Wednesday 20 July 2011

வெஜிடேரியன் வீடுகள்




இரண்டு வருடங்களுக்கு முன் நான் அப்போது குடியிருந்த வீட்டை காலி செய்ய வேண்டியிருந்தது .ஹிந்துவின் ரெண்டல்ஸ் பகுதியில் தேடிய போது ,சில விளம்பரங்களில் வெஜிடேரியன்ஸ் ஒன்லி என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள் .இன்னமும் சிலரோ ,பிராமின்ஸ் ஒன்லி என்று போட்டிருக்கிறார்கள் .



எனக்கு வீடு பார்த்த ஒரு  தரகர் சொன்ன சம்பவம் இது .ஒரு வெஜிடேரியன் குடும்பத்தினருக்கு வாடகைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தாராம் .அவர் சொன்ன வாடகைக்கு ஒப்புக் கொண்டு வந்தவர்கள் பலரும் நான்- வெஜிடேரியன்ஸ் .அதனால் வீடு முடியாமலேயே இருந்ததாம் .வீட்டில் சமைக்க மாட்டோம் என்று சிலர் சொன்னதை கூட வீட்டுக்காரர் ஏற்றுக் கொள்ளவில்லையாம் .சுத்த சைவமாக இருக்கவேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம் .ஒருநாள் இவர் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த போது ஏதேச்சையாக பார்த்தால் வீட்டுக்காரர் நின்றுக் கொண்டிருந்தது ஒரு மீன் கடையில் !"எனக்கு சரியான கோபம்மா என்னெல்லாம் சொல்லி என்னைய அலைய விட்டாரு ....ங்க அசைவம் சாப்பிட்டாக் கூட கோழிக் கறி சாப்பிடுவாங்க ,பார்த்திருக்கேன் ...ஆனா மீன் சாப்பிட மாட்டாங்க .இவரு மீன் கடையில மீன் வாங்கிட்டிருக்காரு.இதுல ஆயிரம் கண்டிஷன்.எனக்கு வந்த கோபத்துல ,டேய் ! ...ன்னு கத்திட்டேன் ."



என் தோழி ஒருத்தி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அசைவம் சமைக்கக் கூடாது .வாங்கிக்கொண்டு வந்து வேண்டுமானால் சாப்பிடலாம் . ஆனால் வீட்டில் சமைக்க அனுமதியில்லை .இன்னமும் சில இடங்களில் வாடகை குறைவாக இருக்கிறதே என்று விசாரித்தால் ,இதுவும் சைவம் மற்றும் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமாக இருக்கிறது .சிலர் வாடகைக்கு மட்டுமல்ல விற்கும் போதும் வெஜிடேரியன்ஸ் ஒன்லி என்று கண்டிஷன் போட்டே விற்கிறார்கள் .




இதற்கெல்லாம் உச்சமாக நேற்று ஜெயின்ஸ் ஹவுசிங் இன் விளம்பரத்தில் கீழ்பாக்கத்தில் அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் "ஆர்ச் வே " என்ற குடியிருப்பை பற்றி விசாரிக்கையில் அது,
"பார்    வெஜிடேரியன்ஸ் அண்ட் நார்த் இந்தியன்ஸ் ஒன்லியாம் !!!!!! "


நான் சிறுமியாக இருந்த போது ,திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில் குடியிருந்தோம் .அந்த ஓனர் சொல்வாராம் ,"என்னுடைய வீட்டை "நான் -வெஜிடேரியன்ஸுக்கு" மட்டுமே வாடகைக்கு தருவேன் .அவர்கள் வெஜிடேரியன்ஸுக்கு மட்டும் என்று சொல்வது சரியென்றால் நான் சொல்வதும் சரிதான் ."


19 comments:

rajamelaiyur said...

நல்ல பதிவு ...

rajamelaiyur said...

நானும் வெஜ்டேரியன் தான்

Yaathoramani.blogspot.com said...

நல்ல குடும்பமாய் இருக்கவேண்டும்
குடும்ப அங்கத்தினர்கள் குறைவாக இருக்கவேண்டும்
எனவெல்லாம் சொன்னால் சரியெனச் சொல்லலாம்
இது என்ன வெஜ் நா-வெஜ்
மெட்ராசில் ரொம்பத்தான் ஆடுகிறார்கள் என நினைக்கிறேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Amudhavan said...

சென்னையில் மட்டுமல்ல இங்கு பெங்களூரிலும் சில இடங்களில் இப்படியெல்லாம் உண்டு. நாம் சில ஆட்சியாளர்களை மட்டும்தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்று நினைக்கின்றோம். அப்படியெல்லாம் இல்லை. சாதாரணர்கள்கூட தங்களுக்கு அதிகாரம் பண்ணும் இடம் என்பதாக எதையாவது கருதிக்கொண்டார்களேயானால் இம்மாதிரியான கோணங்கி அதிகாரங்களைப் பண்ணாமல் விடுவதில்லை. தங்கள் பார்வை சரியான பார்வை பூங்குழலி.

