<br /></div>
<div>
ஆனாலும் இவை எல்லாவற்றையும் தாண்டியும் வாசிப்பையே ஒரு தேடலாக செய்பவர்கள் இருக்கிறார்கள் .இருப்பார்கள் .</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-82632016480661955622019-05-26T22:46:00.000+05:302019-05-26T22:46:03.703+05:30நீர்வீழ்ச்சி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
கதிரொளி பாய்கிறது ஆற்று கற்களில் .<br />
ஆறு தடுமாறாமல் தாவுகிறது<br />
பல உயரத்திலிருந்து-<br />
மூவாயிரம் அடிகள் மின்னும் தண்ணீர்<br />
வானிலிருந்து பொழியும் பால்வெளி <br />
<br />
<br />
<br />
<br />
<b>Waterfall At Lu-Shan - Poem by Li Po</b><br />
<br />
Sunlight streams on the river stones.<br />
From high above, the river steadily plunges--<br />
<br />
three thousand feet of sparkling water--<br />
the Milky Way pouring down from heaven.<br />
<div>
<br /></div>
</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-82172322519272389782019-05-19T21:20:00.001+05:302019-05-19T21:21:29.197+05:30விடை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தெற்கு சுவர்கள் தாண்டி கிடக்கின்றன நீல மலைகள்<br />
நகரின் கிழக்கணைத்து போகிறது வெள்ளை தண்ணீர்<br />
நண்பனே , இங்கே பிரிகிறோம்<br />
ஒருமுறை என்றென்றைக்கும்<br />
பத்தாயிரம் மைல் போ ,<br />
வேர்க்கொள்ளாத ஆற்றுப்புல் போல, மிதந்து..<br />
ஓ !மிதக்கும் மேகங்களும் பயணியின் எண்ணங்களும்<br />
ஓ !அஸ்தமனமும் பழைய நண்பனின் ஏக்கமும்<br />
கையசைத்து பிரிகிறோம் வேறு திசைகளில்<br />
நம் குதிரைகள் கனைக்கின்றன..மெல்ல மெல்ல ...<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjteLVI39wgV88Yh6pKaAtbCS7Akel3db4V_dCWQOkOvx4Pssj7RBVu4-zom9aKmjr8_H30yQPtOhhZVxMUSQUBP9QQXsXiO_MjSva_5d8q10ncckR1VOLS-ps-JjTX_9QNst0GhJhP9Os/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="192" data-original-width="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjteLVI39wgV88Yh6pKaAtbCS7Akel3db4V_dCWQOkOvx4Pssj7RBVu4-zom9aKmjr8_H30yQPtOhhZVxMUSQUBP9QQXsXiO_MjSva_5d8q10ncckR1VOLS-ps-JjTX_9QNst0GhJhP9Os/s1600/download.jpg" /></a></div>
<br />
<br />
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; line-height: 1.45; margin: 0px 0px 12px; text-align: left; width: 660px;">
<b>Taking leave of a friend ...</b></div>
<div style="background-color: white; font-family: Arial, sans-serif; line-height: 1.45; margin: 0px 0px 12px; text-align: left; width: 660px;">
<b>Li Po </b></div>
<br />
Blue mountains lie beyond the north wall;<br />
Round the city's eastern side flows the white water.<br />
Here we part, friend, once forever.<br />
You go ten thousand miles, drifting away<br />
