போன வாரம் இவர் மனைவி வந்திருந்தார் .தன் மாமியார், கணவரின் மரணத்திற்கு இவரைக் காரணம் காட்டியதால் தன் அம்மா வீட்டோடு இருந்து பணிக்கு சென்று கொண்டிருக்கிறார் .போன மாதம் தன் கணவரின் நினைவு நாளுக்கு ஊருக்கு சென்றதாகக் கூறினார் .அவரின் அம்மா ,அப்பா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்ட போது ,"அம்மா ,அம்மா ன்னு உயிரா இருந்திட்டு இவர் போய்ச் சேர்ந்துட்டார் .அவங்க இவரு போன பிறகே கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தாங்க .இப்ப முழுசா மன நோயாளி மாதிரி ஆயிட்டாங்க .அவன் சாகல ,எதுக்கு தெவசம் பண்றீங்க ன்னு கேக்குறாங்க .நீ ஏன் தாலி போட்டுக்கல ன்னு என்னயக் கேக்குறாங்க .அங்க ஒரு டாக்டர் மருந்து கொடுத்திருக்கார் .அதெல்லாம் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றாங்க .இவரு கடைசியில என்னையும் என் பிள்ளைங்களையும் தவிக்க வச்சதும் இல்லாம ,அவங்க அம்மாவையும் பைத்தியமாக்கிட்டு போயிட்டாரு ,"என்றார் அழுதபடி .
Friday, 11 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment