Friday 5 June 2015

என் ஒற்றை வரி ..

என்றோ தவற  விட்டேன்
கவிதை வரி ஒன்றை
ஒற்றை வரி தொட்டு
வழிந்தோடிய  கவிதையையும்

ஏதோ ஒரு நாளில்
மின்னல் போல் தோன்றி
காணாமலும் போனது
மின்னல் போலவே

எங்கோ கிடக்கத்தான் செய்யும்
என அலட்சியம் செய்ததில்
எங்கில்லாமலும்  போனது
இல்லை எங்கோ போனது

கவிதைக்கென மன்றாடியதில்
அவ்வரி வேண்டுமென
அடம்பிடிக்கிறது
பேனா

எவ்வரியோ வேண்டாம் 
அவ்வரிக்கான கவிதை
பொதிந்திருக்கிறது
மையுள் என

வேறொருவர் கவிதையில்
சேர்ந்திருக்கும் என்கிறேன்
கவிதை இங்கிருக்க
அங்ஙனம் சேராதெனவும் 

காத்திருக்கிறோம்
நானும் என் பேனாவும்
எழுதி வைத்த கவிதையில்
அந்த ஒற்றை வரி பொருத்த




4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

ஒற்றை வரிதான் மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பூங்குழலி said...

நன்றி ரூபன்

வெட்டிப்பேச்சு said...

"கவிதைக்கென மன்றாடியதில்
அவ்வரி வேண்டுமென
அடம்பிடிக்கிறது
பேனா"

அழகான கற்பனை.

God Bless YOU

பூங்குழலி said...

நன்றி.உங்கள் பாராட்டுக்கும் .ஆசிகளுக்கும்