Monday 18 November 2013

தாய்மை

தொடர்ந்து சிகிச்சைக்கு  வந்து கொண்டிருக்கும் பெண் .போன மாதத்தில் வந்த போது கருவுற்றிருப்பது  தெரிய வந்தது .முன்பே இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு .கண்டிப்பாக இந்த குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக் சொன்னார் .அதற்குரிய  பரிசோதனைகள் முடித்து ஒரு மாதம் சென்று மீண்டும் செக் அப் பிற்கு வர சொல்லி அனுப்பி வைத்தேன் .

இன்று வந்த போது ,"எனக்கு இந்த குழந்தை வேண்டாம் .அபார்ஷன்   செஞ்சுக்கறேன்  " என்று கூறினார் ."போன மாசம் குழந்தை வேணும்னு சொன்னீங்க ,இந்த மாசம் வேணாம்ன்னு சொல்றீங்க .மாசா  மாசம் இப்படி முடிவை மாத்திக்கிட்டு ..வெளையாட்டா என்ன ?'என்றேன் .இப்ப ஏன் வேணாம்ன்னு சொல்றீங்க ?" 

"எங்க ரெண்டு பேருக்கும் இந்த கொழந்தையை பெத்துக்கணும் ஆசை தான் .ஆனா இவங்க வீட்டுல  ஒரு மாசமா ஒரே டார்ச்சர் .இவங்க அக்கா  தெனம் போன் பண்ணி ,இந்த கொழந்த  தேவையான்னு கேட்டு திட்டுறாங்க .ஒங்க உடம்பே சரியில்ல ..இதுல மூணாவது வேறயான்னு கேக்குறாங்க .ஒங்களுக்கு ஏதாவது ஆனா யாரு பாத்துக்குவான்னு என்னமோ பேசுறாங்க .நீ ஏற்கெனவே ரெண்டு பொண்ணு பெத்தவ ,இதுவும் ஒனக்கு பொண்ணா தான் பொறக்கும் .அப்ப எப்படி சமாளிப்பன்னு திட்டுறாங்க.அதோட அவங்களுக்கு இது ப்ரெஸ்டீஜ்  ப்ராப்ளமாம் .ஊருல அவங்க நான் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன்  பண்ணியிருக்கேன்னு சொல்லியிருக்காங்களாம் .இப்ப நா மாசமா இருக்கிறது தெரிஞ்சா ஊர்ல அவங்கள பொய் சொல்லிட்டாங்கன்னு தப்பா பேசுவாங்களாம் .
இப்படியெல்லாம் ஏதேதோ சொல்றாங்க ."

"கொழந்த  பெத்துக்கறது  ஒங்களோட சொந்த விருப்பம் .ஒங்க ரெண்டு பேர்  மட்டுமே சம்பந்தப்பட்டது .இதுல தலையிடவோ திட்டவோ யாருக்கும் உரிமை இல்லை ,"என்ற போது  "இவங்களையெல்லாம் சமாளிக்க முடியாது .கொழந்த பிறக்குறதுக்கு முன்னால பேசியே என்னைய கொன்னுருவாங்க ,வேண்டாம் மேடம் ,நான் அபார்ஷனே  பண்ணிக்குறேன் ." 


பின்குறிப்பு  (7.12.2013  )-இந்த பெண் இப்போது இந்த குழந்தையை பெற்று கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார் :)



11 comments:

Seeni said...

enna kodumainga...

Avargal Unmaigal said...

ஜனங்க இன்னும் மாறவில்லை போலிருக்கு

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஐயோ...உயிர்கொண்ட அந்த பிஞ்சு இதயம்...??

திண்டுக்கல் தனபாலன் said...

அடப்பாவமே...

எம்.ரிஷான் ஷெரீப் said...

:-(

பூங்குழலி said...

இன்னமும் நிஜம் பல இடங்களில் இதுதான் . ஒரு பெண்ணின் வாழ்வில் எல்லா நிகழ்வுகளும் பிறராலேயே தீர்மானிக்கப்படுகின்றன .

கவியாழி said...

மனிதாபிமானம் மட்டுமல்ல நல்ல மனமும் வேண்டும்

Unknown said...

Kodumai

பூங்குழலி said...

மிக்க நன்றி தனபாலன் ..உங்கள் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும்

Unknown said...



காலம் இன்னும் முழு மாற்றம் அடையவில்லை!

இராஜராஜேஸ்வரி said...

காலம் நல்ல விதமாக மாறட்டும்..!

வலைச்சர அறிகுகத்திற்கு வாழ்த்துகள்..!

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html