போன வாரத்தில் பரிசோதனைக்காக வந்திருந்தார்கள் .அவர்களின் நான்கு வயது மகனின் குறும்புத்தனத்தில் மருத்துவமனையே அல்லோகலபட்டுக் கொண்டிருந்தது .என் அறையின் உள்ளே வந்ததும் ,"அப்பா ஒனக்கு ஊசி தான் . எங்கப்பாவுக்கு ஊசி போடுங்க .வீட்டில ஒரே சேட்ட .அம்மாவுக்கு வேண்டாம் ."பேசிக் கொண்டே இருந்தான் .ரைம்ஸ் சொன்னான் .அதட்ட முயன்ற அவன் அப்பாவை கண்டுகொள்ளாமல் ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டே இருந்தான் .
வெளியே கிளம்பும் போது ,வெள்ளை கோட் அணிந்திருந்த என்னை சட்டென்ற குனிந்து பார்த்துவிட்டு சொன்னான் ,"என்ன நீங்க சுரிதார் போட்டிருக்கீங்க ?நீங்கல்லாம் பொடவ தான கட்டனும் ?"
No comments:
Post a Comment