Like an unrooted water-grass.<br />
Oh, the floating clouds and the thoughts of a wanderer!<br />
Oh, the sunset and the longing of an old friend!<br />
We ride away from each other, waving our hands,<br />
While our horses neigh softly, softly . . . . </div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-29171032358028777582019-01-19T22:29:00.000+05:302019-01-19T22:34:58.758+05:30பேட்ட பராக் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பேட்ட<br />
<br />
first half -பரவாயில்ல<br />
second half -உண்மைய சொன்னா ஒரு குரூப் வீச்சருவாளோட குறுக்கயும் நெடுக்கையும் ஓடுவாங்க..அதனால வேண்டாம்<br />
<br />
1.படத்துல பெஸ்ட் சிம்ரன் வர சீன்ஸ் தான் .(எவ்வளவு ஒல்லியா இருக்காங்க .பொறாமையா இருக்கு ).ஆனா சிம்ரனுக்கு டான்ஸ் கொடுக்காத பாவமெல்லாம் சும்மா விடாது . <br />
2.நியாயமா இசை இளையராஜா /எம்எஸ்வினு தான் போடணும் -அனிருத்தாமே ?<br />
3.<span class="st"><i>Nawazuddin Siddiqui </i>-பாவம் என்ன சொல்லி கூட்டிட்டு வந்தாங்களோ தெரியல .நிஜமாவே படக்குழு மேல அவர் ஒரு நாட்டு வெடிகுண்டு வீசலாம் .நியாயம் இருக்கு .</span><br />
<span class="st">4.விஜய் சேதுபதி -இவர் என்ட்ரிக்கு தான் அப்லாஸ் அள்ளுது .வெயிட்டான ரோல்னு வெயிட்டாகியிருப்பாரு போல .யாராவது நலம் விரும்பிகள் ஆலோசனை சொல்ல கூடாதா ?ரஜினி வேற இவர் பக்கத்துல ரொம்ப குட்டியா தெரிறாரு .இவருக்காக படத்தோட second half அ ஜவ்வு factoryல வச்சு எடுத்திருக்காங்க போல .முடியல.மிட்ரோன் ,வெப்பன் ,beefனு சான்ஸ் கிடைக்கற ப்பெல்லாம் அடிக்கிறாப்ல .சீக்கிரமா அரசியலுக்கு வருவார்ன்னு எதிர்பார்க்கிறேன் .</span><br />
<span class="st">5.நிறைய தெரிஞ்ச முகமெல்லாம் திடீர் திடீர்ன்னு வராங்க .சின்னி ஜெயந்த் ,த்ரிஷா ,இன்ன பிறர் .ரஜினி ரொம்ப நாள் நடிக்க மாட்டார் .அதனால் கிடைக்கற சான்சை விட வேண்டாம்ன்னு முடிவு பண்ணிருப்பாங்க போல.ஆனா Mahendran stands out .</span><br />
<span class="st">6.ரஜினிக்கு காஸ்ட்யூம்ஸ் நல்லா இருக்கு .second half ல லிங்கா ரஜினி மெலிஞ்ச மாதிரி இருக்காரு .கபாலி படம் வெளியானப்ப ரஞ்சித் ரஜினி போட்ட ஓரே கண்டிஷன் டான்ஸ் ஆட மாட்டேன்ங்கிறது தான்னு சொன்னார் .இந்த படத்துல சொல்ல மறந்துட்டார் போல .இல்ல இந்த கேப்ல டான்ஸ் practice பண்ணிருப்பாரு போல .நிறைய ஆடுறாரு .ரஜினிக்கு டான்ஸ் பீக்லேயே ஆட வராது .இப்பவும் வரல .அவருக்கு அது தேவையும் இல்ல.பாட்ஷா படத்துல வர அழகு பாட்ட ஒரு தடவ பாத்துக்கோங்க .</span><br />
<br />
<br />
<br />
<span class="st"> இயக்குனருக்கு </span><br />
<br />
<span class="st"></span><span class="st"><span class="st">க்ளைமேஸ்ல எதுக்கு ராமன் ஆண்டாலும் பாட்டு ?கரெக்ட்டா பாத்தா பொதுவாக எம்மனசு தங்கம் தான் வந்திருக்கனும்.</span></span><br />
<span class="st">இந்த தலைமுறை திரையில் பார்க்காத ரஜினியை படம் பிடித்திருக்கிறீர்கள் .சரி .ஆனா பழைய படங்களின் காட்சிகளை அப்படியே எதுக்கு ரீமேக் பண்ணனும் ?சொல்ற காட்சியை ஸ்டைலா பண்ண ரஜினிக்கு தெரியுமே ?</span><span class="st">.ஒரு self caricature மாதிரி அவரையே வைத்து அவரையே இமிடேட் செய்வது என்ன முறை ?அதுக்கு எதுக்கு ரஜினி ?ஒரு ரஜினி ரசிகரா இந்த படத்தை பண்ணியிருக்கதா சொல்றீங்க .ஆனா அவரை ரசித்த ஒரு இயக்குநரா,ஜிகிர்தண்டா போன்ற படங்களின் பின்னணியோட ,அவரை இயக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா இப்படி எடுக்கணும்ன்னு ஒரு கனவு கண்டிருப்பீங்களே ,அந்த ரஜினியை நீங்க தருவீங்கன்னு எதிர்பார்த்தோம் .ஆனா நீங்க எஸ்பிஎம் காலத்துக்கு அவர பின்னாடி தள்ளிவிட்டுட்டீங்க .</span><br />
<span class="st">disappointing.</span><br />
<br />
<span class="st">சமீப கால ரஜினி படங்கள்ல தீ பெஸ்ட் கபாலி தான் .நடிப்பு ஸ்டைல்னு ரஜினி கொடிகட்டி பறந்த படம் .ஒவ்வொரு ஷாட்லேயும் ரஞ்சித்துக்கு ரஜினி மேல இருக்க காதல் தெரியும் .சில வருஷம் கழிச்சு பாத்தா இந்த பேட்ட குப்பை மாதிரி இருக்கும் .வருத்தங்கள் .</span><br />
<br />
<span class="st">பேட்ட - "a tribute to Rajni by Rajni " - unfortunately so ... </span><br />
<br />
<br />
<span class="st"> https://poongulali.blogspot.com/2016/08/blog-post_23.html</span><br />
<br />
<br />
<br />
<span class="st"><br /> </span><br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-52151503920895890532018-09-28T23:30:00.000+05:302018-09-28T23:30:40.477+05:30 கருப்பும் இல்லை வெள்ளையும் இல்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் கிழவன் ஒரு வெள்ளை கிழவன் <br />என் அம்மை கருப்பு <br />என் வெள்ளை கிழவனை <br />நான் சபித்திருந்தால்<br />
சாபங்களை திரும்ப பெறுகிறேன் <br />என் கருப்பு அம்மையை நான் சபித்திருந்தால் <br />நரகத்திற்கு போகட்டும் என்று நினைத்திருந்தால் <br />அந்த கெட்ட எண்ணத்துக்கு வருந்துகிறேன் <br />அவள் நன்றாக இருக்கட்டும் .<br />என் கிழவன் ஒரு பங்களாவில் செத்து போனான் <br />என் அம்மை குடிசையில் ..<br />கருப்பும் இல்லை வெள்ளையும் இல்லை <br />நான் சாகப்போவது எங்கேயோ !<br /><br /><br /><br /><br /><b>Cross - <br />Poem by Langston Hughes</b><br /><br /><br /><br />My old man's a white old man<br />And my old mother's black.<br />If ever I cursed my white old man<br />I take my curses back.<br />If ever I cursed my black old mother<br />And wished she were in hell,<br />I'm sorry for that evil wish<br />And now I wish her well<br />My old man died in a fine big house.<br />My ma died in a shack.<br />I wonder where I'm going to die,<br />Being neither white nor black?