Showing posts with label மொழிபெயர்ப்பு கவிதைகள். Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு கவிதைகள். Show all posts

Friday, 4 February 2022

நீதி

 நீதி ஒரு குருட்டு  தேவதை 

கறுப்பர்கள் நாங்கள் அறிந்தது தான் 

ரெண்டு சீழ்ப்பிடித்த சிரங்குகள்   ஒளிக்கும் அவள்  கட்டு 

எப்போதோ அவை கண்களாக இருந்திருக்கலாம் .


Justice 

That Justice is a blind goddess

Is a thing to which we black are wise:

Her bandage hides two festering sores

That once perhaps were eyes.


Langston Hughes



Monday, 31 May 2021

ஏக்கம்

அந்த அழகி இருந்தபோது ,

பூக்களால் நிறைந்திருந்தது அறை 

அவள் போய் விட்டாள் ,காலியாக கிடக்கிறது  படுக்கை 

பூ தைத்த  கம்பளி சுருட்டிக்கிடக்கிறது படுக்கையில்  

ஒருவரும் தூங்குவதில்லை 


மூன்று வருடங்கள் போய்விட்டன 

அந்தவாசம் இன்னமும்  இருப்பதாக முகர்கிறேன் 

அந்த வாசம் முடிந்துவிட்டது, அழியவில்லை .

அவள் போனாள் ,வருவதில்லை .

ஏக்கம் ,விழும் இலையை பழுக்க வைக்கிறது .

வெள்ளைப்  பனி கோர்க்கிறது பச்சை புல்லை.


Long yearning 

By Li Po 


When the beautiful woman was here, the hall was filled with flowers,

Now the beautiful woman's gone, the bed is lying empty.

On the bed, the embroidered quilt is rolled up: no-one sleeps,

Though three years have now gone by, I think I smell that scent.

The scent is finished but not destroyed,

The woman's gone and does not come.

Yearning yellows the falling leaf,

White dew beads the green moss.


பூக்கள்


குழந்தைகள் சலித்துவிட்டதாக

சொல்லிக்கொள்பவர்களுக்கு 

பூக்கள் இல்லை 


For those who proclaim

they've grown weary of children,

there are no flowers

 By Basho

Sunday, 8 November 2020

இன்றிரவில்

இன்றிரவில் 

மிக சோகமான 

வரிகளை எழுத முடியும் 


இந்த இரவு நட்சத்திரங்களாக இருக்கிறது  -  

நீல நட்சத்திரங்கள் தூரத்தில் நடுங்குகின்றன 

என்பது போல  


இரவு காற்று வானத்தில் சுழன்று  பாடுகிறது 


மிக சோகமான 

வரிகளை எழுத முடியும் 

இன்றிரவில் 


நான் அவளை காதலித்தேன். 

அவளும்  என்னை  காதலித்தாள், 

சில நேரங்களில் .


இதே போல்   இரவுகளூடே 

அவளை அணைத்திருந்தேன் 

முடியாத வானத்தின்  கீழ் 

முத்தங்களிட்டேன் 

மீண்டும் மீண்டும் .


சில நேரங்களில் 

அவள் என்னை காதலித்தாள் ;

அவளை நானும் .

உறைந்த அந்த  பெருங்கண்களை 

எப்படி காதலிக்காமல் இருப்பது  


இன்றிரவில் 

மிக சோகமான 

வரிகளை எழுத முடியும் 


அவள் என்னுடன் இல்லை 

அவளை தொலைத்துவிட்டேன்  


விசாலமான  ஒலிக்கும் இரவு -

இன்னமும் விசாலமாக   இருக்கிறது 

அவளில்லாமல் .

புல்லில் பனி போல 

உயிரில் விழுகிறது 

கவிதை .


என் காதல் அவளை தக்க வைக்காததால்  

என்னவாகபோகிறது 

இரவு நட்சத்திரங்களாக இருக்கிறது 

அவள் என்னுடன் இல்லை .


இவ்வளவுதான் .

தூரத்தில் யாரோ பாடுகிறார்கள் ,தூரத்தில் .

அவளை தொலைத்ததாக மனம் நம்பவில்லை 


அவளை அழைத்து வருவது போல 

என் பார்வை அவளை தேடுகிறது ,

என் இதயமும் .

