
நடந்து கொண்டிருக்கிறேன்
முன்னர் பலரும் நடந்த பாதை தான்
காலில் தட்டியது சின்னதாய் நூல்
தூர எறிந்திருக்கலாம் தாண்டியேனும் குதித்திருக்கலாம்
ஏதும் நினையாமல் கையில் எடுத்து விட்டு
ஏந்தியபடியே நடக்கிறேன்
நடந்துகொண்டே இருக்கிறேன்
இன்னும் சில நூல்கள் என் கையில் இப்போது
போய்க் கொண்டே இருக்கிறேன்
கண்மறைக்கும் வரையிலும்
புலனாகவில்லை
நூலுக்குள் இப்போது நான் சிறைப்பட்டிருக்கிறேன்
பட்டாம்பூச்சியாவதா ,சமாதியாவதா ?
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நுனி இன்னமும் என் கையில்
முன்னர் பலரும் நடந்த பாதை தான்
காலில் தட்டியது சின்னதாய் நூல்
தூர எறிந்திருக்கலாம் தாண்டியேனும் குதித்திருக்கலாம்
ஏதும் நினையாமல் கையில் எடுத்து விட்டு
ஏந்தியபடியே நடக்கிறேன்
நடந்துகொண்டே இருக்கிறேன்
இன்னும் சில நூல்கள் என் கையில் இப்போது
போய்க் கொண்டே இருக்கிறேன்
கண்மறைக்கும் வரையிலும்
புலனாகவில்லை
நூலுக்குள் இப்போது நான் சிறைப்பட்டிருக்கிறேன்
பட்டாம்பூச்சியாவதா ,சமாதியாவதா ?
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நுனி இன்னமும் என் கையில்