போன மாதம் திடீரென்று தான் கணவரோடு வந்தார் .கேட்ட போது ,கணவருக்கு ஏதோ தொந்தரவு இருப்பதாகவும் ,அந்தப் பெண் இங்கே தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் சிபாரிசுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிந்தது ."இத்தனை நாள் ஒன்றுமே பார்க்கவில்லை ,இப்போது மட்டும் சிபாரிசுக்கு பொண்டாட்டி தேவையாகிறது ",என்று சொன்ன போது ,"எனக்கு அவளைப் பிடிக்கும் அவளுக்கும் என்னைப் பிடிக்கும் ",
என்றார் கணவர் .
இதெல்லாம் சரியான பிறகு மீண்டும் ஒருநாள் இருவரும் வந்தனர் .இப்போது "எனக்கு குழந்தை வேண்டும் "என்றார் அந்த பெண் .எதற்கு திடீரென்று இந்த ஆசை என்ற போது "என் அம்மா அப்பாவையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் .குழந்தை இருந்தால் ஆதரவாக இருக்கும் .என்னை எந்த விசேஷத்திற்கும் சேர்ப்பதில்லை .அதுவும் சரியாகும் ." "உனக்கென்று ஆதரவுக்கு எவருமே இல்லை .மருந்து வாங்கவும் பணம் இல்லை ,இந்த குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் ?","யாராவது பார்ப்பார்கள் .....?"
கணவரை அழைத்து பேசிய போது ,"ஆமாம் குழந்தை வேண்டும் என்று
சொல்கிறாள் ."குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் ?நீங்கள் பார்த்துக் கொள்வீர்களா ?""எனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கின்றன .என்னால் பார்க்க முடியாது .அவள் அம்மா அப்பாவை அழைத்துக் கேட்டுக் கொள்ளுங்கள் .பார்ப்பார்களா என்று ....."
No comments:
Post a Comment