Monday 6 October 2008

பிறன்மனை நோக்காமை

ஆதரவற்று போய் விட்டதால் சிலர் இந்த சமூகத்தில் எத்தனை இன்னல்கள் பட நேர்கிறது ?

இந்த பெண் வயது வெறும் இருபது தான் .தாயும் தந்தையும் சிறு வயதிலேயே இறந்து விட தன் பாட்டி (ஆத்தா ),மாமன்கள் என்று பலரது வீட்டிலும் மாறி மாறி வளர்ந்தவர் .இவர் தம்பி தங்கைகளோ வேறு உறவினர்களிடம் .

பதினெட்டு வயதானவுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.மாப்பிள்ளை
எச்.ஐ.வி நோயாளி .அதுவாகிலும் பரவாயில்லை .இந்த மாப்பிள்ளைக்கு ஒரு அண்ணன் ,ஏதும் வருமானம் இல்லாமல் .நன்கு சம்பாதிக்கும் கொழுந்தனை
கைக்குள் போட்டுக் கொண்டு அண்ணி ,சித்திரவதை செய்ததோடல்லாமல் ,மூன்று மாத கர்ப்பமாக இருந்த போது வீட்டை விட்டு விரட்டியும் விட்டாள் .

இப்போது இந்த பெண் ,கை குழந்தையுடன் வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறார் .எச்.ஐ.வி நோயும் வேறு தொற்றிக் கொண்டது .ஆத்தாவிடம் குழந்தையை விட்டு விட்டு கூலி வேலை செய்கிறார் .எவர் சமரசம் பேச சென்றாலும் அண்ணியே பேசுவதால் தீர்வு வரவில்லை ...வரப் போவதுமில்லை ....


2 comments:

ஆயில்யன் said...

:(((((

அமிர்தவர்ஷினி அம்மா said...

பெண்ணுக்கு பெண்ணே எதிரி.

யாரோ செய்த, செய்கின்ற தவறுக்கு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறி.