Saturday 7 May 2016

என் கவிதை




எங்கோ இருக்கத்தான் வேண்டும்
எனக்கான கவிதை ஒன்று
மான் எனவும்
மயில் எனவும்
குயில் எனவும்
பாவித்த சொற்கள் ஏந்தி

நிலா எனவும்
நதி எனவும்
ஜோடனைகள் பூசியதாய்
இருக்கத்தான் வேண்டும்
எனக்கான கவிதை
எங்கேனும்

என்றென்றும்
எப்பொழுதும்
தினம் தினம்
என காலங்கள் தொடுத்ததாய்
நிச்சயம் இருக்கும்
எனக்கான கவிதை

காத்திருக்கிறேன்
என்றேனும் ஒரு நாளில்
என்னிடம் வரும் என
அந்நாளில் எக்காளமாய்
சராசரிகள் நானல்ல என்றுவிட்டு
மீண்டும் காத்திருப்பேன்
என்  கவிதைக்கென  


5 comments:

sury siva said...

காத்திருப்பேன்
என் கவிதைக்கென ...//

அழகு.
காத்திருப்பதற்கும் ஒரு பொருள் இருக்கவேண்டும் அல்லவா ?

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

பூங்குழலி said...

ஆமாம் தானே ..என்ன சுவை இருக்கும் எதிர்பார்க்க ஏதும் இல்லாவிடின்..நன்றி

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கவிதை

கவிதை வந்தபின் அதில்
இலயித்த விதமாய் முடித்திருக்கலோமோ
எனப் பட்டது

வாழ்த்துக்களுடன்..

பூங்குழலி said...

அப்ப அது சராசரி தானே ..அதான் ...தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி

சாய்ரோஸ் said...

வாவ்... வித்தியாசமான கோணம்... இப்படியொரு கோணத்திலான சிந்தனையை இதுவரை நான் எங்கும் படித்ததாய் நினைவிலில்லை. படிக்கும்போதே புதுமையாய் ரசிக்க வைத்தது...
எகத்தாளங்களுக்கு மத்தியில் வாழும் ஒரு மனது தனக்கான கவிதையும் நிச்சயம் எங்காவது இருக்கும் என்று நம்பிக்கை கொள்வது மிக யதார்த்தமான ஆனால் யாரும் யோசித்திராத வித்தியாசமான சிந்தனை...
செம...