அவள் என்னுடன் இல்லை .


அதே மரங்களை வெள்ளையாக்கும் அதே இரவு .

அன்றைய நாங்கள் இன்று நாங்களில்லை .

இப்போது  நான் நிச்சயமாக அவளை  காதலிக்கவில்லை 

ஆனால் எப்படி காதலித்தேன் !

அவள் காது  எட்டும்  காற்றை என் குரல் தேடுகிறது 


வேறொருவருக்கு ,

அவள் வேறொருவருக்கு,

என் முத்தங்களுக்கு முன்  போல்.

 

அவள் குரல் 

அவள் பளீர் உடல் 

அவள் முடிவில்லா கண்கள்... 


அவளை  நான் இப்போது காதலிக்கவில்லை .

நிச்சயமாக. 

ஒருவேளை காதலிக்கக்கூடும் ?  

காதல் சுருக்கமானது 

மறப்பது  நீளமானது .


இதே போல் இரவுகளில் 

அணைத்திருந்ததால் 

அவளை தொலைத்ததாக மனம் ஏற்கவில்லை .

இது அவள் எனக்கு உணர்த்தும் கடைசி வலியாகவும் 

இது நான் அவளுக்கு எழுதும் கடைசி பாடலாகவும்   

இருந்தும் கூட ....







Tonight I can write the saddest lines

Pablo Neruda


Tonight I can write the saddest lines.

Write, for example, 
'The night is starry and the stars are blue and shiver in the distance.'

The night wind revolves in the sky and sings.

Tonight I can write the saddest lines.
I loved her, and sometimes she loved me too.

Through nights like this one I held her in my arms.
I kissed her again and again under the endless sky.

She loved me, sometimes I loved her too.
How could one not have loved her great still eyes.

Tonight I can write the saddest lines.
To think that I do not have her. To feel that I have lost her.

To hear the immense night, still more immense without her.
And the verse falls to the soul like dew to the pasture.

What does it matter that my love could not keep her.
The night is starry and she is not with me.

This is all. In the distance someone is singing. In the distance.
My soul is not satisfied that it has lost her.

My sight tries to find her as though to bring her closer.
My heart looks for her, and she is not with me.

The same night whitening the same trees.
We, of that time, are no longer the same.

I no longer love her, that's certain, but how I loved her.
My voice tried to find the wind to touch her hearing.

Another's. She will be another's. As she was before my kisses.
Her voice, her bright body. Her infinite eyes.

I no longer love her, that's certain, but maybe I love her.
Love is so short, forgetting is so long.

Because through nights like this one I held her in my arms
my soul is not satisfied that it has lost her.

Though this be the last pain that she makes me suffer
and these the last verses that I write for her.

Translation by W. S. Merwin



Wednesday, 1 January 2020

கடவுள்

கடவுள் நான்
ஒரு நண்பனில்லாமல்,
தூய்மையில் தனியாய்.
முடியாத உலகம் .

கீழே ,
இளங்காதலர்கள்
இனிமையாக திரிகிறார்கள்
ஆனால் இறங்க முடியாது.
கடவுள் நான்.

வசந்தம் .
வாழ்க்கையே காதல் .
காதல் மட்டுமே வாழ்க்கை .
மனிதனாக இருக்கலாம்
கடவுளாக காட்டிலும்
தனிமையாய்


God 

Langston Hughes 

I am God—
Without one friend,
Alone in my purity
World without end.

Below me young lovers
Tread the sweet ground—
But I am God—
I cannot come down.

Spring!
Life is love!
Love is life only!
Better to be human
Than God—and lonely.





Monday, 2 September 2019

வசந்தம்

வயல்கள் சில்லிட்டிருக்கின்றன
பரவலான மழை விட்டது
வசந்தத்தின் நிறங்கள் எங்கும் மொய்க்கின்றன 
துள்ளும் மீன்களால் நிரம்பியிருக்கிறது நீலக்குளம்
பாடும் குருவிகளால் தோய்ந்திருக்கின்றன  பச்சைக்கிளைகள்
வயல் பூக்கள் அலசுகின்றன தங்கள்  அரிதாரக் கன்னங்களை
மலை புட்கள் இடுப்பளவில்  வளைந்திருக்கின்றன
மூங்கில் ஓடை ஓரம்,
காற்றடித்து
மெல்ல சிதறுகிறது
மேகத்தின் மிச்சம்  ...

