Tuesday 17 January 2012

இளிப்புகள்

பல வேடதாரிகளின்
மேடையாக இருக்கிறது
காலம்
பல்லிளுப்புகளும் பாசாங்குகளும்
கடவு சீட்டாக
 
வசீகர இளிப்பு
ஒய்யார இளிப்பு
சொத்தை இளிப்பு என
வகைவகையாக கிடைக்கின்றன
இளிப்புகளும்
 
வசீகர இளிப்புகள்
ரசிக்கப்பட்டாலும்
வசப்படுத்துபவை என
அஞ்சப்படுகின்றன
 
 
ஒய்யார இளிப்புகள்
வகை அறியப்பட்டவுடன்
விலக்கப்படுகின்றன
பதில் இளிப்புகளுடன்
 
 
சொத்தை இளிப்புகள்
வேடிக்கை செய்யப்படுகின்றன
பொருட்டாகவே இல்லாதவை போல்
பாவிக்கப்படுகின்றன
 
 
ஆனாலும்
சொத்தை இளிப்புகள்
பெரும் மேடைகளில் வீற்றிருக்கின்றன
அலங்காரமாக .
 எது கருதியோ
இவை போதுமென்றே
ஏற்றிவைக்கிறார்கள்
மேடைக்கு உரியவர்களும்
 
 
தத்தம் பாசாங்குகள்
இவற்றினூடே பரிமளிக்கக்கூடும்
என்ற ஆவலினாலும்...
அவ்விளிப்புகளும்
இப்பாசாங்கு அறியாதது போல்
கொலுவிருக்கின்றன
வசீகரங்களுக்கான வெளியை
விழுங்கியபடி ,
 
என்றோ ஒரு மெய்நாளில்
இவ்விளிப்புகளை விலக்க நேரிடும் போது
மேடையும் காலமும்
இவற்றினுடையதென மாறியிருக்கின்றன
 
 
இம்மேடையில்
இனி ஒண்டவும் இடமில்லை என
தவிர்த்து ஒதுங்குகின்றன
பிற இளிப்புகளும் பாசாங்குகளும்
சாலையோரங்களில் அன்றாடம்
மண்டிக் கிடக்கின்றன  
நிராகரிப்புகளாக......


11 comments:

எல் கே said...

good one

Rekha raghavan said...

அருமை.

பால கணேஷ் said...

என்றோ ஒரு மெய்நாளில் | இவ்விளிப்புகளை விலக்க நேரிடும் போது | மேடையும் காலமும் | இவற்றினுடையதென | மாறியிருக்கின்றன.
-வசீகர வார்த்தைகள்! மிகவும் ரசித்தேன். அருமை!

சசிகலா said...

அருமை

பூங்குழலி said...

எல்கே ,ரேகா ,கணேஷ் ,சசிகலா ..உங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Admin said...

அற்புதமான கவிதை.இன்றைய நாளில் பெரும்பான்மையான மனிதங்கள் இப்படித்தான்..

பல வேடதாரிகளின்
மேடையாக இருக்கிறது
காலம்
பல்லிளுப்புகளும் பாசாங்குகளும்
கடவு சீட்டாக..

ஆரம்பமே சிறப்பு..

பூங்குழலி said...

மிக்க நன்றி மதுமதி ..வேடங்களுக்கு இருக்கும் மதிப்பு நிஜங்களுக்கு இல்லை

Admin said...

வணக்கம் சகோதரி..தங்களின் இந்த கவிதையை வலைச்சரத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும்.நன்றி.

Prem S said...

//ஆனாலும்
சொத்தை இளிப்புகள்
பெரும் மேடைகளில் வீற்றிருக்கின்றன
அலங்காரமாக .//உண்மை உண்மை

பூங்குழலி said...

உங்கள் சிறப்பான அறிமுகத்திற்கு நன்றி மதுமதி

பூங்குழலி said...

மிக்க நன்றி பிரேம்