Tuesday 16 June 2009

அதே 32 கேள்விகள்

இந்த 32 கேள்விகள் சங்கிலியில் என்னையும் இணைத்துவிட்ட சகோதரர் ரிஷானுக்கு நன்றி


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
இந்த பெயர் என் அப்பாவின் நீண்ட நாள் கனவு .என் அம்மா எனக்கு பத்ரா என்றும் என் பாட்டி எனக்கு லிங்கேஸ்வரி என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம் .ஆனால் சொல்ல இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாக தெரியவில்லை .என் பெயரின் அழகை நான் சிறு வயதில் உணரவில்லை (ஸ்டைலாக இல்லை என்று வருந்தியிருக்கிறேன் ).உணர்ந்ததிலிருந்து பிடித்துப் போனது .

பெயர்க்காரணம் இங்கே :
http://poongulali.blogspot.com/2008/08/blog-post.html

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பொசுக்கென்று நான் அழுவதாக சொல்வார்கள் ...அழுது ஒரு நாள் ஆகிவிட்டது .

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
சிறு வயதில் என் கையெழுத்தைக் கண்டு என் பெரியப்பா ஆனந்த கண்ணீர் சிந்தியிருக்கிறார் ."டாக்டர் கையெழுத்து மாதிரி இல்லாம தெளிவா இருக்கு" என்று பாராட்டு பெறுகிறது என் கையெழுத்து .பிடிக்கும் எனக்கு


4. பிடித்த மதிய உணவு என்ன?
அம்மா வைக்கும் மீன் குழம்பு


5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
பார்த்தவுடன் சிரித்து வைப்பேன் .ஆனால் நட்பாக அவகாசம் தேவைப்படுகிறது .


6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
திருச்செந்தூர் கடலில் ஒரு தடவை குளித்து திக்கு முக்காடிப் போனேன் .அதிலிருந்து கடல் குளியல் என்றாலே வெறுப்பு தான் ."குத்தால அருவியிலே குளிச்சது போலிருக்குதா ?"அருவி குளியல் அதுவும் குற்றாலக் குளியல் போல சுகம் வேறு இல்லை .

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
உடல் மொழியை


8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?
பிடித்தது -பலரிடமும் அன்பாக பழக முடிவது
பிடிக்காதது -சோம்பல்

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

பிடித்தது -கடின உழைப்பு
பிடிக்காதது -முன்கோபம்


10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
எப்போதும் அம்மா மடியிலேயே இருக்க முடியாததற்கு வருந்துகிறேன்


11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
பச்சை நிற சுரிதார்


12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
என் அறையில் ஏ .சி யின் சத்தத்தை மட்டும்


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
வெளிர் நீலம்


14. பிடித்த மணம்?
மல்லிகை


15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
சாந்தி -http://punnagaithesam.blogspot.com/
இணையத்தில் அறிமுகமாகி நல்ல தோழியாகிப் போனவர் .எனக்கு சொந்தமாகவும் இருக்கக் கூடும் .எல்லோரிடத்தும் நல்லதையே காண்பவர் .
செல்லமாக "தலைவி "


துரை -கவிதைகள் http://duraikavithaikal.blogspot.com/
நாட்டு நடப்புகளை கவிதையில் அள்ளி வருபவர் .கடைசியில் டிவிஸ்ட்டோடு முடியும் இவர் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும் எனக்கு .



16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு
கவிதைகள் .உணர்வுகளை வார்த்தைகளாக சொல்வது சுலபமில்லை .ஆனால் இவர் கவிதைகளில் உணர்வுகள் வார்த்தைகளுள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றன .நான் முதலில் படித்த இவரின் கவிதை "எலும்பு கூட்டு ராஜ்ஜியங்கள் ".அன்றிலிருந்து இந்தக் கவிஞரின் ரசிகையாகிப் போனேன் .

17. பிடித்த விளையாட்டு?
குறுக்கெழுத்து ,பிஞ்சிங் த நோஸ்

18. கண்ணாடி அணிபவரா?
வருத்தத்துடன் சிறிது காலமாக .