Climbing  West Of Lotus Flower Peak - Poem by Li Po


The fields are chill, the sparse rain has stopped;
The colours of Spring teem on every side.
With leaping fish the blue pond is full;
With singing thrushes the green boughs droop.
The flowers of the field have dabbled their powdered cheeks;
The mountain grasses are bent level at the waist.
By the bamboo stream the last fragment of cloud
Blown by the wind slowly scatters away.


Sunday, 26 May 2019

நீர்வீழ்ச்சி


கதிரொளி  பாய்கிறது  ஆற்று கற்களில் .
ஆறு தடுமாறாமல் தாவுகிறது
பல உயரத்திலிருந்து-
மூவாயிரம் அடிகள் மின்னும் தண்ணீர்
வானிலிருந்து பொழியும் பால்வெளி 




Waterfall At Lu-Shan - Poem by Li Po

Sunlight streams on the river stones.
From high above, the river steadily plunges--

three thousand feet of sparkling water--
the Milky Way pouring down from heaven.


Sunday, 19 May 2019

விடை

தெற்கு சுவர்கள் தாண்டி கிடக்கின்றன நீல மலைகள்
நகரின் கிழக்கணைத்து போகிறது வெள்ளை தண்ணீர்
நண்பனே , இங்கே  பிரிகிறோம்
ஒருமுறை என்றென்றைக்கும்
பத்தாயிரம் மைல் போ ,
வேர்க்கொள்ளாத   ஆற்றுப்புல் போல, மிதந்து..
ஓ !மிதக்கும் மேகங்களும் பயணியின் எண்ணங்களும்
ஓ !அஸ்தமனமும்  பழைய நண்பனின் ஏக்கமும்
கையசைத்து பிரிகிறோம் வேறு திசைகளில்
நம் குதிரைகள் கனைக்கின்றன..மெல்ல மெல்ல    ...




Taking leave of a friend ...
Li Po 

Blue mountains lie beyond the north wall;
Round the city's eastern side flows the white water.
Here we part, friend, once forever.
You go ten thousand miles, drifting away
Like an unrooted water-grass.
Oh, the floating clouds and the thoughts of a wanderer!
Oh, the sunset and the longing of an old friend!
We ride away from each other, waving our hands,
While our horses neigh softly, softly . . . . 

Friday, 28 September 2018

கருப்பும் இல்லை வெள்ளையும் இல்லை

என் கிழவன் ஒரு வெள்ளை கிழவன்
என் அம்மை கருப்பு
என் வெள்ளை கிழவனை
நான் சபித்திருந்தால்
சாபங்களை  திரும்ப பெறுகிறேன்
என் கருப்பு அம்மையை நான் சபித்திருந்தால்
நரகத்திற்கு போகட்டும்  என்று நினைத்திருந்தால்
அந்த கெட்ட எண்ணத்துக்கு வருந்துகிறேன் 
அவள் நன்றாக இருக்கட்டும் .
என் கிழவன் ஒரு பங்களாவில் செத்து  போனான்
என் அம்மை குடிசையில் ..
கருப்பும்  இல்லை வெள்ளையும் இல்லை
நான் சாகப்போவது எங்கேயோ !




Cross -
Poem by Langston Hughes




My old man's a white old man
And my old mother's black.
If ever I cursed my white old man
I take my curses back.
If ever I cursed my black old mother
And wished she were in hell,
I'm sorry for that evil wish
And now I wish her well
My old man died in a fine big house.
My ma died in a shack.
I wonder where I'm going to die,
Being neither white nor black?

