Tuesday 13 October 2009

அத்தை சொன்ன கதை-3

"எங்கண்ணே படிச்சிட்டு லேட்டா தான் வந்து படுப்பான் .அரிக்கன் லைட்டுக்கு கீழ பேப்பர் சுத்தி வச்சிருப்பான் .வெளிச்சம் வெளிய தெரியக் கூடாதுன்னு .படுக்கும் போதும் லைட்ட அமத்தி போட்டுட்டு வர மாட்டான் .தீய கொஞ்சமா ரொம்ப வெளிச்சம் வராம கொறச்சி வச்சிட்டு வந்து படுப்பான் .படுத்துக்கிட்டு பாடத்த சொல்லிக்கிட்டே இருப்பான் .முணுமுணுன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும் .வாய மூடிட்டு படுல ன்னு சொன்னாலும் கேக்க மாட்டான் .


ஏதாவது மறந்து போச்சின்னா ஒடனே எந்திரிச்சி போவான் .வெளக்க கொஞ்சம் கூட்டி வைப்பான் .திருப்பி படிப்பான் .மறுபடியும் வெளக்க கொறச்சி வச்சிட்டு வந்து படுத்துக்குவான் .திரும்பியும் மொதலெருந்து சொல்லி பாப்பான் முணுமுணுன்னு .மறந்து போச்சுன்னா திருப்பி போவான் .மறுபடியும் வெளக்க ஏத்தி வச்சி படிப்பான் .படுத்துகிட்டு சொல்லி பாப்பான் .இப்படி செஞ்சுகிட்டே இருப்பான் .மறக்காம சொல்லி பாத்த பெறகு தான் போயி வெளக்க அமத்தி போட்டுட்டு தூங்க வருவான் ."

இதிலிருந்து நான் அறிந்து கொண்டவை
1.என் அப்பா வெகு சிறப்பாக படித்ததாக சொல்வார்கள் .அதன் காரணத்தை தெரிந்து கொண்டேன்.
2.என் அத்தையின் பேரன் என் அப்பாவை அதிகம் பார்த்திராவிட்டாலும் ,நல்ல மதிப்பெண் வாங்கிய போதெல்லாம் என் அப்பாவிற்கு தொலைபேசியில் தெரிவித்து ,ஏதாவது பரிசு வாங்கிக் கொள்வான் .ஏன் என்று யோசித்திருக்கிறேன் .இப்போது தெரிந்தது .
3.இதை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது என் மகனிடம் சொன்னேன் ,"பாத்தியா ,ராஜம்மா பாட்டி சொன்னாங்கல்ல ,தாத்தா எப்படி படிச்சிருக்காங்கன்னு !"உடனே என் மகன் சொன்னான் ,"ஆமாம்மா ,படிச்சு முடிக்கிற வரைக்கும் தாத்தா லைட்ட ஆப் பண்ண மாட்டாங்க ,இந்த ஒரு லைன்ன அந்த பாட்டி எப்படி கத மாதிரி சொன்னாங்க !சூப்பரா இருந்திச்சி "


No comments: