

என் சிறு வயதில் கோடை விடுமுறையில் திருநெல்வேலியிலிருந்த என் தாத்தா வீட்டிலிருந்து ஆலடிப் பட்டிக்கு நான் வருவது வழக்கம் .ஒரே ஒரு விடுமுறை காலத்தில் இரவு முழுவதும் பல பேர் சேர்ந்து உட்கார்ந்து பருத்தி காய்களிருந்து பருத்தியை பிரித்து எடுத்தது நினைவிருக்கிறது .
ஆலடிப் பட்டியை நினைத்த உடன் என் நினைவுக்கு வருபவை என் பாட்டி வீடு,பாட்டியின் அஞ்சறைப் பெட்டி ,பாட்டியின் தோட்டம் ,அதிலிருக்கும் தாத்தாவின் கல்லறை (மே ஆறாம் தேதி என் தாத்தாவின் நினைவு நாள் ) ,பாட்டி வீட்டு மச்சிக்கு செல்லும் மர ஏணி மற்றும் திருநெல்வேலியில் இல்லாத இங்கு இருந்த கழிப்பறை .
இந்த ஊரைப் பொருத்த வரை கிட்டத் தட்ட எல்லா வீடுகளும் ஒரே அமைப்பில் இருக்கும் .