Thursday 11 February 2010

குழந்தைக்காக

புதிதாக சிகிச்சைக்கு வந்த பெண் .வந்தவுடன் சொன்னார் ,"போன வருடமும் அதற்கு முந்தின வருடமும் பரீட்சை செய்த போது எனக்கு எச்.ஐ.வி இல்லை ,இப்போது செய்த போது இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள் ."எதற்காக வருடா வருடம் பரீட்சை செய்து கொண்டீர்கள் என்று கேட்ட போது ,"அவருக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்பது மூன்று வருடங்களாக தெரியும் அதனால் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் என்று ."

உங்கள் கணவருக்கு இருப்பது தெரியும் என்றால் ஏன் நீங்கள் காண்டம் உபயோகிக்கவில்லை என்று கேட்டேன் .குழந்தை வேண்டும் என்பதற்காக என்றார் அழுதபடி .திருமணம் ஆகி பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கின்றன .குழந்தை இல்லை .குழந்தைக்கான முயற்சியில் ,விரும்பியோ கட்டாயத்தின் காரணமாகவோ ஈடுபட்டதில் எஞ்சியது எச்.ஐ.வி மட்டுமே .


6 comments:

துளசி கோபால் said...

:(

கண்ணகி said...

எங்கபோய் முட்டிக்கலாம்...இந்தம்மாவைப்பார்த்து...

சுந்தரா said...

பரிதாபம் :(

பூங்குழலி said...

இதில் இரண்டு விஷயங்கள் மனதை உறுத்துவன .
ஒன்று ,இப்படி ஒரு இக்கட்டிலும் குழந்தை பெற்றாக வேண்டும் என்ற சமூக நிர்பந்தங்கள் .இரண்டு ,உடன்பட மாட்டேன் என்று சொல்லக் கூட வழியில்லாத இந்த பெண்களின் நிலை .

Jerji said...

Story after story It was shocking. To know that there exists a world like this.
I kneel down and pray to my Lord. Lord relieve them of their pains.
Doctor your write up is very very classy. May be because it is flesh and blood.
Thank you
Jayaraj

பூங்குழலி said...

உங்கள் வருகைக்கு நன்றி ஜெர்ஜி.உங்கள் பிராத்தனைகள் நிறைவேறட்டும் .