</div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-10494206654694178782018-09-27T23:16:00.001+05:302018-09-27T23:16:29.543+05:30கலைஞருக்கு மருத்துவர்களின் புகழ் வணக்கம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அழைப்பிதழ் கிடைத்தபடியால் இந்த நிகழ்வில் நேற்று பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது .பேசிய மருத்துவர்கள் அனைவரும் கலைஞருக்கு பல வருடமாக சிகிச்சை அளித்து கொண்டிருந்தவர்கள் .அதனால் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றவர்கள் .<br />
<br />
நெஞ்சில் நின்றவை <br />
<br />
1. மரு .கோபால் என்பவர் தொடர்ந்து கலைஞரின் உடல்நலத்தை பராமரித்திருக்கிறார் .இவர் ஆலோசனை படி வேறு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள் .<br />
2.எல்லோரும் கலைஞரின் மகள் செல்வி தன் தந்தையை கவனித்து கொண்டதை வியந்து பாராட்டினார்கள் .ஒருத்தர் உங்களை போல் எனக்கு ஒரு மகள் வேண்டும் என்று சொன்னார் .<br />
3. கலைஞர் பல விதமான உடல்நலக் குறைவுகளால் பல நேரங்களில் அவதிப்பட்டிருக்கிறார் .ஆனால் இவற்றில் பலவற்றை நாம் அறிந்ததில்லை .இவற்றோடு கூடும் அவர் ஓய்வறியாமல் உழைத்தார் என்பது பிரமிக்கத்தக்க விஷயம் .சின்ன விஷயங்களுக்கு கூட நாம் ஐயோ அம்மா என்று சோர்வடைந்து போகிறோம் .<br />
4.ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனைக்கு அமெரிக்க மருத்துவர் வந்த போது ,"not necessary "என்று மறுத்து விட்டாராம் .<br />
5.பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு செய்யப்படும் "cochlear implant " அறுவை சிகிச்சையை அவர் இலவசமாக செய்ய ஒப்புக்கொண்டதையும், அதனால் 2000 குழந்தைகள் பயன் அடைந்ததையும்<br />
UNஇல் சொன்ன போது "standing ovation "கிடைத்ததாக மரு.மோகன் காமேஸ்வரன் பெருமையாக சொன்னார் .<br />
6.மருத்துவர்கள் பலருக்கு சரளமாக தமிழ் பேச முடியவில்லை . <br />
<br />
எல்லாவற்றையும் விட இந்த நிகழ்வின் முக்கிய படிப்பினை இதுதான் .<br />
கலைஞர் தன் உடல்நலத்தின் மீது பிரத்தியேக அக்கறை எடுத்திருக்கிறார்.பல அரசியல் தலைவர்கள் போல் பணி சுமையை காரணம் காட்டி அதை உதாசீனம் செய்யவில்லை .மருத்துவர்களின் அறிவுரையை கச்சிதமாக பின்பற்றியிருக்கிறார் .சின்ன விஷயமாக இருந்தாலும் அலட்சியபடுத்தாமல் எந்த நேரமாக இருந்தாலும் மருத்துவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார் .உடல் பயிற்சி நல்லது என்று சொல்லப்பட்டதால் மழையிலும் குடை பிடித்துக்கொண்டு வாக்கிங் போனாராம் .<br />
<br />
செய்த எல்லாவற்றையும் திருந்த செய்தது போல ,இதையும் தன் கடமைகள் ஒன்றென அவர் கருதியிருக்கக் கூடும் .அதுவே இத்தனை ஆண்டுகள் அவரை நம்மோடு வைத்திருந்தது என்பது மிகையல்ல .<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-45158453698782342972018-08-24T23:21:00.000+05:302018-08-24T23:21:17.104+05:30#GoBackAmitshah <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
