இணையத்துல நம்ம மேல எறியப்படுற பல பேட்டிகள்ல நேத்து ரொம்ப ரசிச்சது திருமதி சுஜாதா ரங்கராஜன் அதாவது எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி அவள் விகடனுக்கு கொடுத்த பேட்டி .எதுக்குமே பெருசா யோசிக்காம அசால்ட்டா பதில் சொன்னாங்க .
வெளில நாம பாக்கறதுக்கு பெர்சனல் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்ங்கிறது நாம எதிர்பார்த்த ஒண்ணு தான் .ஆனாலும் சுஜாதா விஷயத்துல நிறைய .மனிதர் வீட்லேயே strangerஆ தான் இருந்திருக்கார் .
கல்யாணம் ஆகி அவரோட குடித்தனம் போன டைம் கேப்ல அவர் முகமே மறந்து போச்சுன்னும் ஸ்டேஷனுக்கு வந்த அவர அடையாளம் தெரியலைனும் யதார்த்தமா சொன்னாங்க .Laapataa ladies மாதிரி ....
இவங்களோட அம்மா அப்பாவ Mr and Mrs னு பேர் சொல்லித்தான் அழைப்பார்னு சொன்னாங்க .என்னடா இதுனு நாம யோசிச்சா அது ஏன்னு தனக்கு தெரியாதுனும் சொன்னாங்க .ஏன்னு கேக்கவே இல்லை போல !
ஒரு நாளிலேயே நாலு அல்ல அஞ்சு வார்த்தை தான் பேசிப்பாங்களாம்.எல்லாத்துக்குமே அந்த காலத்துல அப்டித்தான்னு ஒரு பதில் வச்சிருந்தாங்க .முக்கியமா அவர் இறந்தப்ப அவரோட finances பத்தி எதுவுமே அவர் சொல்லாம போய்ட்டார்ங்கறது ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது .எல்லாத்திலேயும் அப்டேட்டடா இருந்த சுஜாதா !
பிள்ளைகள் படிப்பு விஷயம் கூட தெரியாதாம் .அது நிறைய இடங்கள்ல சகஜம் தான் .சுஜாதா ஒரு குழந்தை பாத்திரம் குறித்து சொல்லிருப்பார் ."நான் பாக்காமலேயே அடக்கம் செய்யப்பட்ட என் குழந்தையின் நினைவாக அது தன்னை அறியாமல் நடந்திருக்கலாம் போல"னு ...
ஆனா அவர் நல்ல மகனா, தன்னோட அம்மா அப்பாவை நல்லா பாத்துக்கிட்டார் போல .
நிறைய பிரபலங்களோட இணையர் அவங்கள பத்தி பொதுவில் பேசும் போது ரொம்பவே உயர்வு நவிற்சியிலேயே பேசுவாங்க .அதுக்கு மாறா இவங்க ரொம்ப இயல்பா பேசினாங்க .
போன்ல ,
"சுஜாதா இருக்காரானு கேட்டா என்ன சொல்வீங்க ?"
"வெளிய போயிருக்கார்னு சொல்வேன் ."
"நீங்க யாருன்னு கேட்டா என்ன சொல்வீங்க ?"
"மிஸஸ் -ரங்கராஜன்னு சொல்வேன் "😍
2 comments:
❤️
thank you
Post a Comment