ஒரு முறை இவர் மனைவியின் தம்பியும் உடன் வந்திருந்தார் .வீட்டுல பேசுங்க என்று இவர் சொன்ன உடனே ,அவர் சொன்னார் ,"நா தான் வந்திருக்கேன்ல ,நா சொல்லிக்கிறேன் அவ கிட்ட ."இவர் ,"இல்ல அவளே பேசிரட்டும் என்று இருவரும் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர் . நான் "பரவாயில்லை நான் பேசிடறேன் ,"என்று இந்த பிரச்சனையை முடித்து வைத்தேன் .இவர் மச்சினர் சொன்னார் ,"எங்கக்கா ,சாட்டையை அங்கிருந்தே சுத்தி எங்க எல்லாத்தையும் ஆட்டி வைக்கிறா ."
பாவம் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த நோயை வைத்திருக்கும் கணவரின் நிலையால் பரிதவிக்கும் அந்த பெண்ணின் நிலை சங்கடம் தான் .
No comments:
Post a Comment