திமுக மாநில சுயாட்சி மாநாட்டை அறிவிச்சப்ப சந்தோஷமா இருந்தது .சரியான நேரத்துல சரியான அறிவிப்புனு .இதன் ஏற்பாடுகள் நடக்கும் போதே கலைஞர் காலமானார் .அதற்கான தொடர் நிகழ்வுகள் எல்லாம் ஏற்புடையதே .ஆனால் அத காரணம் காட்டி இந்த மாநாட்டை அஞ்சலி நிகழ்வா மாத்தினது ஏற்க முடியாதது .அதோட இன்னும் மோசம் அதுக்கு பாஜக சார்பில அமித் ஷாவ அழைச்சது .தமிழிசையை மட்டும் அழைச்சிருந்தா கூட பரவாயில்ல.<br />
<br />
நீட் ,ஜிஎஸ்டி,நிதி ஒதுக்கீட்டில பாரபட்சம் அது இதுனு போய்ட்டிருக்கப்ப இந்த மாநில சுயாட்சி மாநாடு ரொம்ப முக்கியமானதாகுது .அதோட சேர்த்து ஒரு நிகழ்வா கலைஞர் அஞ்சலியை நடத்தியிருக்கலாம் .இல்ல தனியா ஒரு பெரிய நிகழ்வா நடத்தியிருக்கலாம் .மாநில சுயாட்சி மாநாடே கலைஞருக்கு பெரிய அஞ்சலி தான் .அத விட்டுட்டு....<br />
<br />
யாரோ ஸ்டாலினுக்கு தப்புத்தப்பா அறிவுரை சொல்றாங்க போல (இந்த முடிவெல்லாம் அவரே எடுத்திருந்தா இன்னும் மோசம் ).<br />
<br />
மொதல்ல அந்த போட்டி சட்டசபை -அதுவும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவாதத்துக்கு வந்தப்ப .இந்த யோசனை சொன்னவங்கள சத்தமில்லாம கட்சிய விட்டு நீக்கியிருக்கணும் .முக்கியமான எதிர்க்கட்சி அந்த மாதிரியான நிகழ்வு நேரத்துல செய்யற வேலையா இது ?<br />
<br />
ரெண்டாவது உதயநிதியை முன்னிலைப்படுத்துறது .தேவையே இல்லாத அவசரம் . <br />
<br />
அப்புறம் இந்த வாஜ்பாயி விஷயம் .டெல்லிக்கு போய் அஞ்சலி செலுத்துனதோட நிப்பாட்டிருக்கலாம் .சென்னையில கட்சி அலுவலகத்துக்கு போய் அஸ்தி கலசத்துக்கு அஞ்சலி எல்லாம் பாஜக கட்சிக்காரங்க அப்புறம் அவங்க அடிமைகள் இல்ல டெல்லிக்கு போகாதவங்க மட்டுமே செய்ய வேண்டியது .வாஜ்பாயி என்ன காந்தியா ?<br />
<br />
ஆர்கே நகர்ல டிடிவி என்ன பண்ணிருந்தாலும் அவர் ஜெயிச்சா இந்த எடப்பாடி ஆட்சி கவிழும்ங்கிற நம்பிக்கையை அவரால ஏற்படுத்த முடிஞ்சதும் அவர் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் .அத திமுகவால் ஏற்படுத்த முடியாமல் போனது நிதர்சனம் .<br />
<br />
மெரினால கலைஞருக்கு போராடி இடம் பெற்றது ஸ்டாலினின் தலைமையில் ஒரு முக்கிய மைல்கல் .அத அப்படியே தலைமை, மாநில சுயாட்சின்னு படிப்படியா முன்னால போகாம ,இப்படி ஒரு முழம் சறுக்கல் .<br />
<br />
மொத்த ஊடகமும் பாஜக அதிமுக கைல ,எதையானாலும் பெருசு படுத்த காத்திருக்கப்ப அவங்களுக்கு கூட்டணி ,2ஜி ,தேர்தலுக்கு அப்புறம் கூட்டணினு அவல் கொடுத்திருக்காங்க .இதுல சாமி வேற அமித் ஷா இந்த அழைப்பது ஏற்காதது மகிழ்ச்சின்னு ட்வீட் பண்றாரு ..... <br />
<br />
<br />
அரசியல் நாகரிகம்னு இதுக்கு காரணம் சொல்றதெல்லாம் அல்வா கொடுக்கற வேலை தான் .....<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-74284260804357030882018-07-01T22:56:00.000+05:302018-07-01T22:56:18.302+05:30The Pied Piper of Hamelin <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தலைப்பை பாத்து இது ஹாமெலின் எலிகளை பைப் வாசித்து ஆத்துல கொன்ன பைப்பர் கதைன்னு நினைச்சிருந்தீங்கனா ?சாரி ...<br />