Wednesday, 14 February 2018

நான் கடவுள்

நான் கடவுள் -
ஒற்றை   நண்பன் இல்லாமல்  
தூய்மையில் தனித்து .
முடிவில்லாத உலகம்
உலகம்  உலவும் இளங்காதலர்கள்
ஆனால் -நான் 
இறங்க முடியாத கடவுள்.
வசந்தம் ...
வாழ்க்கையே  காதல் 
காதல் மட்டுமே வாழ்க்கை
மனிதனாகவே  இருக்கலாம் -
எதற்கு கடவுளாக -
ஒண்டியாய்


God - Poem by Langston Hughes

I am God—
Without one friend,
Alone in my purity
World without end.
Below me young lovers
Tread the sweet ground—
But I am God—
I cannot come down.
Spring!
Life is love!
Love is life only!
Better to be human
Than God—and lonely

Sunday, 10 December 2017

தேனீ எனக்கு பயப்படவில்லை

தேனீ எனக்கு  பயப்படவில்லை
வண்ணத்துப்பூச்சியை எனக்கு தெரியும்
காட்டின் அழகிகள் என்னை
ஆசையாய் வரவேற்கிறார்கள்

நான் வருகையில் 
இன்னமும் சத்தமாக  ஓடைகள் சிரிக்கும்
இன்னமும் பித்தாக காற்றுகள்  விளையாடும்
ஏன் ,என் கண்களே உன் வெள்ளிப் படலங்கள்
ஏன் ,ஓ கோடை காலமே ?



The Bee is not afraid of me.
By Emily Dickinson 

The Bee is not afraid of me.
I know the Butterfly.
The pretty people in the Woods
Receive me cordially—

The Brooks laugh louder when I come—
The Breezes madder play;
Wherefore mine eye thy silver mists,
Wherefore, Oh Summer's Day?

Sunday, 12 November 2017

பழந்தூசு

வாழ்பவர் ,கடந்து போகும் பயணி
இறந்தவர் ,வீடு சேர்ந்தவர்
சொர்க்கம்  பூமி இடையே ஒரு குறு பயணம்
அதன்பின்,
நாம் பத்தாயிரம் நூற்றாண்டுகளின் பழந்தூசு மட்டுமே 
நிலாவில் முயல் மருந்துகளை வீணே இடிக்கிறது
ஃபூ -சங்  ,இறவாவரத்தின் மரம் 
எரியும் விறகுகளாக  நொறுங்கி போனது
மனிதன் இறக்கிறான் ,
அவன் வெள்ளை எலும்புகள் வார்த்தையற்று ஊமைகளாகின்றன, 
பச்சை பைன்கள் வசந்தத்தின் வருகை உணரும் போது .
திரும்பி பார்த்து பெருமூச்செறிகிறேன் ,
முன்னும் பார்த்தும் பெருமூச்செறிகிறேன்
மெச்ச என்ன இருக்கிறது  
வாழ்க்கையின்  கணநேர பெருமையில்...




The Old Dust - Poem by Li Po


The living is a passing traveler;
The dead, a man come home.
One brief journey betwixt heaven and earth,
Then, alas! we are the same old dust of ten thousand ages.
The rabbit in the moon pounds the medicine in vain;
Fu-sang, the tree of immortality, has crumbled to kindling wood.
Man dies, his white bones are dumb without a word
When the green pines feel the coming of the spring.
Looking back, I sigh; looking before, I sigh again.
What is there to prize in the life's vaporous glory?


Wednesday, 23 August 2017

கடவுள்கள்

தந்தக்  கடவுள்கள்
கருங்காலி கடவுள்கள்
வைர மாணிக்க கடவுள்களும்
கோவில் அடுக்குகளில் மௌனமாய்  உட்கார்ந்திருக்கிறார்கள்
மக்களோ  பயப்படுகிறார்கள்
ஆனால்
இந்த தந்தக்கடவுள்கள்
கருங்காலி கடவுள்கள்
அப்புறம் வைர மாணிக்க கடவுள்களும்
வெறும் அற்ப பொம்மை கடவுள்கள்
அந்த மனிதர்களே செய்தவை


Gods - Poem by Langston Hughes


The ivory gods,
And the ebony gods,
And the gods of diamond and jade,
Sit silently on their temple shelves
While the people
Are afraid.
Yet the ivory gods,
And the ebony gods,
And the gods of diamond-jade,
Are only silly puppet gods
That the people themselves
Have made.

