Friday 13 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை

நா நாலு இல்ல அஞ்சு படிச்சப்ப ன்னு நெனைக்கிறேன் .மங்கி கிராப்ப விட்டு முடிய வளக்க ஆரம்பிச்சோம் .காலயில அனேகமா எனக்கு தல வாரி விடுறது பொன்னம்மாவா தான் இருக்கும் .ஜாடியிலிருந்த எண்ணெயில பாதி எண்ணெய கீழ கொட்டாம (ரொம்ப கஷ்டம் இது ) ரெண்டு கையிலேயும் ஏந்திக்கிட்டு வருவா .அப்படியே அத என்னோட நடு மண்டையில வச்சு தேச்சு விடுவா .அப்புறம் ஜடைய பின்ன ஆரம்பிப்பா .ஒவ்வொரு கால பின்னின்னப்புறமும் அத டைட் செய்வா பாருங்க , தல வலிக்கும் ,ஆனா பின்னல் மட்டும் கலையவே கலையாது .ஜடைய கழட்டி விட்டப்புறமும் கூட பின்னல் போட்டாப்லேயே இருக்கும் .

அப்புறம் தோள் அளவு மட்டுமே இருந்த என்னோட முடி வளந்து இடுப்பு வரைக்கும் வந்திருச்சி .ரெட்டை ஜடை போட்டுட்டு தான் ஸ்கூலுக்கு போவேன் .நுனி வரைக்கும் எண்ணெய் வச்சு ரிப்பன் வச்சு மடிச்சு கட்டி ....இது அந்த கால கதாநாயகிகளோட மட்டுமில்ல ,என்னோட ஸ்டைலும் கூட .என்னோட சண்டேக்கள் பலவும் என்னோட முடி பராமரிப்புக்கே செலவாச்சு .காலயில எண்ணெய் தேச்சு ,சீயக்கா வச்சு தேச்சு முடிய காயப் போட்டு , ஒரு நாள் போய்டும் .

இப்படியே நடந்துகிட்டு இருந்திச்சு .நா எட்டாவது படிக்கும் போது முடி இன்னமும் அடர்த்தியா இருந்தா நல்லா இருக்குமே ன்னு தோணிச்சு .எங்கம்மா சொன்னங்க ,"நாங்கெல்லாம் சின்ன வயசா இருந்தப்ப ,கேசவர்த்தினி எண்ணெய் தான் தேச்சோம் .அதுக்கப்புறம் தான் முடி அடத்தியா வளந்துச்சி ."இத நம்பி நானும் கேசவர்த்தினிய வாங்கி தேய்க்க ஆரம்பிச்சா முடி கத்தக்கத்தையா கொட்ட ஆரம்பிச்சிருச்சி .

அடுத்த இடுகையில முடியும் ...


4 comments:

ம.தி.சுதா said...

சகோதரி இப்புடி பொய் சொல்லப்படாது.... அப்ப டோப்பா....... சரி ..சரி காத்திருப்போம். அடுத்த பதிவுவரை... விரைவில் போடாட்டி தலை புழுத்து சாவீங்கள்..
வாழ்த்துக்கள். பயந்திட்டிங்களா?

பூங்குழலி said...

நானே வருத்தத்தில இருக்கும் போது இப்படி டோப்பா ன்னு பயமுறுத்திறீங்களே ,இது நியாயமா ?அப்புறம் தலை புழுத்து போவீர்கள் ன்னு ஒரு வாழ்த்து ? வேற ...சீக்கிரமா எழுதி முடிக்கணும் .ஒங்க சாபம் பலிச்சிருச்சுன்னா என்ன செய்யறது ..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

Jerry Eshananda said...

சீக்கிரம் "முடி" ங்க மேடம்.[வயித்தெரிச்சலா இருக்கு.]

பூங்குழலி said...

சீக்கிரமா முடிக்கனும் தான் முயற்சி பண்றேன் .முடியலையே ...இன்னமும் ஒரே ஒரு நாள் கொடுங்க ...நாளையோட அள்ளி முடிஞ்சரலாம் .வயித்தெரிச்சல் எதுக்கு ?ஜெலுசில் முயற்சி பண்ணுங்களேன்

நன்றி ஜெரி