Friday 11 June 2010

நம்பிக்கை

நேற்று வழக்கமான பரிசோதனைகளுக்காக ஒருவர் வந்தார் ,ஏகப்பட்ட இனிப்புகள் ,பழங்கள் +சந்தோஷத்துடன் .பல வருஷமாகவே சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் தான் .முதலில் வந்த போது மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார் .சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் நன்கு முன்னேறி இப்போது நன்றாக இருக்கிறார் .

"எனக்கு மொதல்ல எச்.ஐ.வி இருக்குன்னு சொன்னப்ப ,செத்துரலாம்ன்னு நெனச்சேன் .அப்புறம் ,அட்மிட் ஆகணும்ன்னு சொன்னப்ப ,அதுக்கெல்லாம் செலவாகுமே அது வீண் தானே ன்னு நெனைச்சேன் .நாம செத்தாவது போய்ட்டா இந்த செலவாவது மிச்சப்படுமே ன்னு கூட நெனச்சேன் .ஆனா இங்க வந்த பிறகு ,இங்க வேல பாக்குற எல்லாரும் தைரியம் சொன்னீங்க ,என்ன அன்பா நடத்துனீங்க.அதுக்கப்புறம் தான் உயிர் வாழணும்ன்னு நெனைப்பே வந்தது .அப்பக் கூட, என்னோட ரெண்டு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ற வரைக்கும் இருந்தா போதும்ன்னு நெனச்சேன்.போன மாசம் என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டேன் .அடுத்த மாசம் சின்ன பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் .இப்ப நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .அதுக்கு தான் ஒங்களுக்கு ஸ்வீட் ,எங்க ஊரு மாம்பழம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் ."


2 comments:

க.பாலாசி said...

நெகிழ்வைத் தருகிறது...

பூங்குழலி said...

ஆமாம் பாலாசி ,நெகிழ்வையும் மனநிறைவையும் தருவன இந்த நிகழ்வுகள்