<br />
எங்கப்பாக்கு நிறைய ஹாபிஸ் உண்டு .நிறைய படிப்பாங்க .கதை எழுதுவாங்க .கட்டுரை எழுதுவாங்க .கவிதை எழுதுவாங்க .எங்க வீட்டு தோட்டத்தை ரொம்ப நல்லா பாத்துக்குவாங்க .அப்புறம் சின்ன வயசுல எனக்கு ஓலைய கீறி தென்னந்துடப்பம் செய்ய சொல்லி கொடுத்திருக்காங்க .அப்புறம் ஓலை பின்ன.இன்னமும் நிறைய நிறைய .இதெல்லாம் அப்பாவ நல்லா தெரிஞ்ச எல்லாருக்குமே தெரியும் .<br />
<br />
ஆனா நிறைய பேருக்கு தெரியாத அப்பாவோட ஹாபி ஒண்ணு இருக்கு .அதுதான் எலி பிடிக்கிறது .<br />
<br />
இவ்வளவு தானானு இத அசால்ட்டா கடக்க போறீங்களா ?நிற்க .வீட்டில எலி பிடிக்கிறது அவ்வளவு லேசான வேல இல்ல .அதுவும் தோட்டத்துல குடியும் குடித்தனமுமா இருக்குற எலி ஃபேமிலிய ஒழிக்கிறது கருப்பு பணத்தை ஒழிக்கிறதை விட கஷ்டம். எலி தானே ,மருந்து வச்சா செத்துறாதானு நினைக்கிறீங்களா ?டிமானிடைசேஷன்ல கருப்பு பணம் ஒழிஞ்சுதாங்கிறது எப்படி ரிசர்வ் வங்கிக்கே தெரியாதோ அதே மாதிரி மருந்த சாப்பிட்ட எலி செத்துச்சான்னு நமக்கே தெரியாது .அப்படியே செத்தாலும் ரெண்டு நாள் கழிச்சி அந்த நாத்தம் குமட்டற வரைக்கும் நாம வெயிட் பண்ணனும் .<br />
<br />
எலிகள ஒழிக்கறதுக்கு சிறந்த வழி அத பிடிச்சு நாமே கொல்றது தான் .பிடிக்க வேற இப்ப நிறைய டைப் பொறீஸ் இருக்கு .பேப்பர்ல ஓட்ட வைக்கிற பொறி ஒண்ணு இருக்கு பாருங்க .மறந்தாப்பல அதுல கால வச்சி பாருங்க .அது பக்கமே மறுபடி போக மாட்டீங்க .அதனால எலி பிடிக்க ஆக சிறந்த வழி பழைய மாடல் மரப்பொறி தான் .<br />
<br />
இத மெயின்டெய்ன் பண்றதே ஒரு பெரிய வேல .அப்பா இதுல இருக்குற ஸ்பிரிங்குக்கு சரியா எண்ணெய் போட்டு அப்பப்ப கழுவி அத பக்காவா மெயின்டெய்ன் பண்றதுல எக்ஸ்பெர்ட் .எலிவேட்டை டைம் ராத்திரி 9.15 ஏனா அப்பா கரெக்ட்டா 9 மணிக்கு சாப்பிட்டிருவாங்க .அப்புறம் அந்த பொறிக்கு தேங்காய் வைக்கணும் .சீஸ் அயல் நாட்டு ஜெரிகளுக்கு மட்டும்தான் .சரியான சைஸ்ல தேங்கா பீஸ் வேணும். ரொம்ப பெருசா இருந்த எலி சாப்பிட்டுட்டு நைசா ஓடிரும் .சிறுசா இருந்தா கொக்கில மாட்ட முடியாது .அப்புறம் கூட தேங்காய சும்மா வைக்க முடியாது .லேசா சுட்டு தான் வைக்கணும் .அப்ப தான் அந்த வாடைக்கு எலி வருமாம் .<br />
<br />
இப்படி எல்லாம் செட் பண்ணி பொறிய வழக்கமா எலி வர எடத்துல<br />
வச்சிறணும் .எல்லாம் சரியா செஞ்சிருந்தா எலி மாட்டிரும் .எலி மாட்டினவுடனே பொறி மூடுற சத்தத்துல அப்பா நிறைய நாள் பாதி தூக்கத்துல எந்திரிச்சிருக்காங்க .<br />
<br />
<br />
காலைல முழிச்சவுடனே முதல் வேல பொறிய கொண்டு போய் தோட்டத்துல வச்சிருவேன்
.அப்பா பல்ல வெளக்கிட்டு பிரெஷா ,வந்து ஒரு செக் பண்ணி பார்த்துட்டு (மாட்டிருக்கிறது எலி தானான்னு confirm பண்ணணும்ல ) , அத ஒரு பக்கெட் தண்ணில முக்கிருவாங்க.அப்புறம் அது மேல