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மனதை அதிகம் சிரமப்படுத்தாத படங்கள் ....
மிகவும் பிடித்த படம் "எங்க வீட்டுப் பிள்ளை "


20. கடைசியாகப் பார்த்த படம்?
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் ......காசை தெண்டம் பண்ணிட்டோமே என்ற வேதனையுடன்


21. பிடித்த பருவகாலம் எது?
மழைக்காலம்


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
எப்போதுமே திரும்பத் திரும்பப் படிப்பது பிரேமா பிரசுரத்தின் "விக்கிரமாதித்தன் கதைகள் "


23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
வேறு நல்ல படம் கிடைக்கும் போது


24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - தண்ணீர் விழும் சத்தம்
பிடிக்காத சத்தம்- அதிகமாக இருக்கும் எந்த சத்தமும்


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
அமெரிக்கா,மனம் என்னமோ வீட்டை தான் சுற்றி வந்தது


26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
கொஞ்சம் எழுத்து ,கொஞ்சம் மேடைப் பேச்சு


27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
நேரத்திற்கேற்ப ஒரு பொய் பேசுவது

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
நிறைய குட்டிச் சாத்தான்கள் இருக்கின்றன ,குறிப்பாக
தூங்கிக் கொண்டே இரு என்று சொல்லும் சாத்தான்

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
கொடைக்கானல்

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
சீ இவளா ,என்று எவரும் சொல்லாமல்

31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
தொலைக்காட்சி பார்ப்பது


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
ஒரு இனிய பயணம்


13 comments:

லொல்லு சபா said...

//உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
கொடைக்கானல்//

நம்ம் நெல்லை மாவட்டத்துலயே குற்றாலம், பாபநாசம்னு நிறைய அழகான சுற்றுலா தளம் இருக்கு. அதுல எதுனா சொல்லியிருப்பீங்கன்னு நினைச்சேன். ஓ.கே.! அருவி விஷயத்திலாவது குற்றதலத்தை நினைவு படுத்தீனீர்களே...! நன்றி!.

ஆயில்யன் said...

//கடைசியாக அழுதது எப்பொழுது?

பொசுக்கென்று நான் அழுவதாக சொல்வார்கள் ...அழுது ஒரு நாள் ஆகிவிட்டது ///

டாக்டரக்கா பொசுக்கென்று இருக்காது!
பொசுக்கு பொசுக்குன்னு அழுவீங்கன்னு பெருமையா சொல்லியிருப்பாங்க போல! :)

ஆயில்யன் said...

//டாக்டர் கையெழுத்து மாதிரி இல்லாம தெளிவா இருக்கு" என்று பாராட்டு பெறுகிறது//

வாவ்!
இதுக்கு ஏகப்பட்ட பாரட்டுக்கள் கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன் :))

ஆயில்யன் said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

// என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
என் அறையில் ஏ .சி யின் சத்தத்தை மட்டும்//

எனக்கும் அந்த பாட்டு ரொம்ப்ப்ப புடிக்கும்! வேற வழியே கிடையாது கேட்டேஏஏஏஏஏஎ ஆகணும்! :(

ஆயில்யன் said...

//உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
வேறு நல்ல படம் கிடைக்கும் போது///

இதைத்தான் நானும் சொன்னேன் என்னமோ பெருசா குத்தம் பண்ணிட்ட மாதிரி ஆச்சி சிரிச்சுட்டாங்க :(

ஆயில்யன் said...

//கொஞ்சம் எழுத்து ,கொஞ்சம் மேடைப் பேச்சு//

வெரிகுட்!
வெரிகுட்!!

பூங்குழலி said...

நன்றி லொல்லு சபா

பூங்குழலி said...

முழு பதிவையும் வாசித்ததுக்கு நன்றி ஆயில்யன்

அக்க்ஷரா அம்மா?
அந்த படத்தில் இருக்கிறது என்னோட அம்மா அப்பா .அக்க்ஷரா என் தம்பி பொண்ணு ,எங்க வீட்டு குட்டி இளவரசி

இதைத்தான் நானும் சொன்னேன் என்னமோ பெருசா குத்தம் பண்ணிட்ட மாதிரி ஆச்சி சிரிச்சுட்டாங்க :(
உண்மையை சொன்னா அப்படிதான்

ஆயில்யன் said...

//பூங்குழலி said...

இதைத்தான் நானும் சொன்னேன் என்னமோ பெருசா குத்தம் பண்ணிட்ட மாதிரி ஆச்சி சிரிச்சுட்டாங்க :(
உண்மையை சொன்னா அப்படிதான்//


அப்ப இனி ஆச்சிக்கிட்ட பொய் சொல்ல போறேன் :)))

duraian said...

அருமையான பதில்கள் அக்கா
(எனக்கு இப்பவே உதறல் ஆரம்பிச்சாச்சு !)

ஒளியவன் said...

அருமையான பதில்கள் அக்கா. நீங்கள் ஒரு நல்ல வாசகி என்பது மட்டுமே தெரிந்த எனக்கு, உங்களைப் பற்றி பல கருத்துகளைத் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

பூங்குழலி said...

நன்றி பாஸ்கர் ,துரை