Wednesday 20 August 2008

என் முகம் ?


பிறந்த பொழுதில் இருந்தது
என் முகம்
எனதே எனதாக .


பார்த்துப் போனோரும் பார்க்க வந்தோரும்
அவருக்கு பிடித்தமான சாயங்களை பூசிப் போக
மறு நொடியே மாறிப் போனது ...


வர்ணங்கள் பல தாங்கியும் புதிதாக பூசிக் கொண்டும்
பிறரின் நிறங்களை வியந்தபடி
வலம் வருகிறேன் நான்



பல பொழுதுகளில்
சில வண்ணங்கள் களைந்தும் சில ஏற்றியும்
ஒப்பனை செய்வதும் எளிதாகிறது



வண்ணங்களை கழுவி விட்டால்
தெரியும் நிஜ முகம்
எனக்கே அன்னியம் தான்


நிஜமுகம் தோண்டும் போதெல்லாம்
வர்ணங்களை நீக்குவதன்
களைப்பே மேலிடுகிறது


இருந்தாலும் தேடத்தான் வேண்டும் நான்-
சவப்பெட்டியில் தெரிவவாவது
என் முகமாக இருக்க வேண்டும் எனில் ..






3 comments:

அறிவில்லாதவன் said...

Arithaaram endra peyaril naan en kallori naatkalil ezhuthiya kavithai-yai enakku neengal ninaivuku konduvanthirgal.

En kavithaiyai kaatilum enakku ithu arumaiyaga pattathu.

M.Rishan Shareef said...

அருமையான கவிதை.
சகோதரி பூங்குழலிக்கு கவிஞையாகவும் ஒருமுகம்.
வாழ்த்துக்கள் சகோதரி.
தொடர்ந்து எழுதுங்கள் :)

su.sivaa said...

நல்ல கவிதை. தொடருங்கள் வாழ்த்துக்கள்