கல்ல வச்சிருவாங்க .எலி தப்பிச்சிருச்சுனா ..labour lost ஆச்சே .அப்புறம் எலி செத்தவுடனே கவர்ல போட்டு குப்பைல போட்டுருவாங்க .சில சமயம் செத்திருச்சா சந்தேகமா இருந்தா டப்னு தலையில கல்ல வச்சு ஒரு .....(இத ஒரு தடவ என் மகன் பாத்துட்டு பயந்து போயிட்டான் ).<br />
<br />
<br />
ஒரு தடவையெல்லாம் உள்ள ஒரு எலி ,வாலு மாட்டிகிட்டு வெளிய ஒரு எலின்னு ஒரே பொறில ரெண்டு எலியெல்லாம் மாட்டி இருக்கு .ரெண்டு மூணு நாளைக்கு எலி மாட்டாம குடும்பமே க்ளோஸ் ஆகிருச்சுன்னு தெரியற வரைக்கும் அப்பா பொறி வச்சிக்கிட்டே இருப்பாங்க .<br />
<br />
படங்கள்ல இருக்கிறது நேத்து மாட்டின எலி .பாவம் இப்ப உயிரோட இல்ல.RIP .<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRy_2aZMuGYN1OBYLk6mDB6B5fekWvIrfdkSsiZssCNWoH3BEQIxqF3OdIB6GKmFk2wiqnApEOvMQmdnFSH-AOAU7A4_SVbw4XrNVXtfLGcKtxoOQ6l-JTSvUEfXUXfJogVhniTkRHwyY/s1600/IMG_20180701_075904.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRy_2aZMuGYN1OBYLk6mDB6B5fekWvIrfdkSsiZssCNWoH3BEQIxqF3OdIB6GKmFk2wiqnApEOvMQmdnFSH-AOAU7A4_SVbw4XrNVXtfLGcKtxoOQ6l-JTSvUEfXUXfJogVhniTkRHwyY/s200/IMG_20180701_075904.jpg" width="200" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsQH8efm3iDXf2eVCNMZBRm9iZU-_oCNH9B4FobdjCy8Az9aBA7BjnT56KomvrMpMiwaLve5M4HEq3n5iQrvou6Ga7RmpR4P7UmuAf2hyPcnCMvaxPHt9qHr9TjSRJaIFq4J3M8fVW-98/s1600/IMG_20180701_075845.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsQH8efm3iDXf2eVCNMZBRm9iZU-_oCNH9B4FobdjCy8Az9aBA7BjnT56KomvrMpMiwaLve5M4HEq3n5iQrvou6Ga7RmpR4P7UmuAf2hyPcnCMvaxPHt9qHr9TjSRJaIFq4J3M8fVW-98/s200/IMG_20180701_075845.jpg" width="200" /></a></div>
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<br />
<br /></div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-82746047677325503452018-06-10T15:12:00.000+05:302018-06-10T15:12:25.119+05:30நன்றி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எழுபத்தைந்து வயதிருக்கும் .கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை முடிந்து இருபது வருடங்களுக்கு மேலான தன்னம்பிக்கையாளர் .தனியாக ஒரு பிசினஸ் செய்து அதை பல சோதனைகளுக்கிடையே வெற்றி பெற செய்து கட்டிய சாதனையாளர் .என்னுடய பல வருட பேஷண்ட் .ஏறக்குறைய ஒரு வருடம் முன்னர் கணவர் இறந்து போனார் .சில வருடங்களாக வருடம் ஒரு முறையே வர முடிந்திருக்கிறது .அவர் மகன் சென்னையில் இருக்கிறார் . மருந்துகளை இவர் வாங்கி அனுப்பி வைப்பார் . ஆனாலும் வாரம் ஒரு முறையேனும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார். ஏதேனும் ஊர் விஷயங்கள் பொதுவாக பேசுவார். உங்க உடம்பை நல்லா பாத்துக்கோங்க என்று சொல்லாமல் ஃபோனை வைக்க மாட்டார். <br />
<br />
