Tuesday 30 August 2016

மீண்டும்

                                                  Image result for watching rain  paintings


ஏதோ ஒரு நாளின் காதல்
சற்றே  பூவின் வாசம்
எதற்கோ வந்த கோபம்
காரணமில்லா புன்னகை
தேநீர் குவளையின் சூடு
நனையும் மண்ணின் வாசம்
எல்லாம்  தேடி வந்து
என் வாசலில் கொட்டித்தீர்த்தது
மழை
மழை போன பின்னும்
அவை வழிந்து கொண்டே இருக்கின்றன
ஜன்னல் கம்பிகளிலும்
தாழ்வாரத்திலும்
என் விரலிடுக்குகளிலும்
இன்னும் பிறவிலும்


4 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கவிதை
தேநீர் கோப்பையின் இளஞ்சூடு
இப்போது எங்களுக்குள்ளும்...
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

மிக்க நன்றி ரமணி அவர்களே

Yarlpavanan said...

அருமையான வரிகள்
தொடருங்கள்

பூங்குழலி said...

உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி