Saturday 18 October 2014

ஒரு சொல் கேளீரோ !

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு நேற்று ஒரு டாக்ஸ்சியில் போய்க் கொண்டிருந்தேன் .எனக்கும் அந்த ஓட்டுனருக்கும் நடந்த உரையாடல் இது .

ஓட்டுனர் -என்ன மேடம் நாளைக்காவது அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்குமா ?
நான் - தெரியலையே ?ரொம்ப கஷ்டம்ன்னு சொல்றாங்க .

ஓட்டுனர் -இவ்வளவு முக்கியமான ஆள உள்ளேயே வச்சிருக்க முடியுமா மேடம் ?
நான் - கேஸ் தோத்து போச்சு ,என்ன செய்ய !

ஓட்டுனர்-அது என்ன பெரிய கேஸ் ?ஊர்ல நடக்காததா ?
நான்  - அந்த தடவ இவங்க ஆடுன ஆட்டம் தெரிஞ்சது தான ?

ஓட்டுனர்-என்ன மேடம் அப்படி சொல்றீங்க ?ஒரு முதலமைச்சரா ஆவரவங்க ஒரு அறுபது  கோடி  சம்பாதிக்க மாட்டாங்க ?
நான் - சம்பளம் தான்  கொடுக்கறாங்க இல்ல ?


ஓட்டுனர் -அப்படி  சொல்லாதீங்க மேடம் .வெறும் அறுவது கோடியும் நகையும் தான் .இந்தம்மா முதலமைச்சர் .ஒரு  காசு கூடவா சம்பாதிக்காம இருக்க முடியும் .அதுக்கெல்லாமா கணக்கு வச்சிருப்பாங்க ?அத போய் இந்த கோர்ட் கேக்கலாமா சொல்லுங்க ?அப்புறம் நகை அவ்வளவு இருந்துது இவ்வளவு இருந்துதுன்னுட்டு  .என் பொண்டாட்டி கிட்டயே கிட்டத்தட்ட இருபது பவுன் இருக்கு .நம்மூர்ல எல்லா வீட்லேயுமே  பத்து இருபது பவுன் நகை இருக்கு.அந்தம்மா ,நடிச்சிருக்காங்க ,அரசியல்ல இவ்வளவு வருஷம் இருந்திருக்காங்க , அவங்க கிட்ட இவ்வளவு நகை கூடவா இருக்காது ?அதையெல்லாமா தப்புன்னு சொல்ல முடியும் ?


இந்த பிஜேபிகாரங்க   வேணுன்ட்டே  இந்த மேயர் தேர்தல் பிரச்சனைய மனசுல வச்சுக்கிட்டு இப்படி செஞ்சுட்டாங்க மேடம்.இந்தம்மாவும் கொஞ்சம் விட்டு கொடுத்து போகணும் .


பாவமா இருக்கு .நாளைக்காவது   வெளிய விட்டுறணும் .
 அம்மா வரலைன்னா நாமெல்லாம்  என்ன ஆகுறது ?

அந்தம்மா  ஜெயில இருக்கறது ,ஏதோ நம்ம வீட்ல  ஒரு ஆள்  கொறையர மாதிரி இருக்கு மேடம் .


4 comments:

Seeni said...

அது சரி..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சரியாகத்தான் சொல்லியுள்ளான்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பூங்குழலி said...

ஆமாம் சரிதான் போலும் சீனி

பூங்குழலி said...

அவரவர் விளக்கங்கள் அவரவருக்கு சரி ரூபன்