ஜனவரி மாதத்தில் மருத்துவமனையின் தொலைபேசி எண்கள் மாறிப்போனது .அதிலிருந்து பேசுவதில்லை .pharmacyயில் அவர் மகனிடம் புது எண்களை தர சொல்லி சொல்லி வைத்திருந்தேன் .போன வாரத்தில் திடீரென அவர் மகன் வந்தார் .வழக்கம் போல மருந்துகள் வாங்க வந்திருக்கிறார் போலும் என நினைக்க "உங்களுக்கு தாங்ஸ் சொல்ல வந்தேன் மேடம் .அம்மா போன வாரம் இறந்துட்டாங்க .ரொம்ப ஏதும் கஷ்டம் இல்ல .காலையில தூங்கி எந்திருச்சு பால் கேட்டிருக்காங்க .கொண்டு வரதுக்குள்ள இறந்துட்டாங்க.பத்து வருஷம் எங்கம்மாவை பாத்துக்கிட்டீங்க .இந்த பத்து வருஷத்துல இந்த எச்ஐவி பத்தி அவங்களுக்கு நினைப்பு கூட வந்ததில்ல.அதனால உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன் .ரொம்ப நன்றி மேடம் .அம்மாக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ."<br />
<br />
<br />
<br /></div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-47092670878994932082018-02-25T22:17:00.000+05:302018-02-25T22:18:09.903+05:30விடை தருகிறோம் ஸ்ரீ<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னால் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது ஸ்ரீதேவியின் மரணம் .இன்றைய மருத்துவ வசதிகளின் பின்புலத்தில் 54 என்பது இளம் வயதே .<br />
<br />
இந்தியாவின் முதல் (ஒரே ?)பெண் சூப்பர் ஸ்டார் என்று ஆங்கில ஊடகங்கள் பெருமை கொள்கின்றன .அவரின் சிறந்த படங்கள் என்னவோ தமிழில் தான் .ஹிந்தி சினிமாவில் அதீத அலங்காரத்தோடு கீச் கீச் என பேசும் ஒரு கவர்ச்சி பொம்மையாக அவர் பெரும்பாலும் இருந்தார் .<br />
<br />
இந்த குடியேற்றதிற்கு முன்னால் வாழ்வே மாயம் படத்தில் தான் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தார் .அதுவரை உருண்டையாக ஆனாலும் அழகாகவே இருந்தது அவர் மூக்கு .அதை பற்றி கேட்கப்பட்ட போது கோபமாக மறுத்தார் .ஆனால் தொடர்ந்து கவனிக்கும் போது அவர் முகம் மாறிக்கொண்டே இருந்தது .<br />
<br />
பல நாள் கழித்து நான் பார்த்த தனிஷ்க் விளம்பரத்தில் அலங்கோலமாக இருந்தார் .பலராலும் சிலாகிக்கப்பட்ட english vinglish படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் முகம் ஒட்டிப்போய் என்னவோ போலே இருந்தது .<br />
சில புகைப்படங்களில் தன் மகள்கள் ஒத்த வயதில் அவர் தோன்ற முயற்சிப்பது போல தோன்றியது .<br />
<br />
ஆனாலும் ,அவர் ஏற்ற பல வேடங்களும் முகத்தின் பல மாற்றங்களும் அவர் விரும்பி ஏற்றவையே .தொடர்ந்து இளமையாகவே தோன்ற அவர் விரும்பினார் என்றே நினைக்கிறேன் .<br />
<br />
எது எப்படியோ ,விடை தருகிறோம் ஸ்ரீ .இந்த மரணம் உங்களுக்கு நல்லது தான் .முதுமை உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை இருக்கப்போவதும் இல்லை . உங்களின் ....ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் ..தொடர்ந்து என் காலர் ட்யூனாக இருக்கும் .... </div>
பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com4