இராஜராஜேஸ்வரி said...

அழுத்தமான பகிர்வு.

பூங்குழலி said...

நானும் வெஜ்டேரியன் தான்

பாராட்டுக்கு நன்றி ...நீங்களும் வெஜிடேரியன் என்றால் உங்களுக்கு சென்னையில் வீடு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது ...:)

ஷர்புதீன் said...

:-)

பூங்குழலி said...

இது என்ன வெஜ் நா-வெஜ்
மெட்ராசில் ரொம்பத்தான் ஆடுகிறார்கள் என நினைக்கிறேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

இது வெறும் ஆட்டம் சம்பந்தமான விஷயம் இல்லை ..உள்ளூர ஊடுருவியிருக்கும் ஜாதி சிந்தனையின் வெளிப்பாடுகள் ...உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி

பூங்குழலி said...

சாதாரணர்கள்கூட தங்களுக்கு அதிகாரம் பண்ணும் இடம் என்பதாக எதையாவது கருதிக்கொண்டார்களேயானால் இம்மாதிரியான கோணங்கி அதிகாரங்களைப் பண்ணாமல் விடுவதில்லை. தங்கள் பார்வை சரியான பார்வை பூங்குழலி.


நீங்கள் சொல்லும் கோணம் சரியானது தான் .அதற்கான வெளி கிடைக்கும் போது எல்லோரும் அதிகாரம் செலுத்த தயாராகவே இருக்கிறார்கள்.நன்றி அமுதவன் .

பூங்குழலி said...

சாதாரணர்கள்கூட தங்களுக்கு அதிகாரம் பண்ணும் இடம் என்பதாக எதையாவது கருதிக்கொண்டார்களேயானால் இம்மாதிரியான கோணங்கி அதிகாரங்களைப் பண்ணாமல் விடுவதில்லை. தங்கள் பார்வை சரியான பார்வை பூங்குழலி.


நீங்கள் சொல்லும் கோணம் சரியானது தான் .அதற்கான வெளி கிடைக்கும் போது எல்லோரும் அதிகாரம் செலுத்த தயாராகவே இருக்கிறார்கள்.நன்றி அமுதவன் .

பூங்குழலி said...

அழுத்தமான பகிர்வு.

நன்றி இராஜராஜேஸ்வரி

பூங்குழலி said...

நன்றி ஷர்புதீன்

செங்கோவி said...

நாங்களும் இதே அவஸ்தையை பட்டிருக்கின்றோம்!!

பூங்குழலி said...

நாங்களும் இதே அவஸ்தையை பட்டிருக்கின்றோம்!!//


வீடு மாற்றுவதே முதலில் கஷ்டமான வேலை ..அதோடு இப்படி கண்டிஷன்ஸ் வேறு

குடந்தை அன்புமணி said...

இன்னும் சிலர் கிறித்துவர்களுக்கு மட்டும் என்று சொல்கிறார்கள். சிலர் பேச்சிலர்களுக்கு மட்டும் என்கிறார்கள். சிலகாலம் முன்வரை பேச்சிலர்களுக்கு வீடு இல்லையென்று சொல்லிவந்தார்கள். இப்போது எல்லாம் தலைகீழ் மாறிவிட்டது.

குடந்தை அன்புமணி said...

அவசியம் என்னை தொலைபேசியிலோ அல்லது மெயிலிலோ தொடர்பு கொள்ளவும். எனது வலைத்தளத்தில் எண் மற்றும் மெயில் முகவரி உள்ளது.

பூங்குழலி said...

இன்னும் சிலர் கிறித்துவர்களுக்கு மட்டும் என்று சொல்கிறார்கள். சிலர் பேச்சிலர்களுக்கு மட்டும் என்கிறார்கள். சிலகாலம் முன்வரை பேச்சிலர்களுக்கு வீடு இல்லையென்று சொல்லிவந்தார்கள். இப்போது எல்லாம் தலைகீழ் மாறிவிட்டது//

வாடகைகள் எக்கச்சக்கமாக ஏறிப் போயிருக்கின்றன ....கட்டுப்படியாகும் வாடகையில் வீடு கிடைப்பதே சிரமமாக இருக்கிறது .ஜாதி மதம் என்று காரணம் சொல்லி வீடு தர மறுப்பது குற்றமே ...

அவசியம் என்னை தொலைபேசியிலோ அல்லது மெயிலிலோ தொடர்பு கொள்ளவும். எனது வலைத்தளத்தில் எண் மற்றும் மெயில் முகவரி உள்ளது//
.உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன் .



வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கோவி.கண்ணன் said...

//"பார் வெஜிடேரியன்ஸ் அண்ட் நார்த் இந்தியன்ஸ் ஒன்லியாம் !!!!!! " //

ஒண்ட வந்த பிடாரி
:)

பூங்குழலி said...

உண்மை தான் கோவி கண்ணன் ..இது ஒரு வகை குடியேற்றம் போலிருக்கிறது