Monday, 17 July 2017

நீண்ட ஏக்கம்

அந்த அழகி இருந்த போது
பூக்கள்  நிறைந்திருந்தது அறை
இப்போது அழகி  போய்விட்டாள்
காலியாக கிடக்கிறது கட்டில் 
பூக்கள் தைத்த போர்வை
சுருட்டிக்கிடக்கிறது மெத்தைமேல் ,
யாரும் படுப்பதில்லை .
மூன்று வருடங்கள் ஆன போதும்
இன்னமும் அந்த வாசனை முகர்கிறேன்
வாசனை காலியானது, அழியவில்லை
பெண் போனாள் வரவில்லை
ஏக்கத்தில் பழுக்கிறது விழும் இலை
வெள்ளை பனி கோர்க்கிறது பச்சை பாசியை

Long yearning - 
By Li Po
 

When the beautiful woman was here, the hall was filled with flowers,
Now the beautiful woman's gone, the bed is lying empty.
On the bed, the embroidered quilt is rolled up: no-one sleeps,
Though three years have now gone by, I think I smell that scent.
The scent is finished but not destroyed,
The woman's gone and does not come.
Yearning yellows the falling leaf,
White dew beads the green moss.

Wednesday, 4 January 2017

இனம்

சிலர் அடுத்தவரிடம்  கடிக்கிறார்கள்
ஒரு கா
லையோ 
கையையோ 
எதையோ
 
பல்லில்  கவ்வி
ஆன வேகத்தில் வெளியே ஓடி
மண்ணில் மூடுகிறார்கள்
  
மற்றவர்களோ  பரப்பி வைக்கிறார்கள்
முகர்ந்து பார்த்து முகர்ந்து பார்த்து 
மொத்த மண்ணையும் தோண்டி வைக்கிறார்கள்

அதிர்ஷ்டம் இருந்து
ஒரு கையோ ஒரு காலோ
எதுவோ கிடைத்தால்
அவர்கள் முறை கடிக்க
 

கலகப்பாக ஆட்டம் தொடர்கிறது

கைகள் இருக்கும் வரை
கால்கள் இருக்கும் வரை
ஏதோ ஒன்று இருக்கும் வரை


Race - Poem by Vasko Popa


Some bite from the others
A leg an arm or whatever

Take it between their teeth
Run out as fast as they can
Cover it up with earth

The others scatter everywhere
Sniff look sniff look
Dig up the whole earth

If they are lucky and find an arm
Or leg or whatever
It's their turn to bite

The game continues at a lively pace

As long as there are arms
As long as there are legs
As long as there is anything

Saturday, 17 September 2016

ஒருவேளை


எதுவாக  முடியுமோ அதுவாக இருப்போம்
ஒருவேளை ஆகியிருக்கும்  ,
ஆனால் இதனால் ,அதனால் அப்புறம் இதனால்
என்று சொல்லாதீர்கள்
எந்த விதியாலும் நம் பாதை மாற்ற முடியாது
ஆனவனால்  மட்டுமே முடியும்


 நாம் செய்வதை  செய்வோம் .
கனவு காணாதீர்கள்
வாய்ப்பு வீரனை கைவிடுகிறது ,மகுடமில்லாமல் அழ
எது  போல தோன்றுகிறார்களோ
அது போலவே மக்கள்
இது என் எண்ணம் .
செய்து முடித்தவன் ,செய்தவனாகிறான்

 
ஏற முடிந்த இடங்களில்  ஏறுவோம்  .
என்னிடம் சொல்லாதீர்கள்
உச்சி தொடாமல் செய்த கடும் புயல்கள் பற்றி
அண்டிய  சிகரத்தை தொடாத கழுகுண்டா
ஏறுபவன் எப்படியும் ஏறுவான்


"ஒருவேளை  ஆகியிருக்கும்" எனக்கு பிடிக்காத தொடர்
வலிமை இல்லை அதில் அப்புறம்  
வாழ்க்கையின் சிறப்பான  நிஜங்களை அது திரிக்கிறது
நான் நம்புகிறேன்
நம்மிடம் உண்டென 
நாம் எட்டுகிறோம்
நாம் வெல்கிறோம் 
நம் பாலைகள் எதுவான போதும்


"It Might Have Been" - Poem by Ella Wheeler Wilcox


We will be what we could be. Do not say,
"It might have been, had not this, or that, or this."
No fate can keep us from the chosen way;
He only might who is.

We will do what we could do. Do not dream
Chance leaves a hero, all uncrowned to grieve.
I hold, all men are greatly what they seem;
He does, who could achieve.

