Wednesday 18 August 2010

உமா சங்கர் -நேர்மைக்கு தண்டனை


பொது வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் நேர்மை என்பது அவமானமாக போய்விட்ட இந்த காலத்தில் உமா சங்கர் போன்ற அதிகாரிகள் பழி வாங்கப்படுவது இயற்கை தான் .நேர்மை என்பது எந்த அரசுக்கும் ஒரு தீண்டத்தகாத விஷயமாகவும் நேர்மையான அதிகாரிகள் வேண்டாத சுமைகளாகவும் மாறிப் போய் வெகு காலமாகிறது . நேர்மையான அதிகாரிகள் விஷமிகளாகவும் ,பிழைக்க தெரியாதவர்களாகவும் ,பிறர் பிழைப்பை கெடுப்பவர்களாகவும் இங்கு கேலிக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இவர்களின் உறுதியை சிதைக்க மட்டுமின்றி ,இவர்களை போல் பணியாற்ற முற்படும் பிறரையும் பலவீனப்படுத்தவே . Bureaucracy அரசின் வலது கரமாகவே செயல்படுகிறது .இதில் பலர் அரசையே ஆட்டி வைக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள் ."எஸ் மினிஸ்டர் (Yes Minister )" என்ற பிபிசி தொடர் ஒன்று உண்டு ,அதில் bureaucracy ஆட்சியாளர்களை எப்படி மறைமுகமாக ஆட்டுவிக்கிறது என்பதை
அப்பட்டமாக சித்தரித்திருப்பார்கள் .இதில் பொருந்தாத சிலர் ,ஆட்சிக்கும் அது சார்ந்து வாழ பழகிக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கும் தலைவலியாகிறார்கள்.

எது எப்படியானாலும் விசில் ப்ளோவர்ஸ் (Whistle blowers ) கொல்லப்படுகிறார்கள்
தவறை மறைக்க மட்டுமல்ல ,வேறு எவரும் அவ்வாறு துணியாதிருக்கவும். அதே போல் இது போன்ற வழக்குகள் ,வழிக்கு வராதவரை தட்டி வைக்க மட்டுமல்ல ,மற்றவரை அச்சுறுத்தவும் தான் ...


"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை."
என்பதை நினைவில் கொண்டு இது போன்ற இழிவான நடவடிக்கைகளை நிறுத்தி ,உமா சங்கர் அவர்களை மீண்டும் உரியதொரு துறையில் பணியாற்ற அழைக்க வேண்டும் .

நன்றி -பதிவுலக நண்பர்கள்


1 comment:

tsekar said...

I support Umasankar IAS

-TSEKAR