இவர் ஒரு பள்ளி ஆசிரியர் .வயது நாற்பது .கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் .ஆனால் மருந்துகளை சரிவர சாப்பிடுவதில்லை .இதில் குடி பழக்கம் வேறு .எத்தனை முறை எப்படி எப்படியோ(அன்பாக ,மிரட்டி,.. ) எடுத்து சொல்லியும் பயனில்லை .ஒவ்வொரு முறையும் மிகவும் முடியாமல் போகும் போது இவரின் வயதான தந்தையும் சகோதரரும் இவரைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் .உடல்நலமான பின் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் சரியாக வருவார்.மறுபடியும் வேதாளமாக இவர் முருங்கை மரம் ஏற இவரின் வீட்டார் விக்கிரமாதித்தனைப் போல சளைக்காமல் பிடித்துக் கொண்டு வருவார்கள் .இப்படி பல முறை .
சில நாட்களுக்கு முன்னால் மீண்டும் வந்தார் ,பல மாதங்களுக்கு பின் .வழக்கம் போலவே பல தொந்தரவுகள் .
நான் :எப்படி இருக்கீங்க ?
அவர் :ரொம்ப முடியல
நான் :ஏன் வரல ?
அவர் :வர முடியல
நான் :ஒடம்பு இவ்வளவு மோசமாகற வரைக்குமா வராம இருக்கிறது
அவர் :அந்த கெழவன் காசு இல்லன்னுட்டான் .
நான் :வயசான காலத்துல அவர் எத்தன தடவ தான் உங்களுக்காக கஷ்டப்படுவாரு
அவர் :என்ன கஷ்டம் சின்ன மகன் தான் கொடுக்கிறான்ல
நான் :சரி ,மாத்திர சாப்பிட்டீங்களா ?
அவர் :அப்பப்ப சாப்பிட்டேன்
நான் :ஏன் ஒழுங்கா சாப்பிடல ?
அவர் :இந்த ஒரு தடவ காப்பாத்தி விட்டுருங்க இனிமே ஒழுங்கா சாப்பிடுறேன் .
நான் :ஒரொரு தடவையும் இப்படித்தான சொல்றீங்க .
அவர் :இந்த தடவ அப்படியில்ல ,நா ஒழுங்கா சாப்பிடாம வந்தா என்ன உங்க செருப்பால அடிங்க
இப்படியாகவே ஒவ்வொரு முறையும் எங்களின் உரையாடல் இருக்கும் .
இந்த முறையும் முடிந்தவற்றை செய்து அனுப்பியிருக்கிறோம் .
1 comment:
எடுக்காமல் இருப்பதை விட, எடுத்துவிட்டு பின் கொடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்...
அறிவுரையின் பேரில் தன் குற்றத்தைமறைக்க முயன்றாலும் அவளே வீரமானவள்...
Post a Comment