We will climb where we could climb. Tell me not
Of adverse storms that kept thee from the height.
What eagle ever missed the peak he sought?
He always climbs who might.

I do not like the phrase "It might have been!"
It lacks force, and life's best truths perverts:
For I believe we have, and reach, and win,
Whatever our deserts.

Tuesday, 9 August 2016

இரவில் நினைவுகள்

என் படுக்கையின் முன்னே
பளிச் நிலவொளி இருக்கிறது
பளிச்சென்பதால் 
தரையில் பனிபோல் 


தலையை தூக்கி
பளீர் நிலவை பார்க்கிறேன்
தலையை தாழ்த்தி
கனவு காண்கிறேன்
நான் வீடு வந்ததாக 


Quiet Night Thoughts - Poem by Li Po

Before my bed
there is bright moonlight
So that it seems
Like frost on the ground:

Lifting my head
I watch the bright moon,
Lowering my head
I dream that I'm home.

Tuesday, 2 August 2016

வைன்

குடித்துக்கொண்டு ,உட்கார்ந்திருக்கிறேன்
இரவுக்கு தொலைந்து .
உதிரும் இலைகளை
தரையிடமிருந்து ஏந்தி
தொடர எழுகிறேன்
ஓடையின் வெள்ளை நிலாவை
பறவைகளின் அறிகுறிகள் இல்லை
மனிதர்கள் போய்விட்டிருக்கிறார்கள்




 Wine - Poem by Li Po

Drinking, I sit,
Lost to Night,
Keep falling petals
From the ground:
Get up to follow
The stream’s white moon,
No sign of birds,
The humans gone.

Thursday, 12 May 2016

உயிரோடிரு


ரேசர்கள் வலிக்க  செய்யும்
ஆறுகள்  சொதசொதவென்றிருக்கும்
ஆசிட்கள் கறையாக்கும்
அப்புறம்
மாத்திரைகள் நோவு  தரும்
துப்பாக்கிகள் சட்டவிரோதம்
சுருக்குகள் விட்டுப்போகும்
கேஸ் கடும் நாற்றம்
நீ வாழ்ந்தே தொலைக்கலாம்


Resume
By Dorothy Parker


Razors pain you;
Rivers are damp;
Acids stain you;
And drugs cause cramp.
Guns aren't lawful;
Nooses give;
Gas smells awful;
You might as well live.


Sunday, 16 August 2015

எல்லோருடனும் தனியாக

சதை  மூடுகிறது  எலும்பை
ஒரு மனதை போட்டு வைக்கிறார்கள்
அதனுள்
சிலநேரங்களில்
ஒரு ஆன்மாவையும்
பிறகு பெண்கள்
ஜாடிகளை
சுவற்றில்  மோதி உடைக்கிறார்கள்
ஆண்கள் அதிகமாக
குடிக்கிறார்கள் 

அந்த ஒருவரை 
கண்டுபிடிப்பதில்லை
எவரும்

ஆனால் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்
படுக்கைகளின்
உள்ளே வெளியே ஊர்ந்தபடி
சதை மூடுகிறது எலும்பை
சதை தேடுகிறது
இன்னமும் சதையென

வாய்ப்பே இல்லை
நாம்
ஒற்றை விதியில்
சிக்கியிருக்கிறோம்

அந்த ஒருவரை  எவரும்
கண்டுபிடிக்க முடிவதில்லை

நகர கழிவு கிடங்குகள் நிறைகின்றன
குப்பை கூளங்கள் நிறைகின்றன
பைத்தியக்கார விடுதிகள் நிறைகின்றன
மருத்துவமனைகள் நிறைகின்றன
கல்லறைகள் நிறைகின்றன


வேறு எதுவும் நிறைவதில்லை  

Alone With Everybody - 

by Charles Bukowski



the flesh covers the bone
and they put a mind
in there and
sometimes a soul,
and the women break
vases against the walls
and the men drink too
much
and nobody finds the
one
but keep
looking
crawling in and out
of beds.
flesh covers
the bone and the
flesh searches
for more than
flesh.

there's no chance
at all:
we are all trapped
by a singular
fate.

nobody ever finds
the one.

the city dumps fill
the junkyards fill
the madhouses fill
the hospitals fill
the graveyards fill

nothing else
fills.